Skip to main content

Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?

Doctor Vikatan: பல வருட காலமாக நான் தினமும் இரவில் சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறேன்.  என்றாவது ஒன்றிரண்டு நாள்கள் அது மிஸ் ஆனாலும் அடுத்த நாள் காலைக்கடனைக் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.  தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது சரியான பழக்கம்தானா... எத்தனை பழங்கள் சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார் கோயம்புத்துரைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து என சத்துகளின் பெட்டகம் என்றே வாழைப்பழத்தைச் சொல்லலாம். இதிலுள்ள கார்போஹைட்ரேட்டின் மூலம் உடலுக்குத் தேவையான கலோரி கிடைத்துவிடும்.

வாழைப்பழத்தில் புரதச்சத்து கிடையாது. உடலின் கட்டமைப்புக்கு புரதச்சத்து மிக மிக முக்கியமானது.  உடலின் நோய் எதிர்ப்பாற்றல், திசுக்களைப் பழுதுபார்த்தல், தசை வளர்ச்சி,  எலும்புகளின் ஆரோக்கியம் போன்றவற்றுக்கும் புரதச்சத்து மிக அவசியம்.  கொழுப்புச்சத்தானது, உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து, கொழுப்பில் கரையும் ஊட்டச்சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ள உதவும்.  தவிர, ஹார்மோன்களின் செயல்பாட்டுக்கும் கொழுப்பு அவசியம். ஆனால், வாழைப்பழத்தில்  கொழுப்புச்சத்தும் கிடையாது. எனவே, வாழைப்பழத்தை முழுமையான உணவாக நினைத்துச் சாப்பிட வேண்டாம்.

வாழைக்காய், வாழைப்பழமாக மாறும்போது, அதிலுள்ள ஸ்டார்ச்சானது சர்க்கரைச் சத்தாக மாறுகிறது.

வாழைக்காய், வாழைப்பழமாக மாறும்போது, அதிலுள்ள ஸ்டார்ச்சானது சர்க்கரைச் சத்தாக மாறுகிறது. எனவே, வாழைப்பழமாக உட்கொள்ளும்போது அதிலிருந்து கிடைக்கும் ஆற்றலானது சர்க்கரைச் சத்திலிருந்து பெறப்படுவதாக அமையும். போதுமான அளவு புரதச்சத்தோ, கொழுப்புச்சத்தோ இல்லாமல் வெறும் கார்போஹைட்ரேட்டை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது, அது உடல்பருமனுக்கும், ரத்தச் சர்க்கரை சமநிலையின்மைக்கும் காரணமாகும்.   

நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறவும், நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தவும்  சமச்சீரான பல்வேறு விதமான உணவுகளையும் சாப்பிட வேண்டியது அவசியம். பசியோடு இருக்கும்போதோ, உணவு நேரத்தில் வழக்கமான உணவுக்கான மாற்றாகவோ வாழைப்பழம் சாப்பிடுவதால் வயிறு நிறையுமே தவிர, சரிவிகித சத்துகள் கிடைக்காது. 

தினம் வாழைப்பழம் சாப்பிடுவதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணத்தில் எல்லோரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. குழந்தைகளுக்கு ஸ்மூத்தி செய்யும்போது வாழைப்பழத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். வொர்க் அவுட் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு முன்போ, செய்த பிறகோ வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம்.  குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாகவும்  கொடுக்கலாம்.

மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற பழங்கள், போதுமான அளவு தண்ணீர் போன்றவை அவசியம்.

சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே சாப்பாட்டின் மூலம் குறிப்பிட்ட அளவு கார்போஹைட்ரேட் உடலில் சேர்ந்திருக்கும். அந்நிலையில் வாழைப்பழத்தின் மூலம் கூடுதல் கார்போஹைட்ரேட் உடலில் சேரும். நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைப்பழத்தைத் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானது. மலச்சிக்கலைப் போக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் இதை எடுத்துக்கொள்வோர், மேற்குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். மலச்சிக்கலைப் போக்க காய்கறிகள், சர்க்கரைச்சத்து குறைவாக உள்ள பிற பழங்கள், போதுமான அளவு தண்ணீர் போன்றவை அவசியம்.

ஆரோக்கியமான நபர், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். பசி நேரத்தில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து, இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைத்துவிடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...