Skip to main content

Doctor Vikatan: பயணத்தின்போது கழிவறைக்கு ஓட வேண்டிய அவசரம்.. பிரச்னையைத் தவிர்க்க வழி உண்டா?

Doctor Vikatan: எனக்கு எங்கே பயணம் செய்தாலும் வெறும் வயிற்றுடன்தான் செல்ல வேண்டும். கொஞ்சமாக ஏதேனும் சாப்பிட்டாலும் பாதி பயணத்தில் கழிவறைக்கு ஓடும்படியான அவசரநிலை ஏற்படும். இதனால் கழிவறை வசதியில்லாத பயணங்களின் போது பசியோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது.  இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு என்ன காரணம்,எப்படித் தவிர்ப்பது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

மருத்துவர் பாசுமணி

ஐபிஎஸ்  எனப்படும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' (Irritable bowel syndrome ) பிரச்னையின்  அறிகுறிதான் இது. இந்தப் பிரச்னையில்,  குடலானது பரபரப்பாக, தேவைக்கதிகமாக இயங்கும். வயிற்றுவலியும், உப்புசமும் அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிற்றுப்போக்காகவும் சிலருக்கு மலச்சிக்கலாகவும் இது வெளிப்படலாம். சிலருக்கு இரண்டும் மாறி மாறி வரும்.

பயணம் என்றாலே அலர்ஜியை ஏற்படுத்தும் அளவுக்கு இது பலருக்கும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. பல கிலோ மீட்டர் பயணம் என்றில்லாமல்,  அரைமணி நேர பயணத்தில்கூட இந்தப் பிரச்னை ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறவர்கள் இருக்கிறார்கள்.

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடனே பாத்ரூம் வரும். சிலருக்கு அசைவம் சாப்பிட்டால் வரும்... சிலருக்கு எண்ணெய் உணவுகள் சாப்பிட்டால் வரும். 3-4 கிலோ மீட்டர் பயணம் செய்வதற்குள் அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் சிலருக்கு வரும். இது சுனாமி மாதிரி வரும்.  கட்டுப்பாடின்றி மலம் கழிந்து உடையை நனைத்து அசிங்கமாகி விடுமோ என்ற பயம் பலருக்கும் இருக்கும்.  மழைவரும்போது குடை பிடிக்கிற மாதிரி பயணம் செய்கிற போது அதற்கு முன் சாப்பிடக்கூடிய மாத்திரை இருக்கிறது.

மழைவரும்போது குடை பிடிக்கிற மாதிரி பயணம் செய்கிற போது அதற்கு முன் சாப்பிடக்கூடிய மாத்திரை இருக்கிறது.

சிலருக்கு மேடை ஏறினாலே பதற்றமாகும். அந்த உணர்வைக் கட்டுப்படுத்த ஒரு மாத்திரை இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு மேடை ஏறினால் நிதானமாகப் பேசிவிட்டு வருவார்கள். மருந்தியல் புத்தகத்திலேயே 'மேடை பயம் உள்ளோர் இதை எடுத்துக்கொள்ளலாம்' என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் பயணத்தின்போது பாத்ரூம் வரும் அவஸ்தைக்கு, அந்த நேரத்தில் தற்காலிகமாக குடலின் அழுத்தத்தைக் குறைக்க பிரத்யேக மாத்திரை எடுத்துக்கொண்டு கிளம்பினால் பிரச்னை இல்லாமல் சமாளிக்கலாம். உங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட என்ன காரணம் என்பதைத் தெரிந்து, சரியான சிகிச்சையைப் பெற முறையான மருத்துவரை அணுகுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...