Skip to main content

Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இருக்க தீர்வு உண்டா?

Doctor Vikatan: சிலருக்கு பசியின்மை பிரச்னை இருக்கிறது. சிலருக்கு மலச்சிக்கல் படுத்துகிறது. இன்னும் சிலருக்கோ சாப்பிட்டது செரிக்காமல் வயிற்று உப்புசம், குமட்டல், நெஞ்சு கரித்தல் என ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. குடல் தொடர்பாக இப்படி எந்தப் பிரச்னையுமே வராமலிருக்க நிரந்தர தீர்வுகள் ஏதேனும் உண்டா??

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

மருத்துவர் பாசுமணி

குடல் ஆரோக்கியம் என்பதே அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை நம்பியே உள்ளது. அதிலுள்ள 100 டிரில்லியன்  பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான அளவு நார்ச்சத்து, வெரைட்டியான நார்ச்சத்து, சீசனல் உணவுகள் அவசியம். கோலா பானங்கள், மது போன்றவை கூடாது. 

ஒருநாள் தூக்கம் இல்லாவிட்டால் மறுநாள் சேர்த்துவைத்துத் தூங்குவதைப் போல,  ஒருவேளை  நார்ச்சத்து இல்லாமல் சாப்பிட்டால் அடுத்தவேளை  அதை ஈடுகட்ட வேண்டும். ஃபைபர் டெஃபிசிட் (fibre deficit) எனப்படும் நார்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால், குடலுக்கு கடன்படுவீர்கள். அந்தக் கடனை சேர்க்காதீர்கள். அன்றன்று பேலன்ஸை காலி செய்விட்டு நிம்மதியாகத் தூங்குங்கள்.

தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது குடலுக்கு நல்லது. உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் செரிமானம் பாதிக்கப்படும். இது தவிர்த்து தினமும் 150 முதல் 200 மில்லி நீர்மோர் எடுத்துக்கொள்ளலாம். மோரில் உள்ள புரோபயாடிக்ஸ், குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. கெட்டியாக இல்லாமல் நிறைய தண்ணீர் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்த மோர் குடலுக்கு ஆகச்சிறந்த பானம்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கம்புக்கு பெரும்பங்கு உண்டு.  காலை உணவுக்கு இட்லி, தோசைக்கு பதில் மோர் சேர்த்த கம்பங்கூழ் குடிப்பது வயிற்றை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்.

ஒருவேளை நார்ச்சத்து இல்லாமல் சாப்பிட்டால் அடுத்த வேளை அதை ஈடுகட்ட வேண்டும். ஃபைபர் டெஃபிசிட் (fibre deficit) எனப்படும் நார்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால், குடலுக்கு கடன்படுவீர்கள்.

இரவு உணவை சீக்கிரமே சாப்பிடுபவர்களுக்கு  வயிறு தொடர்பான உபாதைகள் வருவதில்லை. அதிகபட்சம் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, அதன் பிறகு 15 நிமிடங்கள் கழித்து சிறிது நடப்பது செரிமானத்தை சீராக்கும்.

வெயில் காலத்தில் பலருக்கும் பசி எடுக்காது. திரவ உணவாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதற்காக கோலா பானங்கள், கார்பனேட்டடு பானங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரையும் கலோரியும்  காற்றும் அதிகம் என்பதால் செரிமானத்தை நிச்சயம் பாதிக்கும். அதற்கு பதில் ஃப்ரெஷ் பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். 

தினமும் குறைந்தது அரை மணி நேரம் ஏதோ ஓர் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதற்காக ஜிம்மில் சேர்ந்து ஹெவியான வொர்க் அவுட் செய்ய வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் என உங்களுக்கு எது சாத்தியமோ அதைச் செய்யலாம். வியர்வை வெளியேறும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...