Skip to main content

Doctor Vikatan: நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம்.. முதுமை தோற்றத்தை தள்ளிப்போட எது பெஸ்ட்?

Doctor Vikatan: தினமும் இரவில் முகத்துக்கு க்ரீம் தடவ வேண்டுமா... அந்த க்ரீமை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்.... நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம் இந்த மூன்றும் ஒன்றா... எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

தினமும் காலையில் எழுந்ததும் முகம் கழுவுவது, குளிப்பது, பிறகு மேக்கப் செய்துகொள்வது என சில விஷயங்களை ரொட்டீனாக செய்கிறோம். அதைப் போலவே நைட் ரொட்டீனும் மிக முக்கியம்.  உங்கள் வயது, சருமத்தின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து நைட் க்ரீம், சீரம் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன், அன்றைய தினம் சருமத்துக்கு உபயோகித்த சன் ஸ்கிரீன், மேக்கப் உள்ளிட்ட அனைத்தையும் அகற்ற வேண்டியது மிகமிக முக்கியம். முதலில் முகத்தை கிளென்ஸ் செய்ய  வேண்டும். மேக்கப் போடும்பட்சத்தில் டபுள் கிளென்ஸ்கூட செய்ய வேண்டியிருக்கும்.  அதன் பிறகு ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டும். இப்படி முகத்தை சுத்தப்படுத்திய பிறகு, சருமத்துக்கு மீண்டும் அதற்கான மாய்ஸ்ச்சரைசரை கொடுக்க வேண்டும். இதுபோன்றதொரு நைட் ரொட்டீன் அனைவருக்கும் அவசியம்.

நைட் க்ரீமில் பல வகைகள் உள்ளன. எது, யாருக்கு என்பது வயதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  20 முதல் 25 வயது வரை வெறும் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் போட்டாலே போதுமானதாக இருக்கும்.

பருக்கள், மங்கு போன்ற ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அந்தந்தப் பிரச்னைக்கேற்ற நைட் க்ரீமை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். சாலிசிலிக் ஆசிட், கிளைகாலிக் ஆசிட் என இவற்றை ஆக்டிவ்ஸ் என்று சொல்வோம். எந்தப் பிரச்னைக்கான ஆக்டிவ் என்பது தெரிந்து அது உள்ள நைட் க்ரீமை பயன்படுத்தும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும்.

25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது.

25 வயதுக்கு மேலானவர்கள், ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிப்பது சிறந்தது. சருமம் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும் தன்மையோடு இருக்கும். ஆனாலும், வயதாக, ஆக அந்தத் தன்மை குறைய ஆரம்பிக்கும்.

வெளிப்புறத்திலிருந்து அதைக் கொடுக்கும்விதமாக ஆன்டிஏஜிங் தன்மையுள்ள நைட் க்ரீம் உபயோகிக்கலாம்.  ஆன்டிஏஜிங் தன்மை உள்ளது என்றால், அதில் ரெட்டினாலுக்கு முதலிடம் உண்டு.

Skincare Tips

வயதுக்கேற்ப அதன் சதவிகிதம் மாறும். அதைப் பயன்படுத்தவென குறிப்பிட்ட வழிகளும் உள்ளன. சரும மருத்துவரை அணுகினால், உங்களுக்கான சரியான நைட் க்ரீமையும் அதைப் பயன்படுத்தும் முறையையும் சொல்வார்.

சீரம் என்பது நிறைய நல்ல தன்மைகளைக் கொண்ட சிறிய அளவிலான திரவ வடிவில் இருக்கும். இதை மிகக் குறைவாக உபயோகித்தாலே போதுமானதாக இருக்கும்.

சுத்தமான சருமத்தில் முதலில் சீரம் பயன்படுத்த வேண்டும்.  அது சருமத்தில் ஊடுருவிய பிறகு ஹைட்ரேட்டிங் தன்மையுள்ள மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் உபயோகிக்கலாம்.

ரெட்டினால் இருந்தாலே அது ஆன்டிஏஜிங் க்ரீம்தான். அத்துடன் பெப்டைட்ஸ், வைட்டமின் சி போன்றவை சேரும்போது இன்னும் முழுமையானதாக அமையும். காலையிலிருந்து இரவு வரை சருமம் சந்தித்த பாதிப்புகளைச் சரிசெய்ய நைட் கேர் ரொட்டீன் மிக மிக முக்கியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...