Skip to main content

Doctor Vikatan: வெயிலில் சென்றால் தலைவலி; அலைச்சலைத் தவிர்க்க முடியாதவர்களுக்கு என்ன தீர்வு?

Doctor Vikatan: என் வயது 32. தினமும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்துதான் வேலைக்குச் செல்கிறேன். டூ வீலரில் செல்கிறேன். அலுவலகத்தை அடைந்ததும் தலைவலி மண்டையைப் பிளக்கிறது. தவிர, எப்போதுமே வெயிலில் அலைந்துவிட்டு வந்தாலே எனக்கு தலைவலிக்கிறது. இதற்கு என்ன காரணம்... தவிர்ப்பது எப்படி?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

வெயிலில் அலைந்துவிட்டு இருப்பிடம் திரும்பும்போது சில விஷயங்கள் நடக்கும். ஒரு பக்கம் வெளிச்சூழலின்  வெப்பநிலை அதிகரிக்கும், இன்னொரு பக்கம் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். இந்நிலையில்  உடலின் ரத்தக்குழாய்களின் தன்மையில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே அடிக்கடி தலைவலி  வரும் தன்மை  கொண்டவர்களுக்கு இந்தச் சூழலில் தலைவலியின் தீவிரம் இன்னும் அதிகமாகலாம்.

வெயிலில் போய்விட்டு வரும்போது தலைவலி ஏற்பட பரவலான இன்னொரு காரணம், டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு.  மற்ற நாள்களைவிட, வெயில் காலத்தில் நம் உடலிலுள்ள நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அதிகமாக வியர்வை வெளியேறும். அதை ஈடுகட்ட நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படிக் குடிக்காதபட்சத்தில், 'டீஹைட்ரேஷன் ஹெட்டேக்' (dehydration headache) என்ற தலைவலி ஏற்படும். அதிகம் வெயிலில் நின்றபடி வேலை செய்வோர், ஹெல்மெட் அணிந்துகொண்டே இருப்பவர்களுக்கெல்லாம் இது மிகவும் சகஜம்.

வெயில் காலத்தில் பொதுவாகவே திரவ உணவுகளாகவே எடுத்துக்கொள்ளத் தோன்றும். அதனால், டீ, காபி மட்டுமன்றி, ஜூஸ், பாட்டில் பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வோர் பலர். இவற்றில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் காரணமாக, உடலில் தேவையின்றி குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். அதனால் நீர்ச்சத்து குறையத் தொடங்கும். சிறுநீர் அதிகம் வெளியேறும். இதனாலும் சிலருக்கு தலைவலி வரலாம்.

உடலில் நீர் வறட்சி ஏற்படாதபடி, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

வெயிலில் அலைவதும், ஏசியில் இருப்பதுமாக சிலர் மாறி மாறி இருப்பார்கள். ஏசியில் இருக்கும்போது  ஒருவரது உடலின் வெப்பநிலை ஒரு மாதிரியும், வெளியே சென்றதும் வேறு மாதிரியும் இருக்கும்.  இந்த மாறுபாட்டின் காரணமாகவும் சிலருக்கு தலைவலி வரலாம். இந்தப் பிரச்னைகள் எல்லாமே கோடைக்காலம் முடியும்வரை நீடிக்கலாம். எந்தக் காரணத்தால் தலைவலி வருகிறது என்று தெரிந்து அதைத் தவிர்த்தாலே போதும். தலைவலி மிக அதிகமாக இருக்கும்போது பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். உடலில் நீர் வறட்சி ஏற்படாதபடி, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...