Skip to main content

Health: மனநிலை, இதயம் சீராக இயங்க உதவும் மெக்னீஷியம்.. உங்கள் உணவில் இருக்கிறதா?

நம் உடலில் உள்ள எலும்புகளின் இயக்கத்திற்கும், தசைகள் சீராக இயங்குவதற்கும் தேவைப்படும் முக்கியமான மினரல் மெக்னீஷியம். உடலில் மெக்னீஷியம் குறைபாடு ஏற்படுவது பல்வேறு அறிகுறிகள் மூலம் வெளிப்படும். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதைப் போல, மெக்னீஷியம் குறைபாடு இருந்தால் அது உங்கள் முகத்திலேயே தெரிந்துவிடும்' என்கிற உணவியல் நிபுணர் பாலபிரசன்னா, மெக்னீஷியம் நிறைந்த உணவுகள், குறைந்தால் வரக்கூடிய அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பேசினார்.

மெக்னீஷியம் குறைபாடு
மெக்னீஷியம் குறைபாடு

''பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் கண் இமைகள் தன்னிச்சையாக துடிக்கும். இது மெக்னீஷியம் குறைபாட்டினால் ஏற்படுவதுதான். கண்களுக்கு ரத்த ஓட்டம் சரியாகச் செல்லாது. கண்கள் எரிச்சலாகவும், மிகவும் வறண்டும் இருக்கும். மெக்னீஷியம் இருந்தால் மட்டுமே கண் தசைகள் சரியாக இயங்கும்.

மெக்னீஷியம் உடலின் திரவ நிலையைச் சீராக்கப் பயன்படுகிறது. இது குறையும்போது உடலின் திரவத்தன்மை அதிகரித்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம் ஏற்படும்.

கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது தூக்கமின்மை மற்றும் சோர்வினால் மட்டுமல்ல, மெக்னீஷியம் குறைபாட்டினாலும் ஏற்படும்.

மெக்னீஷியம் நரம்பு தூண்டுதலுக்கு உதவுவதோடு, மனநிலையைச் சீராக வைப்பதற்கும், இதயத்தைச் சீராக இயங்க வைப்பதற்கும் உதவுகிறது.

மெக்னீஷியம் நிறைந்த உணவுகள்
மெக்னீஷியம் நிறைந்த உணவுகள்

மெக்னீஷியம் குறைபாடு இருந்தால் முகத்தில் தோல் சுருக்கம், பொலிவின்மை ஏற்பட்டு சீக்கிரமே வயதான தோற்றம் ஏற்படும்.

உடலில் போதுமான அளவு மெக்னீஷியம் இருந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், முகப்பரு, எக்ஸிமா போன்றவை வராமல் தடுக்கும். அரிப்பு மற்றும் சிவப்புத்திட்டுகளும் ஏற்படாது.

முடி வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது மெக்னீஷியம். இது குறைந்தால் புருவங்களில்கூட முடி கொட்டும்.

மெக்னீஷியம் குறைந்தால் உதடு வறண்டு, வெடிப்பு ஏற்படுவதோடு, தாடை இறுக்கமாக இருப்பது போன்ற பிரச்னைகளும் வரும்.

உணவியல் நிபுணர் பாலபிரசன்னா
உணவியல் நிபுணர் பாலபிரசன்னா

இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்தித்து, மெக்னீஷியம் குறைபாடு இருப்பதை உறுதி செய்துகொண்டு, தினமும் 200 முதல் 400 மில்லிகிராம் வரை மெக்னீஷியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம். கூடவே, போதுமான அளவு நீரை உட்கொள்ள வேண்டும். உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை வகைகள், நட்ஸ், அவகாடோ, பயறு மற்றும் சிறுதானியங்களை அன்றாட வாழ்வில் சேர்த்துகொள்ள வேண்டும்'' என்கிறார் உணவியல் நிபுணர் பாலபிரசன்னா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...