Skip to main content

Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?

Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள்.

குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச் சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் காரணம் என்றும், எடையைக் குறைக்கும்படியும் அறிவுறுத்தி அனுப்பிவிட்டார் மருத்துவர். இது எந்த அளவுக்கு உண்மை... உடல் பருமனால் குழந்தையின்மை பிரச்னை வருமா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.  

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

உடல் பருமன் காரணமாக ஆண், பெண் இருவரின் உடலிலும் கொழுப்பின் சதவிகிதம் அதிகரிக்கும்போது, அதன் விளைவாக அவர்கள் இருவருக்குமே தாம்பத்திய உறவிலும் சிக்கல் வரும்... அதன் தொடர்ச்சியாக கருத்தரிப்பதிலும் சிக்கல் வரலாம்.

உடல் பருமனின் காரணமாக கொழுப்பின் சதவிகிதம் அதிகரிப்பதன் விளைவாக, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிலை உருவாகும். இந்நிலையில்,  நம் உடலின் செல்கள் இந்த இன்சுலினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். 

இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிலையின் காரணமாக,  ஆண் உடலில் டெஸ்டோஸ்டீரான் மற்றும் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் என இரண்டு ஹார்மோன்கள் சுரப்பதும் குறையத் தொடங்கும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால் விந்தணுக்கள் சரியாக உற்பத்தியாகாது. அப்படியே உற்பத்தியானாலும் அவற்றின் தரம் சரியாக இருக்காது.

பருமன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலும் சிக்கல் வரும், தவிர, உறவின் போது விந்தணுக்கள் பெண் உடலில் செல்வதிலும் தடை ஏற்படலாம்.

அதேபோல விறைப்புத்தன்மையில் சிக்கல் வரும். உடல் பருமனின் முக்கிய அடையாளமாக ஆண்- பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் அதிக சதை போடும். அந்த இடத்துப் பருமன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலும் சிக்கல் வரும், தவிர, உறவின் போது விந்தணுக்கள் பெண் உடலில் செல்வதிலும் தடை ஏற்படலாம். 

பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் குறைவதால், கருமுட்டைகளின் தரம் குறைவாக இருக்கும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும். மாதவிடாய் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து குழந்தை தங்கும் வாய்ப்பைக் குறைக்கும். 

உடல் பருமன்

எனவே, உடல் பருமன் என்பது தலை முதல் பாதம்வரை உடலின் அனைத்து உறுப்புகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்துவதைப் போலவே, இல்லற வாழ்க்கையிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, குழந்தைப் பேற்றையும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். குழந்தைக்கான முயற்சியில் இருக்கும் தம்பதியர், உடல் பருமனோடு இருந்தால், இந்த விஷயங்களை முதலில் கவனத்தில் கொண்டு, எடையைக் குறைப்பதில் முயற்சி எடுக்க வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...