Skip to main content

Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இந்தப் பிரச்னை?

Doctor Vikatan: உடல்பருமன் என்பது பரம்பரையாகத் தொடருமா? சில குடும்பங்களில் எல்லோரும் பருமனாகக் காட்சியளிப்பது ஏன்.  இவர்கள் உடல் பருமனை குறைப்பது சாத்தியமே இல்லையா.? 

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.  

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

உடல் பருமன் பிரச்னைக்கு மரபணு மாறுபாடுகளும் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குழந்தை பிறந்த பிறகு மரபணு மாறுபாடுகளால் பிரச்னைகள் வரலாம்.

தவிர, பரம்பரையாகத் தொடரும் நோய்களை ஆங்கிலத்தில் 'ஹெரிடட்டரி டிசீசஸ்' (Hereditary diseases ) என்று சொல்கிறோம்.

குடும்பத்தில் யாரேனும் உடல் பருமனுடன் இருக்கும்போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அந்த ஜீன் கடத்தப்படலாம். ஆனால், உடல் பருமனுக்கு அது மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியாது. உடல் பருமனைத் தூண்டும் காரணிகளில் இதுவும் ஒன்று. 

உதாரணத்துக்கு, உங்கள் வீட்டில் யாரோ ஒருவர் உடல் பருமனுடன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் காரணமாக உங்களுக்கும் அந்தத் தாக்கம் இருக்கும்.

உடல் எடை அதிகரிப்பது தெரிந்தும் நீங்கள் அதை அலட்சியம் செய்துவிட்டு, உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தாதபட்சத்தில் உங்களுடைய எடை கடகடவென அதிகரிக்கும்.

உணவுமுறை, உடற்பயிற்சி என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருந்தாலே உடல்பருமனில் இருந்து தப்பிக்கலாம்.

உடல் பருமனுக்கான மரபணு உங்களுக்குள் இருப்பதால்  உங்களுக்கும் ரிஸ்க் அதிகரிக்கிறது. பருமனாக இருக்கும் சிலர், 'நான் என்ன பண்றது... எங்க குடும்பவாகே அப்படித்தான்... எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்க' என சொல்வதைக் கேட்கலாம்.

குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதாவது அம்மா-அப்பாவுக்கு நீரிழிவு இருப்பதால் பிள்ளைகளுக்கும்  அது வரலாம். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகள் மூலம் அது வராமலும் தடுக்கலாம்.

உடல்பருமனும் அப்படித்தான். குடும்பத்தில் அந்தப் பிரச்னை இருப்பது தெரிந்து, மற்றவர்கள் ஆரம்பத்திலேயே உணவுமுறை, உடற்பயிற்சி என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருந்தாலே உடல்பருமனில் இருந்து தப்பிக்கலாம். எப்போதுமே வராமலும் பார்த்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...