Skip to main content

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் விடாமல் தொடரும் வறட்டு இருமல்.. கருவை பாதிக்குமா?

Doctor Vikatan: என் தங்கைக்கு 30 வயதாகிறது. 5 மாத கர்ப்பமாக இருக்கிறாள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவளுக்கு தீவிரமான இருமல் ஏற்பட்டது. வறட்டு இருமல்தான்... ஆனால், ஒருநாள் முழுவதும் இருந்தது. இருமும்போது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்துகொண்டே இருந்தாள்.  இருமல் மருந்து குடிக்கவும் மறுத்துவிட்டாள்.  இப்படிப்பட்ட இருமலுக்கு என்ன காரணம்... அடிவயிற்றிலிருந்து இருமும்போது கரு கலைய வாய்ப்புள்ளதா... இன்னொரு முறை இப்படி நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

ஐந்து மாத கர்ப்பத்தில் வறட்டு இருமல் ஏற்பட வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம். உங்கள் தங்கைக்கு ஏற்கெனவே அலர்ஜி பிரச்னை இருக்கிறதா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, செல்லப் பிராணிகளால் அலர்ஜி, தூசு அலர்ஜி போன்ற ஏதாவது இருந்தாலும் ஜலதோஷம், தும்மல், இருமல் வரலாம்.

கர்ப்பிணிகளுக்கு உணவு எதுக்களித்தல் (Acid reflux) பிரச்னை சகஜமாக இருக்கும். கர்ப்பகாலத்தில் சரியாகச் சாப்பிட முடியாது. வாந்தி உணர்வு இருப்பதால் சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள்.

கர்ப்ப காலத்தில் செரிமானம் மந்தமாவதால் உணவு எதுக்களித்துக் கொண்டு வரலாம். சிலருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கக்கூடும். அதாவது ஏற்கெனவே ஆஸ்துமா பாதிப்பு இருந்தால், கர்ப்ப காலத்தில் அதன் தீவிரம் அதிகமாகலாம். அதன் காரணமாகவும் இருமல் வரலாம்.

சிலருக்கு படுத்த நிலையில் இருமல் வரும். எழுந்து உட்கார்ந்தால் சரியாகிவிடும். இதை 'போஸ்ட் நேசல் டிரிப்' (Post-nasal drip) என்று சொல்வோம். ஏற்கெனவே சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். வீட்டில் யாராவது புகை பிடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தால் அதனாலும் இருமல் வரலாம்.

கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தை ஒதுக்கிவிட்டு, இருமலுக்கான காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பதுதான் சரியானது.

சுற்றுப்புறத்தில் தூசு, புகை அதிகமிருந்தாலோ, டூ வீலர் ஓட்டுபவர் என்றால் வாகனப் புகையாலோ இருமல் வரலாம். நீங்கள் பயப்படுகிற மாதிரி இருமலால் கரு கலைய வாய்ப்பில்லை. ஏனென்றால், கருவிலுள்ள குழந்தையானது கர்ப்பப்பைக்குள் மிகப் பாதுகாப்பாக, பத்திரமாகவே இருக்கும்.

அதே சமயம், இருமல் நிற்கவில்லை, தீவிரமாக இருக்கிறது என்றால் அதற்கான காரணம் என்ன என பார்க்க வேண்டியது அவசியம். நிமோனியா, டிபி போன்ற பாதிப்புகள் இருக்கின்றனவா என்பதற்கான பரிசோதனைகள் அவசியம்.

நீண்ட நாள்களாக இருமல் தொடரும் நிலையில், அந்த நபருக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறையலாம். டிபி நோயாளிகளைப் பார்த்தால் அவர்கள் தொடர் இருமலின் காரணமாக உடல் மெலிந்து, களைப்பாக காணப்படுவார்கள். எனவே, கரு கலைந்துவிடுமோ என்ற பயத்தை ஒதுக்கிவிட்டு, இருமலுக்கான காரணம் அறிந்து அதற்கு சிகிச்சை எடுப்பதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...