Skip to main content

Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்?

Doctor Vikatan:  மீட்டிங் நடக்கும்போது, வகுப்பறையில் இருக்கும்போதெல்லாம் தூக்கம் வருவது ஏன்...  சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால், இது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்கு முன்பும் தூக்கம் வருகிறதே... தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

கேள்வியில் உங்களுடைய வயது, உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளனவா, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவரா, உடல் பருமன் கொண்டவரா,  சராசரி எடையுடன் இருப்பவரா என்பன போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. அந்தத் தகவல்கள் தெரிந்தால் இன்னும் விளக்கமாக இதற்கு பதில் அளிக்க முடியும்.

இரவில் தாமதமாகத் தூங்கும் வழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது.  அப்படி தாமதமாகத் தூங்கி, குறைந்த நேரம் தூங்கி எழுபவர்களுக்கு அடுத்த நாள் அந்தத் தூக்கம் தொடர்வதில் ஆச்சர்யமில்லை. கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

பொதுவாக இந்தப் பிரச்னைக்கு 'சோம்னாம்புலிசம்' (somnambulism) என்று பெயர். இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது உடல் பருமன்.  உடல் பருமன் கொண்டவர்களுக்கு பொதுவாகவே, இரவில் ஆழ்ந்த உறக்கம் இருக்காது. 

அதேபோல இவர்களுக்கு  மூளையின் தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்தும் திறனை பாதிக்கும் 'நார்கோலெப்ஸி' ( Narcolepsy )  பிரச்னை இருக்கலாம். அதேபோல 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' (Restless legs syndrome) போன்ற பிரச்னைகளும் இருக்கலாம். இதில் இரவில் அடிக்கடி கால்களை உதறியபடி விழித்துக்கொள்வார்கள்.

பெரும்பாலும் பகல் வேளைகளில்தான் இந்த சோம்னாம்புலிசம் பிரச்னையை அதிகம் பார்க்கிறோம். அதாவது பகல் நேரத்தில் சிலருக்குத் தூக்கம் அதிகம் இருக்கும்.

இவை தவிர, 'அப்ஸ்ட்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) என்ற பாதிப்பும் இருக்கலாம். உடல் பருமனானவர்களுக்கு, நாக்கானது சுவாசக்குழாயில் தடையை ஏற்படுத்துவதால் உண்டாகும் பிரச்னை இது. எனவே, உடல் பருமன் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களது தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு, தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கம் இல்லாமலும், விழிப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில் தூக்கம் வருவதுமாக இருக்கலாம்.

ஆல்கஹால் குடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கும் தூக்கத்தில் பாதிப்பு வரும். பெரும்பாலும் பகல் வேளைகளில்தான் இந்த சோம்னாம்புலிசம் பிரச்னையை அதிகம் பார்க்கிறோம்.

அதாவது பகல் நேரத்தில் சிலருக்குத் தூக்கம் அதிகம் இருக்கும். நீரிழிவு பாதித்தவர்களுக்கு  சரியாக மாத்திரைகள் எடுக்காதபட்சத்தில், ரத்தச் சர்க்கரை அளவானது ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும்.

அதன் காரணமாக அவர்கள் சோர்வாக உணர்வது, தூங்கி வழிவது போன்றவற்றைப் பார்க்கலாம். இதே பிரச்னை தைராய்டு பாதிப்புள்ளவர்களுக்கும் இருக்கும். 

எனவே, இதுபோல தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். வாகனம் ஓட்டும்போதோ, பயணத்தின்போதோ இந்தப் பிரச்னையால் ஆபத்துகள் நிகழலாம் என்பதால் இதில் அலட்சியம் வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...