Skip to main content

Doctor Vikatan: டிராகன் ஃப்ரூட்டில் என்ன ஸ்பெஷல்; யாரெல்லாம் சாப்பிடலாம்.. நன்மைகள் என்ன?

Doctor Vikatan: முன்பெல்லாம் பெரிய கடைகளில், பணக்காரர்கள் வாங்கும் பழங்களில் ஒன்றாக இருந்தது டிராகன் ஃப்ரூட். இன்று அது சாலையோரக் கடைகளில், தள்ளுவண்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. டிராகன் ஃப்ரூட்டில் என்ன ஸ்பெஷல்... யாரெல்லாம் சாப்பிடலாம்... அதை எப்படிச் சாப்பிட வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகரான ப்ரீத்தா சங்கீத்.

பொதுவாக, நம் உடலில் 'ஃப்ரீ ரேடிக்கல்ஸ்'  (Free Radicals) எனப்படும்  தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளும், அவற்றை நடுநிலையாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் மூலக்கூறுகளும் இயற்கையாகவே இருக்கும். இந்த இரண்டும் சரியான சமநிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாகச் செயல்படுகிறது.  உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸின் அளவு அதிகமாகி, அவற்றை நடுநிலையாக்கத் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸின் அளவு குறைவாக இருக்கும்போது ஏற்படும் நிலையே  ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்.  டிராகன் ஃப்ரூட்  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம். தவிர, இதற்கு ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை  குறைத்து, நமது உடலை நோய்கள் மற்றும் முதுமையிலிருந்து பாதுகாக்கும் தன்மை உண்டு.

இந்தப் பழத்திற்கு  தனித்துவமான அழகான நிறத்தைக் கொடுப்பது பீட்டாலேயின்ஸ் (Betalains) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட். இது புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பழத்திலுள்ள  ஃப்ளேவனாய்ட்ஸும் (Flavonoids) நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் உருவாவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

டிராகன் ஃப்ரூட்டில் உள்ள கரோட்டினாய்ட்ஸ் (Carotenoids) கண் பார்வையைப் பாதுகாப்பதுடன், உடலின் செல்களை சேதத்திலிருந்து காக்கும் ஆற்றல் கொண்டவை. டிராகன் ஃப்ரூட் வைட்டமின் சி நிறைந்தது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். தொற்றுநோய்கள் அண்டாமல் காக்கும்.

அதிக நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமானத்தைச் சீராக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரையச் செய்வதால் இதயநோய் வராமல் தடுக்கும். கலோரி குறைவான பழம் என்பதால் டயட்டில் இருப்போருக்கு ஏற்றது

டிராகன் ஃப்ரூட்டை தோல் நீக்கி அப்படியே மென்று சாப்பிடலாம்.

சருமத்தைப் பொலிவாக, இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவும்.  அதிக நார்ச்சத்து இருப்பதால், இது ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைத்து, ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அளவோடு எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படும் சில பழங்களில் டிராகன் ஃப்ரூட்டும் ஒன்று. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 100-150 கிராம் வரை  இந்தப் பழத்தை  எடுத்துக்கொள்ளலாம்.

டிராகன் ஃப்ரூட்டை தோல் நீக்கி அப்படியே மென்று சாப்பிடலாம். பால், தேன் சேர்த்து ஸ்மூதியாக எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி, மாதுளை, திராட்சை போன்ற பழங்களுடன் சேர்த்து சாலட் போல செய்து சாப்பிடலாம். தயிர், ஊறவைத்த சியா சீட்ஸுடன் சேர்த்துச் சாப்பிடலாம். மில்க் ஷேக்காக குடிக்க விரும்பினால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பயன்படுத்தலாம். இனிப்பைத் தவிர்ப்பது சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...