Skip to main content

Doctor Vikatan: நிற்கும்போது தலைச்சுற்றல், நடந்தால் சரியாகிறது.. என்ன பிரச்னை, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 55. சில நேரங்களில் நிற்கும்போது ஒருவித மயக்கம் வருகிறது. பிறகு உட்கார்ந்தாலோ, நடந்தாலோ தானாக சரியாகிவிடுகிறது. இது என்ன பிரச்னை, இதற்கு என்ன காரணம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    

ஸ்பூர்த்தி அருண்

மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கலாம்.  அவற்றில் மிக முக்கியமான காரணம், வெயிலின் தாக்கம்.

சென்னை மாதிரியான பகுதிகளில் வெயில் உச்சத்தில் இருப்பதால் பலருக்கும் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்வறட்சி ஏற்படும். 

உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை வருகிறது என்றால் அதன் பின்னணியில் வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். நீங்கள் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா, வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா, பலவீனமாக உணர்கிறீர்களா, பேலன்ஸ் செய்வதில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். 

உட்கார்ந்துவிட்டு எழுந்திருக்கும் நிலையில் உங்களுக்குத் தலைச்சுற்றல் வருகிறது என்றால், அந்த நேரத்தில் உங்களுக்கு ரத்த அழுத்தம் குறைகிறதா என்று பார்க்க வேண்டும்.

அதற்கு 'ஆர்த்தோஸ்டாட்டிக் ஹைப்பர்டென்ஷன்' (Orthostatic hypotension) என்று பெயர்.  இந்தப் பிரச்னை வருவதற்கு டீஹைட்ரேஷன் காரணமாக இருக்கலாம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருப்பவர்களுக்கும் வரலாம். ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும் இப்படி வரலாம். எனவே, முதலில் உங்கள் ரத்த அழுத்த அளவைப் பரிசோதித்துப் பாருங்கள். 

ரத்த அழுத்த அளவு பரிசோதனை

சிலவகையான தலைச்சுற்றல், நடந்தால் சற்று சரியாகும். இதற்கு உடலில் சமநிலையைப் பேணுவதிலும், தலை மற்றும் உடல் அசைவுகளை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு எதிர்வினையாற்றுவதிலும் ஏற்படும் குறைபாடு காரணமாக இருக்கலாம். காதில் உள்ள பேலன்ஸ் மெக்கானிசத்தில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். நீண்டநேரம் நிற்பவர்களுக்கு ரத்தமானது கால் பகுதியில் சேர்ந்து, அதன் விளைவாகவும் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம்.

தலைச்சுற்றலோடு சேர்த்து பேச்சில் தெளிவின்மை, பலவீனம் போன்ற அறிகுறிகளும் இருந்தால் அதை உயர் ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை மற்றும் பக்கவாத பாதிப்புகளுக்கான சோதனைகளையும் செய்து பார்க்க வேண்டியிருக்கும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...