Skip to main content

Music Therapy: இசையே மருந்து; மியூசிக் தெரபி யாருக்கெல்லாம் நன்மை செய்யும்?

ல வடிவங்களில், பல மொழிகளில் நம்மை ஈர்க்கும் ஒரு விஷயமாக மாறியிருக்கிறது இசை. இன்றைய நவீன யுகத்தில், நோய்கள் பல தீர்க்கும் ஒரு சிகிச்சை முறையாகவும் இசை விளங்குகிறது. `மியூசிக் தெரபி’ எனப்படும் அந்தச் சிகிச்சையில், இசையே மருந்து. கேட்கும்போதே நம்மை ஈர்க்கும் இந்தச் சிகிச்சை முறை பற்றி சொல்கிறார் மனநல மருத்துவர் சங்கீதா.

Music Therapy
Music Therapy

இன்றைய மருத்துவ உலகில், நோயாளிகளுக்குத் தரப்படும் மருந்து மாத்திரைகளுக்கு மாற்றாக மெல்லிய, நல்ல இசையை வழங்கி சிகிச்சை அளிக்கிறது மியூசிக் தெரபி. உளவியல் அடிப்படையில் ஒருவரை அவரது நோயின் ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதே இந்தச் சிகிச்சையின் சிறப்பு. மியூசிக் தெரபியை உளவியல் மற்றும் இசை குறித்த விஷயங்களில் வல்லுநராக இருக்கும் ஒருவராலேயே செய்ய முடியும்.

உளவியல் மற்றும் உடல்ரீதியாகப் பாதிக்கப்படுவோருக்கு மியூசிக் தெரபி தரப்படுகிறது. ஓ.சி.டி (Obsessive compulsive disorder (OCD) எனப்படும் மன சுழற்சி நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எண்ணங்களில் இருந்து விடுபடவும், அவர்களது எண்ண ஓட்டத்தைத் திசை திருப்பவும் `மியூசிக் தெரபி’ அளிக்கப்படுகிறது. குழந்தையின் வளர்ச்சிக்காக, கர்ப்பிணிகளுக்கும் ஆட்டிசம், ஏ.டி.ஹெச்.டி. (ADHD) போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கும் மியூசிக் தெரபி தரப்படும். இதனால் அவர்களது சில நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும். தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வால் ஏற்படும் டிமென்ஷியா போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும் `மியூசிக் தெரபி’ தரப்படுகிறது.

Music Therapy
Music Therapy

மனஅழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் காரணங்களிலிருந்து ஒருவர் விடுபட `மியூசிக் தெரபி’ வழிவகுக்கும். இதுபோன்ற சூழலில் அவர்களுக்குப் பிடித்தமான இசை எது? அவர்கள் எண்ணத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவது எது என்பவை கண்டறியப்பட்டு, அதுவே பரிந்துரைக்கப்படும்.

‘யாரோ ஒருவர் என் காதில் பேசிக்கொண்டே இருக்கிறார்’ என்று சொல்லும் ஒருவகைப் பாதிப்பு உள்ள நோயாளிகள் இருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களின் எண்ணங்களைத் திசை திருப்ப வேண்டியது அவசியம். மன அமைதியைக் கொடுக்கும் இசையைக் கேட்கும்போது, அவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு `மியூசிக் தெரபி’ கொடுக்கும்போது, அவர்கள் உடலில் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு, பதற்றம் தவிர்க்கப்படும். அது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள், நல்ல இசையைக் கேட்கும்போது ஆழ்ந்த உறக்கம் கொள்வர். இப்படிப்பட்ட சூழலில், மெலடி எனப்படும் மெல்லிய இசையே சிறந்தது.

music therapy
music therapy

மறதிநோய் (அல்ஸைமர்) எனப்படும் ஒருவகைக் குறைபாடு உள்ளவர்கள், வீட்டில் இருக்கும் இடங்களைக்கூட மறந்துவிடுவார்கள். ஏன், குடும்பத்தினரைக்கூட மறந்துவிடுவார்கள். மூளை சுருங்கிப்போவதால் இந்தப் பிரச்னை வரும். சிறு சிறு விஷயங்களையும் மறக்கும் இயல்புடைய இவர்கள், பிடித்த இசையைக் கேட்கும்போது, பழைய நினைவுகள் திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால், நோயின் பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்க முடியும்.

மியூசிக் தெரபியைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட நோயாளி எத்தகைய தீர்வை நோக்கி இருக்கிறார் என்பதே பார்க்கப்படும். உதாரணமாக, எண்ணச்சிதறல் போன்ற பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி வருபவர்கள், தவறான எண்ண அலைகளிலிருந்து விடுபட நினைப்பவர்கள், உடல் வலியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் போன்றோருக்குப் பிடித்த இசை தெரபி மூலம் சிகிச்சை தரப்படும். சிலருக்கு கர்னாடக இசை பிடிக்கலாம். வேறு சிலருக்கு பாப் ரக இசை பிடிக்கலாம். அவரவர் மனதுக்கு ஏற்பவே இசை பரிந்துரைக்கப்படும். மழையின் ஓசை, அலையின் ஓசை போன்றவையும் பரிந்துரைக்கப்படும்’’ என்கிறார் மனநல மருத்துவர் சங்கீதா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...