Skip to main content

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் peel-off மாஸ்க்... இளமைத் தோற்றம் தருமா?

Doctor Vikatan:  சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் பீல்-ஆஃப்  (Peel-off) மாஸ்க்குகள் உண்மையில் பயனுள்ளவையா... அவற்றை இரவு முழுவதும் முகத்திலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதா... மேலும், அவை 'கிளாஸ் ஸ்கின்' (glass skin) மற்றும் இளமையான தோற்றத்தைத் தரும் என்பதும் உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

பீல்-ஆஃப் (Peel-off) மாஸ்க் பயன்படுத்தும்போது, தற்காலிகமாக நல்ல பலனைத் தருவது போலத் தோன்றலாம். ஆனால், உரித்து எடுக்கும் தன்மை கொண்ட அத்தகைய மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தினாலோ அல்லது இரவு முழுவதும் முகத்தில் அப்படியே வைத்திருந்தாலோ அது உங்கள் சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை (skin barrier) சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. 

இளமையான தோற்றத்தைப் பெற பீல் ஆஃப் மாஸ்க்குக்கு (Peel-off masks) பதில், தரமான 'ஓவர்நைட் ஸ்லீப்பிங் மாஸ்க்குகளை' (sleeping masks) தேர்ந்தெடுங்கள். கூடவே, சருமம் வறண்டு போகாமல் போதுமான நீர்ச்சத்துடன் (hydration) வைத்திருப்பது, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் ஸ்கிரின் உபயோகிப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுடையது சென்சிட்டிவ் சருமமாக  (sensitive skin) இருந்தாலோ, ரோசாசியா (rosacea), எக்ஸீமா (eczema), முகப்பரு பிரச்னைகள் இருந்தாலோ, பீல்-ஆஃப் மாஸ்க்குகளைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது.

சருமம் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க, முறையான சருமப் பராமரிப்பு வழிகளைப் பின்பற்றுங்கள். முகத்தை கிளென்ஸ் செய்வது, வாரம் ஒருமுறை, இறந்த செல்களை அகற்றும் எக்ஸ்ஃபோலியேஷன் சிகிச்சை, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் சீரம் உபயோகிப்பது,  சருமத்தின் பாதுகாப்பு லேயர்களை சரிசெய்யும் செராமைடு உபயோகிப்பது போன்றவை முக்கியம்.

கிளாஸ் ஸ்கின்...

கிளாஸ் ஸ்கின் (Glass skin) என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், மேற்குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றினால் ஆரோக்கியமான சருமம் (healthy skin)  நிச்சயம் கிடைக்கும்.

இரவு நேரத்தில் பீல்ஆஃப் அல்லாத (non-peel), ஜெல் அல்லது க்ரீம் வடிவிலான ஸ்லீப்பிங் மாஸ்க்  பயன்படுத்தவும். குறிப்பாக ஹைலுரானிக் அமிலம் (hyaluronic acid), கிளிசரின் (glycerin), செராமைடுகள் (ceramides) மற்றும் நியாசினமைடு (niacinamide) கலந்த மாஸ்க்  சிறந்தது.

புருவங்கள், கண் இமைப் பகுதி, முகப்பரு உள்ள இடங்கள், வெயிலினால் சிவந்த இடங்களில் எல்லாம் பீல்-ஆஃப் (peel-off) மாஸ்க்  பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். எந்தவொரு புதிய மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்பும், அதை உங்கள் முன்கையின் உட்பகுதியிலோ அல்லது காதுக்கு பின்னாலோ தடவி 'பேட்ச் டெஸ்ட்' (patch test) செய்து பார்த்து, எந்த அலர்ஜியும் இல்லாததை உறுதிசெய்த பிறகே பயன்படுத்தவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...