Skip to main content

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

ருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இருக்கின்றன. ஆனால், அதை ஏதோ களைச்செடி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். சித்த மருத்துவம் இன்றளவும், இந்த மூலிகைச்செடிகளை மருந்தாக்கி மக்களின் நோய்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில், நமக்குத் தெரிந்த செடிகள், அதன் தெரியாத மருத்துவ பயன்கள் பற்றி சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் குமார் அவர்களிடம் பேசினோம்.

குப்பைமேனி

குப்பைமேனி
குப்பைமேனி

இதுதான் தோல் சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அரிப்பு, படர்தாமரை போன்ற தோல் நோய்களுக்கு குப்பை மேனி உடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து தடவி வர குணமாகும். இதன் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம்.

கீழாநெல்லி

கீழாநெல்லி
கீழாநெல்லி

பித்தம், அதாவது உடல் சூட்டைக் கட்டுப்படுத்தும். வெயில் காலங்களில் மோருடன் சிறிது கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து பருகலாம். இது தொற்று நோய் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், உடலில் தங்கும் அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

மணத்தக்காளி

மணத்தக்காளி
மணத்தக்காளி

கீரை, பழம் என இரண்டும் வாய்ப்புண், வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். செரிமான கோளாறுகளை சரி செய்வதன் மூலம் மலச்சிக்கலை சரி செய்யும்.

இந்தக் கீரையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து நெய் சேர்த்து சாப்பிடுவது நன்மை பயக்கும். காய்ச்சல் வந்து சுவை தெரியாதவர்கள், அந்த நேரத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்து சாப்பிடலாம். இது, நாக்கில் சுவை அரும்புகளைத் தூண்டி சுவையை உணரச் செய்யும்.

துத்தி இலை

துத்தி இலை
துத்தி இலை

மூலத்திற்கான சிறந்த மருந்து. பருப்புடன் சேர்த்து வேகவைத்து நெய் சேர்த்து சாப்பிட வேண்டும். செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது. மஞ்சள் நிற பூக்கள் கொண்ட துத்திச்செடியை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி
கண்டங்கத்திரி

கண்டத்தில், அதாவது தொண்டையில் வரக்கூடிய நோய்களை கத்தரிக்கும் இயல்பு கொண்டது இது. ஜலதோஷம், காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கு கண்டங்கத்திரியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் கண்டங்கத்தரி லேகியம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மருதாணி

மருதாணி
மருதாணி

இலைகளை அரைத்து தலையில் தேய்த்துக் கொள்வதும், கைகளில் வைத்துக் கொள்வதும், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். கண் எரிச்சல் குறைக்கும் அருமருந்து. மருதாணி இலையுடன் சிறிது தேயிலைத்தூள் மற்றும் அவுரி இலையை கலந்து அரைத்து, தலையில் தேய்த்து வர இளநரை குறையும். பாலின பாகுபாடு இன்றி அனைவரும் கைகளில் மருதாணி வைத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

கற்றாழை

கற்றாழை
கற்றாழை

குமரி கற்றாழை என்று அழைக்கக்கூடிய சோற்றுக்கற்றாழை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு. கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து 6 முதல் 7 முறை கழுவிவிட்டு மோர், உப்பு சேர்த்து அரைத்து ஜூஸ் போல குடித்து வர வாய்ப்புண், அல்சர் சரியாகும். உலகளவில் கற்றாழை அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை சாறுடன் பால் கலந்து முகத்தில் தடவி வர, முகப்பருக்கள், கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தும்பை

தும்பை
தும்பை

தும்பை இலை அல்லது பூவை குளிக்கும் நீரில் போட்டு குளித்துவந்தால் உடல் சோர்வு நீங்கும். தும்பைப் பூவை பிழிந்து அதிலிருந்து கிடைக்கும் சாற்றை நாசியில் விடுவதன் மூலம் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் குணமாகும். மேலும், பூவை கசக்கி முகப்பரு, கட்டிகள் மீது வைத்தால் அவை சரி ஆகும்.

ஆவாரம் பூ

ஆவாரம் பூ
ஆவாரம்பூ

நாம் உணவில் சேர்க்க மறக்கிற சுவையான துவர்ப்பு சுவையைக் கொண்டது இது. ஆவாரம் பூ கிடைக்கக்கூடிய காலங்களில் அனைவருமே அதை பறித்து சாப்பிடலாம். பூவை பறித்து தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போலவும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்வது இன்சுலின் அளவை நெறிப்படுத்தும் என்கின்றன ஆய்வுகள்.

இவை எல்லாம் காலங்காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகள் என்றாலும், மருந்தாக உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும்போது ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்பெறுதல் அவசியம்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...