Skip to main content

Doctor Vikatan: மெனோபாஸில் எலும்புகள் பலவீனம்.. கால்சியம் மாத்திரையால் கிட்னி ஸ்டோன் வருமா?

Doctor Vikatan: என் வயது 49. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. கை, கால்களில் வலியையும், பலவீனத்தையும் உணர்கிறேன். மருத்துவர் கால்சியம் மாத்திரை எழுதிக்கொடுத்தார். ஆனால், கால்சியம் மாத்திரை சாப்பிட்டால், கிட்னியில் கல் வரும் என்கிறாள் என் தோழி. அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

மெனோபாஸ் காலத்தில் பெண் உடலின் மிக முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் வெகுவாகக் குறைந்துவிடும். அதனால் 50 ப்ளஸ் வயதில் எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். ஒருநாளைக்கு ஒரு பெண்ணுக்கு  500 முதல் 1000 மில்லிகிராம் கால்சியம் தேவை. சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து இது 2,000 மில்லிகிராம்கூட தேவைப்படலாம். உணவின் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது என்பதால் சப்ளிமென்ட் எடுக்க வேண்டும்.

மெனோபாஸில் கால்சியம் குறைபாடு காரணமாக, எலும்புகள் மென்மையாகும்  ஆஸ்டியோபொரோசிஸ் என்கிற பிரச்னை, லேசாக இடறினாலோ, தடுக்கினாலோகூட எலும்பு முறிவது, கை, கால்களில் வலி, பலவீனம் போன்றவற்றை உணர்வார்கள். அதற்கு சப்ளிமென்ட் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்போம். கால்சியம் சப்ளிமென்ட்ஸ் எல்லாமே  கிட்னி ஸ்டோன்ஸை ஏற்படுத்தாது. அதில் பல வகைகள் உள்ளன. யார், எந்த டோஸ், எத்தனை நாள்களுக்கு எடுத்துக்கொள்கிறார் என்பதும் இதில் முக்கியம். மருத்துவர் பரிந்துரைக்கும்போது பக்க விளைவுகளற்றதாகவே தருவார். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத்தான் கிட்னி ஸ்டோன்ஸ் வரும். ஏற்கெனவே கிட்னி ஸ்டோன்ஸ் இருந்தால், கால்சியம் சப்ளிமென்ட் எடுப்பதில் கவனம் தேவை.

மெனோபாஸில் கால்சியம் குறைபாடு காரணமாக, எலும்புகள் மென்மையாகும் ஆஸ்டியோபொரோசிஸ் என்கிற பிரச்னை, லேசாக இடறினாலோ, தடுக்கினாலோகூட எலும்பு முறிவது, கை, கால்களில் வலி, பலவீனம் போன்றவற்றை உணர்வார்கள்.

கால்சியம் சப்ளிமென்ட்டை உணவுடன் சேர்த்து எடுக்கும்போது அது உட்கிரகிக்கப்படுவது சிறப்பாக இருக்கும்.   இத்தனை நாள்களுக்குத்தான் கால்சியம் எடுக்க வேண்டும் என கணக்கு இல்லை. பல வருடங்கள் தொடர்ந்து எடுத்தாலும் பிரச்னை வர வாய்ப்பில்லை. அதுவே, இரண்டு, மூன்று கால்சியம் மாத்திரைகள் எடுக்கும்போது அது பிரச்னையை ஏற்படுத்தலாம்.  பால், தயிர், மோர், பனீர், கீரை வகைகள் மூலம் இயற்கையாகவே கால்சியம் உடலில் சேரும். எல்லோருக்கும் சப்ளிமென்ட்ஸ் தேவையும் இல்லை. 50 ப்ளஸ் வயதில, எலும்புகள் வலிமையிழக்கும் நிலையில் தான் அது தேவை. கால்சியம் குறைபாட்டுடன், வைட்டமின் டி பற்றாக்குறையும் இருப்பது தெரிந்தால், குறிப்பிட்ட நாள்களுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸையும் சேர்த்தே மருத்துவர் பரிந்துரைப்பார். எனவே, மருத்துவர் பரிந்துரைக்கும்போது பயமின்றி எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...