Skip to main content

Doctor Vikatan: தலைவலிக்கு எடுக்கும் மாத்திரையே தலைவலியைத் தூண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக ஒற்றைத் தலைவலி இருக்கிறது. எப்போதெல்லாம் தலை வலிக்கிறதோ, அப்போதெல்லாம் பெயின் கில்லர் எடுத்துக்கொண்டால்தான் வலி குறையும். இப்போது சில நாள்களாக மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகு வலி இன்னும் அதிகமாவது போல உணர்கிறேன். இதை எப்படிப் புரிந்துகொள்வது... மாத்திரை இல்லாமல் வலியை எப்படிச் சமாளிப்பது?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஞானசண்முகம்

தலைவலியைத் தாங்க முடியாத நிலையில்தான் பெயின் கில்லர் எனப்படுகிற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில் அந்த வலி நிவாரணிகள் அளவுக்கு அதிகமாகும்போது அவையே தலைவலியை ஏற்படுத்தலாம். இத்தகைய வலியை 'மெடிக்கேஷன் ஓவர்யூஸ் ஹெட்டேக்' (Medication overuse headache) என்கிறோம்.

பெயின் கில்லர் மருந்துகள் என நாம் பொதுவாகக் குறிப்பிடுபவை, பாராசிட்டமால் மற்றும் என்எஸ்ஏஐடி (NSAIDs) மருந்துகள்தான். இவற்றை அடிக்கடியும் அதிக அளவிலும் பயன்படுத்தும்போது அவையே வலியைத் தூண்டும் காரணிகளாக மாறலாம். அதாவது இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது தற்காலிகமாக வலி குறைவதுபோல உணர்வார்கள். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் வலி அதிகமாகிவிடும். வலி வந்ததும் மீண்டும் பெயின் கில்லர் உபயோகிப்பார்கள். இது இப்படியே தொடர்ந்துகொண்டிருக்கும். 

வலி நிவாரணி

தலைவலியில் பல வகைகள் உள்ளன. 'இன்டர்நேஷனல் ஹெட்டேக் சொசைட்டி' (International Headache Society) என்ற அமைப்பு அதை வகைப்படுத்துகிறது. அதன்படி,  மெடிக்கேஷன் ஓவர்யூஸ் ஹெட்டேக்  என்பது, மாதத்தில் 15 நாள்களுக்காவது பெயின் கில்லர் உபயோகிப்பது, அதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் செய்திருப்பது, அதன் காரணமாக வந்த தலைவலியைக் குறிக்கிறது. இந்த பெயின் கில்லரானது பாராசிட்டமாலாக இருக்கலாம் அல்லது எனப்படும் என்எஸ்ஏஐடி எனப்படும்  'நான்ஸ்டீராய்டல் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி' வகை மருந்தாக இருக்கலாம்.

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவிகிதத்தினருக்கு இந்த வகை  தலைவலி அதிகம் வருவதைப் பார்க்கிறோம். மைக்ரேன் தலைவலி என்பது சிலருக்கு எப்போதாவதும் சிலருக்கு அடிக்கடியும் வரும். அடிக்கடி மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படுவோர், அடிக்கடி மாத்திரைகள் எடுப்பதால், இந்தத் தலைவலி பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக, டிப்ரெஷன், பதற்றம் உள்ளவர்கள், பெண்களுக்கெல்லாம் இந்தத் தலைவலி அதிகம் வரலாம். மைக்ரேனால் பாதிக்கப்பட்ட பலரும், 'மாத்திரை போட்டாதானே வலி குறையுது... மாத்திரை போடாம எப்படிச் சமாளிக்கிறது' என்று கேட்பார்கள்.

குறிப்பாக, டிப்ரெஷன், பதற்றம் உள்ளவர்கள், பெண்களுக்கெல்லாம் இந்தத் தலைவலி அதிகம் வரலாம்.

மூளையில் வலியை உருவாக்கும் இடம் தனியே இருக்கும். பெயின் கில்லர் போடும்போது, அது அந்தப் பகுதியில் சென்று வேலை செய்து வலியைக் குறைக்கும். அடிக்கடி பெயின் கில்லர் எடுக்கும்போது, மூளையில் தலைவலியை உருவாக்கும் சென்சிட்டிவிட்டி அதிகமாகும். சாதாரணமாக ஒரு நபருக்கு அரிதாக தலைவலி வருகிறது என்றால், மைக்ரேன் பிரச்னை உள்ளவர்களுக்கு சின்னச் சின்ன தூண்டல் காரணிகளால்கூட தலைவலி வரும். அந்த சென்சிட்டிவிட்டியை இந்த பெயின் கில்லர் மருந்துகள் அதிகரிக்கும்.

வருமுன் காப்பதுதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு. மைக்ரேன் பாதிப்புள்ளவர்கள், அடிக்கடி மாத்திரை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாரம் இரண்டு முறையைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மிதமான வலியைத் தாங்கிக் கொள்ளலாம். தாங்க முடியாத வலிக்கு மட்டும் மாத்திரை எடுக்கலாம். வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்ற வேண்டும்.  சரியான தூக்கமின்மை, நேரத்துக்குச் சாப்பிடாதது, ஸ்ட்ரெஸ் என தலைவலியைத் தூண்டும் காரணிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும். வீட்டு உணவுகளைச் சாப்பிட வேண்டும். ஜங்க் ஃபுட்ஸை தவிர்க்க வேண்டும். ஸ்ட்ரெஸ் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.  யோகா பயிற்சிகள் செய்வது தூக்கத்தை முறைப்படுத்தி, மைக்ரேன் தலைவலியின் தீவிரத்தைக் குறைக்கும். 

மைக்ரேன் தலைவலி வந்தவர்கள் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். பெயின் கில்லர் அல்லாத, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ப்ரிவென்ட்டிவ் மெடிசின்ஸ் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு எடுத்தாலே மைக்ரேன் தலைவலி குறையும்.  மைக்ரேன் தலைவலிக்கான சரியான சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும். பெயின் கில்லர் மருந்து உபயோகத்திலிருந்து வெளியே வர வேண்டும். இது சற்று சவாலானதுதான் என்றாலும் கஷ்டப்பட்டாவது இதைச் செய்துதானாக வேண்டும்.  ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றால், இந்தத் தலைவலியிலிருந்து சீக்கிரமே வெளியே வந்துவிடலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...