Skip to main content

Doctor Vikatan: குடும்பத்தில் அனைவருக்கும் உடல்பருமன்... பரம்பரையாக பாதிக்குமா இந்தப் பிரச்னை?

Doctor Vikatan: உடல்பருமன் என்பது பரம்பரையாகத் தொடருமா? சில குடும்பங்களில் எல்லோரும் பருமனாகக் காட்சியளிப்பது ஏன்.  இவர்கள் உடல் பருமனை குறைப்பது சாத்தியமே இல்லையா.? 

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.  

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

உடல் பருமன் பிரச்னைக்கு மரபணு மாறுபாடுகளும் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குழந்தை பிறந்த பிறகு மரபணு மாறுபாடுகளால் பிரச்னைகள் வரலாம்.

தவிர, பரம்பரையாகத் தொடரும் நோய்களை ஆங்கிலத்தில் 'ஹெரிடட்டரி டிசீசஸ்' (Hereditary diseases ) என்று சொல்கிறோம்.

குடும்பத்தில் யாரேனும் உடல் பருமனுடன் இருக்கும்போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அந்த ஜீன் கடத்தப்படலாம். ஆனால், உடல் பருமனுக்கு அது மட்டும்தான் காரணம் என்று சொல்ல முடியாது. உடல் பருமனைத் தூண்டும் காரணிகளில் இதுவும் ஒன்று. 

உதாரணத்துக்கு, உங்கள் வீட்டில் யாரோ ஒருவர் உடல் பருமனுடன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் காரணமாக உங்களுக்கும் அந்தத் தாக்கம் இருக்கும்.

உடல் எடை அதிகரிப்பது தெரிந்தும் நீங்கள் அதை அலட்சியம் செய்துவிட்டு, உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தாதபட்சத்தில் உங்களுடைய எடை கடகடவென அதிகரிக்கும்.

உணவுமுறை, உடற்பயிற்சி என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருந்தாலே உடல்பருமனில் இருந்து தப்பிக்கலாம்.

உடல் பருமனுக்கான மரபணு உங்களுக்குள் இருப்பதால்  உங்களுக்கும் ரிஸ்க் அதிகரிக்கிறது. பருமனாக இருக்கும் சிலர், 'நான் என்ன பண்றது... எங்க குடும்பவாகே அப்படித்தான்... எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்க' என சொல்வதைக் கேட்கலாம்.

குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதாவது அம்மா-அப்பாவுக்கு நீரிழிவு இருப்பதால் பிள்ளைகளுக்கும்  அது வரலாம். ஆனால், வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகள் மூலம் அது வராமலும் தடுக்கலாம்.

உடல்பருமனும் அப்படித்தான். குடும்பத்தில் அந்தப் பிரச்னை இருப்பது தெரிந்து, மற்றவர்கள் ஆரம்பத்திலேயே உணவுமுறை, உடற்பயிற்சி என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருந்தாலே உடல்பருமனில் இருந்து தப்பிக்கலாம். எப்போதுமே வராமலும் பார்த்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...