Skip to main content

Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமா?

Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட்  வைக்கப்பட்டுள்ளது. 

2023-ல் பக்கவாதம் வந்து வலது கையும் காலும் பாதித்தது. இப்போது சர்க்கரை கன்ட்ரோலில் உள்ளது. முன்புபோல் சரியாக நடக்க முடியவில்லை.  வலது கையால் ஒன்றும் செய்ய முடியாது. தினமும் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். எட்டு மாதங்கள் பிசியோதிராபி செய்து வந்தேன். ஆனால், இன்னமும் வலது கை விரல்களால் எதையும் பிடிக்க முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

-raja (aburaeesa@gmail.com), விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன்

பொதுவாகவே, வலது பக்கம் ஸ்ட்ரோக் பாதிக்கும்போது, பேச்சும், கையின் இயக்கமும் பாதிக்கப்படும். உங்களுக்கு ஏற்பட்ட ஸ்ட்ரோக்கின் தீவிரம் எப்படிப்பட்டது, எவ்வளவு நேரம் கழித்து உங்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது, எத்தனை நாள்கள் கழித்து நீங்கள் குணமாகத் தொடங்கினீர்கள் என்பதையெல்லாம் பொறுத்தும் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

நம் மூளையின் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் அல்லது மறுசீரமைத்துக் கொள்ளும் அற்புதமான திறனான நியூரோனல் பிளாஸ்டிசிட்டி என்பது நாம் இறக்கும்வரை நிகழ்ந்துகொண்டே இருக்கும். ஒரேவிதமான இயக்கங்களை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டே  வந்தால்தான் அந்த மறுசீரமைப்பு நடந்து, மூளையில் பதியும். ஹேண்ட் கோ-ஆர்டினேஷன் எனப்படும் கை ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவது சற்று சிரமமாகத்தான் இருக்கும்.  அதில் 80 சதவிகிதம் முன்னேற்றம் தெரிந்தாலே பெரிய விஷயம்.

முதல் வேலையாக நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள வட்டமான டம்ளர், சின்னச் சின்ன பாத்திரங்கள், பவுடர் டப்பா போன்றவற்றைப் பிடித்துப் பார்த்து அவற்றின் வடிவம் மாறுவதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். சில்லறை காசுகளை எடுத்துவைப்பது, புத்தகப் பக்கங்களைத் திருப்புவது, தீக்குச்சிகளை எடுத்துவைப்பது, ஒரு லிட்டர்  வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, அதன் மூடியைப் பிடித்துக்கொண்டு நடப்பது, அதே வாட்டர் பாட்டிலை அகலவாக்கில் பிடிப்பது போன்ற  விதவிதமான பிடிமானங்களைப் பழகுங்கள்.

Hands

பிடிமானம் பழகிவிட்டால், பிறகு அந்தப் பொருள்களை பக்கத்தில் உள்ள இடத்தில் நகர்த்தி வைப்பது, எடுப்பது போன்றவற்றைச் செய்யலாம். இவற்றை எல்லாம் தொடர்ந்து செய்துவந்தாலே உங்கள் கையின் இயக்கத்தில் முன்னேற்றம் தெரியும். உங்கள் இருப்பிடத்துக்குப் பக்கத்தில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் (occupational therapist) என்பவர் இருப்பார். அவரை அணுகினால், மூளைக்கும் கைக்குமான ஒருங்கிணைப்பைக் கொண்டுவந்து, உங்கள் வேலைகளைச் செய்ய வைப்பதற்கான பயிற்சிகளை அவர் கற்றுத் தருவார். இவற்றையெல்லாம் செய்த பிறகு 'மிரர் இமேஜ் டெக்னிக்'கையும் பின்பற்றலாம். அதாவது கண்ணாடி முன் நின்றுகொண்டு, இரண்டு கைகளுக்கும் ஒரே நேரத்தில் வேலை கொடுக்கும்போது கண்ணால் கையைப் பார்க்கும்போது இன்னொரு கையும் செய்யும். இதை 'மிரர் ஆப்ஜக்ட் டிரெய்னிங்' (Mirror object training) என்று சொல்வோம். இவற்றையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் முன்னேற்றத்தை உணர்வீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...