Skip to main content

Flower Tea: பூக்களில் தேநீர்; எதில் என்ன மருத்துவப்பலன்? - சொல்கிறார் சித்த மருத்துவர்!

பூக்களில் தேநீர் போடுவது இப்போது டிரெண்ட் ஆகி வருகிறது. பூக்கள் டீ பேக் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கிறது. என்னென்ன பூக்களை பயன்படுத்தலாம்; எப்படி பயன்படுத்த வேண்டும்; அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்ன என்பனப் பற்றி திருவள்ளூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர். சுப்பிரமணி அவர்களிடம் கேட்டோம்.

''சித்த மருத்துவத்தில் பலவிதமான பூக்களை பயன்படுத்தி கஷாயமாகத் தயாரித்து பருகி வந்துள்ளனர். அதை இன்று ஃபிளவர் டீயாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பூவுக்கும் தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் தேவை.

செம்பருத்தி

Flower Tea
Flower Tea

துவர்ப்பு சுவையுடைய செம்பருத்தி வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை உடையது.  உடல் சூட்டை தணிக்கும். செம்பருத்திப் பூவை பயன்படுத்தி தொடர்ந்து தேநீர் வைத்து குடித்துவர பித்ததினால் ஏற்படும் உடல் உபாதைகள் குறையும். உஷ்ணத்தினால் ஏற்படும் முகப்பருக்கள், வியர்க்குரு போன்றவற்றையும் குறைக்கும் தன்மையுடையது செம்பருத்தி தேநீர்.

 செம்பருத்திப் பூவில் உள்ள கிளைக்கோஸைடுகள் இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதாக ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில், செம்பருத்திப்பூ சாறுடன், எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து டானிக்காக கிடைக்கிறது. செம்பருத்திப்பூ இதழுடன் எலுமிச்சை தோல் சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து ஹெர்பல் டீயாகவும் குடித்து வர இதய ஆரோக்கியம் மேம்படும். இதை சித்த மருத்துவத்தில் 'செம்பருத்திப்பூ சர்பத்' என்பார்கள்.

ஆவாரம் பூ

ஆவாரம் பூ
ஆவாரை பூ

'ஆவாரம் பூ பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ' என்ற பழமொழிக்கேற்ப இச்செடியில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நோய்களுக்கு அருமருந்து ஆகிறது. குறிப்பாக, துவர்ப்பு சுவையுடைய ஆவாரம் பூ தேநீரை சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிப்பது முழுமையான புத்துணர்ச்சியைத் தரும். சித்த மருத்துவத்தில் அகத்தியர் குணவாகடத்தில் இந்தப்பூ நீரிழிவு பிரச்னையில் எந்தளவுக்கு பலன் அளிக்கும் என்பது பற்றி பேசியிருக்கிறார். இந்த தேநீர், உடலில் வரக்கூடிய கற்றாழை நாற்றம் என்று சொல்லக்கூடிய ஒருவகையான துர்நாற்ற பிரச்னையை சரி செய்யக்கூடிய தனித்துவமான தன்மையை கொண்டது.

தாமரை

flower tea
flower tea

சித்த மருத்துவத்தில் கஷாயமாக பயன்படுத்தப்படுகிறது. இதை தேநீராகவும் குடிக்கலாம். தாமரை இதழ், தாமரை மகரந்தப்பொடி இரண்டும் சேர்த்து தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். அதிக உடல் சூடு, பித்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் வெண்தாமரை இதழில் தேநீர் வைத்து பருகி வர குணமாகும்.

மல்லிகை

flower tea
flower tea

இதில் உள்ள நறுமணம் நம் மூளைக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இலையை காய வைக்கும்போது அதனுடன் மல்லிகையும் சேர்த்து காயவைத்து பயன்படுத்துகின்றனர். சீனாவில் கிரீன் டீ தயாரிப்பில் இந்த முறையை பின்பற்றுகின்றனர்.

ரோஜா

flower tea
flower tea

ரோஜாவின் இதழில் உள்ள நிறமிகள் தேநீருக்கு சிறந்த நிறத்தை தருவதுடன் நம் மூளைக்கு ஏற்பிகளாக செயல்பட்டு மன அழுத்தத்தை குறைக்கின்றன. காய வைத்த இதழ்களுடன், சீரகம், சோம்பு மற்றும் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக பருகி வர, பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களும் தூக்கமின்மை பிரச்னையும் தீரும்.

குங்குமப்பூ

flower tea
flower tea

குங்குமப்பூ தேநீரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் சரும பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. தூக்கமின்மை, மன அழுத்தம், பதற்றம், மாதவிடாய் பிரச்னைகளை சரி செய்கின்றன. கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ தேநீர் தொடர்ந்து குடித்து வருவது ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும்.

இலுப்பைப் பூ

சித்த மருத்துவர் சுப்பிரமணி
சித்த மருத்துவர் சுப்பிரமணி

'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என பழங்காலத்தில் சர்க்கரைக்கு மாற்றுப் பொருளாக இலுப்பைப் பூவை பயன்படுத்தி உள்ளனர். உடல் மெலிந்தவர்கள் பாலுடன் இலுப்பைப் பூவை சேர்த்து தேநீர் வைத்து அருந்தி வர உடல் தேறும். மாதவிடாய் பிரச்னைகள், ஆண்மை குறைபாடு பிரச்னைகள் நீங்கும்.

நுணா பூ

நுணா
நுணா

நுணா பூ பயன்படுத்தி தேநீர் வைத்து குடிப்பது உடல் வெப்பத்தை தணித்து வீக்கத்தைக் குறைக்கவும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளை நீக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், மாதவிடாய் காலத்தை சீர் செய்யவும், மூட்டு வலியைப் போக்கவும் உதவும்.

இலவங்கப் பூ

இலவங்கம்
இலவங்கம்

வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இலவங்கப் பூ தேநீர் உள்ளது. பூவுடன், சீரகம், தேன் சேர்த்து தேநீராக பருகி வர பசியின்மை, வயிற்று எரிச்சல் பிரச்னைகள் சரியாகும். சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து இந்தப் பூ.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...