Skip to main content

Doctor Vikatan: 30 வயதில் திடீரென ஏற்பட்ட ஞாபக மறதி; சாதாரண பாதிப்பா, பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 31 வயதுதான் ஆகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அவன் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தது. எந்த விஷயத்தைக் கேட்டாலும் நினைவில்லை என்றான்.  அவனுக்கு குடிப்பழக்கம் இல்லை. இரண்டு நாள்கள் கழித்து நார்மலாகிவிட்டான் என்றாலும் அந்தச் சம்பவம் எனக்கு உறுத்தலாக இருக்கிறது. இந்த இளம்வயதில் இப்படி திடீரென ஞாபக மறதி வருமா... அதற்கு என்ன காரணமாக இருக்கும்...  இதற்கு சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சுபா சார்லஸ்

உங்கள் நண்பருக்கு ஏற்பட்ட திடீர் ஞாபக மறதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  மறதியின் தீவிரம் எப்படியிருந்தது என்பதை வைத்துதான் அது குறித்து விளக்கமளிக்க முடியும். பொதுவாக நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் இப்படி திடீரென மறதி ஏற்படுவதும், பிறகு சரியாவதும் நடந்திருக்கும்.

உங்கள் நண்பர் ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாரா என்று பாருங்கள்.  உதாரணத்துக்கு, டிப்ரெஷன், பதற்றம், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், வலிப்பு, சிலவகை வலிகள் போன்ற பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் தற்காலிக மறதியை ஏற்படுத்தலாம். மேற்குறிப்பிட்ட ஏதேனும் பிரச்னைக்காக அவர் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், உங்கள் நண்பருக்கு மறதி இருப்பதாக உணர்ந்தால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

தீவிரமான மன அழுத்தம் இருந்தாலும் அதன் விளைவாக மறதி பாதிப்பு ஏற்படலாம். சமீபத்தில் உங்கள் நண்பருக்கு அப்படி ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.  மன அழுத்தம் சரியானால் மறதியும் சரியாகும். 

நினைவாற்றலுக்கு மிக முக்கியமானது வைட்டமின் பி12. அது போதுமான அளவு இல்லாதபோதும் மறதி வரலாம்.  மீன், இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள்,  பால், சீஸ் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும். மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் பி 12 சப்ளிமென்ட்ஸும் எடுத்துக்கொள்ளலாம். 

தீவிரமான மன அழுத்தம் இருந்தாலும் அதன் விளைவாக மறதி பாதிப்பு ஏற்படலாம்.

உங்கள் நண்பருக்கு சமீபத்தில் எங்கேயாவது கீழே விழுந்து அடிபட்டதா என்று யோசியுங்கள். அப்படி ஏதேனும் நடந்திருந்தாலும், தற்காலிகமாக மறதி ஏற்படலாம். இது சில மணி நேரம் முதல் சில நாள்கள்வரைகூட நீடிக்கலாம். அவருக்கு ஹைப்போதைராய்டிசம் பாதிப்பு இருந்தாலும் அதன் விளைவுகளில் ஒன்றாக மறதி ஏற்படலாம். எனவே, தைராய்டு அளவுகளை சரிபார்க்கச் சொல்லுங்கள். மருந்துகளில் மாற்றம் தேவையா என்று மருத்துவரைக் கலந்தாலோசிக்கச் சொல்லுங்கள். 

தற்காலிக மறதிக்கு பெரிய சிகிச்சைகள் தேவையில்லை. மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது, நல்ல ஓய்வு, தூக்கம், சத்தான சாப்பாடு, வைட்டமின் பி 12 சப்ளிமென்ட் போன்றவற்றின் மூலம் இதிலிருந்து விடுபடலாம். நினைவிழப்பின் தீவிரம் உங்கள் நண்பருக்குத்தான் தெரியும் என்பதால், ஏதேனும் அசாதாரணமாக உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...