Skip to main content

Doctor Vikatan: பாதாமை எப்படிச் சாப்பிடணும்? ஊறவைத்து தோலுரித்தது, வறுத்தது, பச்சையாக.. எது சரி?

Doctor Vikatan:  பாதாம் பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எப்படிச் சாப்பிட வேண்டும்... பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிதான் சாப்பிட வேண்டுமா... இது எல்லா நட்ஸுக்கும் பொருந்துமா... பேலியோ டயட்டில் 100 பாதாம் எல்லாம் எடுத்துக்கொள்கிறார்களே, அது சரியானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நட்ஸில் கலோரிகள் மிகவும் அதிகம். உதாரணத்துக்கு, 100 கிராம் பாதாமில் 655 கலோரிகள் உள்ளன. சுமார் 20 கிராம் புரதச்சத்து உள்ளது. 100 கிராம் வால்நட்ஸில் 687 கலோரிகள் உள்ளன. 15 கிராம் புரதச்சத்து உள்ளது. 100 கிராம்  பிஸ்தாவில் 626 கலோரிகளும், 19 கிராம் புரதமும் உள்ளன.

நட்ஸை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைப் போலவே எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது.

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் எடுத்துக்கொள்வதுதான் சரியானது.

பாதாமை பொறுத்தவரை அதன் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவதுதான் சரியானது. ஏனெனில் அதன் தோலில் உள்ள ஃபைட்டேட் எனும் பொருளானது, மற்ற சத்துகள் உட்கிரகிக்கப்படுவதைத் தடுத்துவிடும்.

எனவே,  பாதாமை தோலுடன் எடுக்கும்போது நட்ஸில் உள்ள இரும்புச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் உள்ளிட்ட பிற ஊட்டங்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். அதனால்தான் முதல்நாள் இரவே பாதாமை ஊறவைத்துவிட்டு, மறுநாள் தோல் நீக்கிவிட்டுச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

முதல்நாள் இரவே பாதாமை ஊறவைத்துவிட்டு, மறுநாள் தோல் நீக்கிவிட்டுச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போர் பலரும், நட்ஸ் மிக நல்லது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லதுதான். ஆனாலும், அவற்றில் கலோரி அதிகம் என்பதால் அளவு மிக முக்கியம்.

பாதாம் எடுத்துக்கொள்வது குறித்து ஓர் ஆய்வு நிகழ்த்தப்பட்டது. அதில், 30 கிராம், அதாவது எண்ணிக்கையில் 10 அல்லது 12 என்ற அளவில் பாதாமை சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவானது  சீராக இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இரவு ஊறவைத்த  நட்ஸை காலையில் எடுத்துக்கொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. அதன் பிறகு உடற்பயிற்சி செய்துவிட்டு அல்லது வாக்கிங் முடித்துவிட்டுதான் காபியோ, டீயோ எடுத்துக்கொள்வோர் இருக்கிறார்கள். இப்படி எடுத்துக்கொள்வதும் நல்லதுதான்.

பொதுவாக மாலை 4 மணிவாக்கில் பலருக்கும் ஒருவித பசியோ, உணவுத்தேடலோ வரும். அப்போது நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். நட்ஸை ஓட்ஸ் அல்லது பழத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

நட்ஸை ஓட்ஸ் அல்லது பழத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

100 பாதாம் எடுப்பதெல்லாம் மிகத் தவறானது. சோஷியல் மீடியாவில் பரப்பப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள்.  அப்படிச் சொல்லப்படும் உணவு ஆலோசனைகள் பொதுவாக எல்லோருக்குமானவை என்று அர்த்தமில்லை.

ஒருவரின் வயது, உடல்நிலை, உடல் எடை, உயரம், வாழ்க்கைமுறை என பல விஷயங்களைப் பொறுத்தே அந்த உணவுப்பழக்கம் பின்பற்றப்பட வேண்டுமா, கூடாதா என்று முடிவு செய்யப்படும்.

உங்களுக்கு அது தேவையா, உங்கள் இலக்கு என்ன என்று பார்த்துவிட்டு முறையான நிபுணரின் ஆலோசனையோடு பின்பற்றுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...