Skip to main content

Health: பட்ஸ் முதல் ஹெட்போன் வரை... காதை ஹைஜீனாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம்?

லர், சும்மா இருக்கும்போது சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ்... என எதையாவது வைத்துக் காது குடைவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள்.

இந்தச் செயல், அவர்கள் ஹைஜீனைப் பாதித்து, நோய் ஏற்படவும், காதில் பிரச்னை ஏற்படவும் காரணமாகிறது.

இதுபற்றி சொல்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலமுருகன்.

Ears
Ears

''காதில் இயற்கையாகவே உருவாகும் மெழுகு, காற்றில் இருக்கும் தூசி, கிருமிகள் எதுவும் உட்காதுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். இந்த மெழுகு அதிகமாகச் சுரக்கும்போது, அது உட்காதிலிருந்து வெளிக்காதுக்குத் தள்ளப்படும்.

இதைச் சுத்தப்படுத்துவதாக நினைத்து நாம் பயன்படுத்தும் இயர் பட்ஸ், காதில் உள்ள தசைகளைப் பாதிக்கும். இதனால், காதில் எரிச்சல், அரிப்பு ஏற்படலாம்.

மேலும், சில சமயங்களில் வெளியே வர இருக்கும் மெழுகை நாமே உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல், காதைச் சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில், வெதுவெதுப்பான எண்ணெய், தண்ணீர் போன்றவற்றை எல்லாம் உள்ளே வார்ப்பார்கள்.

இது, கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், இவை காது ஜவ்வில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். நாளடைவில் இந்தப் பழக்கத்தால் காது கேளாமைகூட ஏற்படலாம்.

காது ஹைஜீன்
காது ஹைஜீன்

* காதில் இருந்து தானாகவே வெளிவரும் மெழுகை, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

* தினமும் வெளிக்காதையும் சுத்தமான, ஈரமான துணியால் துடைக்க வேண்டும்.

* குளிக்கும்போது, காதுக்குப் பின்புறம் சோப்பைத் தடவி, மிதமாகத் தேய்த்துவிட வேண்டும்.

* குளித்து முடித்த பின்னர், துண்டால் விரலைச் சுற்றி காது மடல்களையும் குழியின் மேற்புறத்தையும், சுத்தம் செய்ய வேண்டும்.

* எந்தக் காரணத்துக்காகவும் உட்காதினுள் விரலை விடக் கூடாது. காதில் அரிப்பு ஏற்பட்டாலோ சீழ் வடிந்தாலோ, தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். எனவே, மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

காது ஹைஜீன்
காது ஹைஜீன்

* ஒருவர் பயன்படுத்திய ஹெட்போனை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது.

* ஹெட்போனில் உள்ள ரப்பரை, குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

* செல்போன் ஸ்பீக்கரில் தூசு சேராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் பயன்படுத்திய செல்போனை இன்னொருவர் பயன்படுத்தும்போது, ஒரு முறை துடைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.

* குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுய மருத்துவம் கூடாது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...