Skip to main content

இறுக்கமற்ற பிரா முதல் பாக்ஸர் ஷார்ட்ஸ் வரை.. உள்ளாடை டிப்ஸ்!

னைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என மேலாடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளுக்கு பலரும் கொடுப்பது இல்லை.

கிழிந்துபோன, பழைய, இறுக்கமான உள்ளாடைகள் அணிந்து அதனால் அவதிப்படுபவர்கள் அதிகம். தோல் மருத்துவர்களிடம் செல்லும் நோயாளிகளில் கணிசமானவர்களுக்குப் பிரச்னை ஏற்பட முக்கியக் காரணமே சுத்தமற்ற உள்ளாடைகள்தான்.

உள்ளாடைகளின் அளவில் ஆரம்பித்து, எப்படி உலர்த்துவது என்பது வரை சொல்கிறார் தோல் மருத்துவர் தீபிகா லுனாவத்.

உள்ளாடை டிப்ஸ்
உள்ளாடை

இடுப்பில் இருந்து சிறிதளவு மட்டுமே நீளும் அளவுக்கு இருக்கும் சாதாரணமான உள்ளாடைகளைத்தான் பலர் பயன்படுத்துகிறார்கள். இதற்குப் பதிலாக, பாக்ஸர் ஷார்ட்ஸ் பயன்படுத்துவது நல்லது. சாதாரணமான உள்ளாடையில், தொடைகள் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு இடையே போதிய காற்று வசதி இருக்காது. இதனால், இடுக்குகளில் வியர்வை படிந்து, தோல் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பாக்ஸர் ஷார்ட்ஸ் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்னை தவிர்க்கப்படும்.

பெரும்பாலானோர் குறிப்பாக, பெண்கள் இறுக்கமாக பிரா அணிகிறார்கள். இது தவறு. இறுக்கமான உடைகளை அணிவதால், தோல் சிவத்தல், தோல் எரிச்சல், உள்ளாடை அச்சுப்பதிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அவரவர் உடலுக்கு ஏற்ப, இறுக்கமற்ற உள்ளாடைகளை அணியலாம்.

உள்ளாடை டிப்ஸ்
உள்ளாடை டிப்ஸ்

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது போல, அனைவரும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும் என்பதைத்தான் மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள்.

அலுவலகம், பள்ளி, கல்லூரி போன்றவற்றுக்குச் செல்பவர்கள், மாலை வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சிறிய குளியல் போட்டுவிட்டு, உள்ளாடை படும் இடங்களை நன்றாகத் துடைத்த பிறகு, வேறு உள்ளாடை அணிய வேண்டும்.

இரவு, படுக்கைக்குச் செல்லும்போது, உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். இரவு, ஏழெட்டு மணி நேரமாவது நல்ல காற்றோட்டத்துடன் இருப்பது அவசியம்.

வெந்நீரோ, குளிர்ந்த நீரோ எதில் வேண்டுமானாலும் உள்ளாடைகளைத் துவைக்கலாம். உள்ளாடை அணியும் இடத்தில் தோல் பிரச்னை இருந்தால், உள்ளாடைகளைத் துவைப்பதற்கு எனப் பிரத்யேக சோப் பயன்படுத்த வேண்டும்.

உள்ளாடை அணியும் இடத்தில் ஏதேனும் அசெளகரியம், எரிச்சல், புண் போன்றவை இருந்தால் ஆன்டிஃபங்கல் லோஷன், ஆன்டிஃபங்கல் ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளாடைகளைத் துவைக்கலாம்.

மற்ற உடைகளுடன் சேர்த்து உள்ளாடையை ஊறவைத்துத் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் துவைப்பதில் தவறு இல்லை. ஆனால், இரண்டுவிதத் துணிகளையும் வெவ்வேறு வாளியில் ஊறவைத்து, வெவ்வேறு சோப் பயன்படுத்தித் துவைக்க வேண்டும்.

குளிர் காலத்தைவிட கோடை காலத்தில் அதிக வியர்வை படிவதால் இன்டர்ட்ரிகோ பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உள்ளாடைகளைக் கட்டாயம் வெயிலில்தான் உலர்த்த வேண்டும். பல வீடுகளில் வீட்டுக்கு உள்ளேயே காயவைக்கிறார்கள். வெயிலில் உலரவைக்க முடியாத சூழலில், நிழலில் உலர்த்தி, அயர்ன்பாக்ஸ் கொண்டு மென்மையாக அயர்ன் செய்தால், கிருமிகள் நீங்கும்.

ஈரமான உள்ளாடையை எந்தக் காரணம் கொண்டும் அணியக் கூடாது. சில சமயங்களில் மழையில் நனைய நேரிட்டால், வீட்டுக்கு வந்த உடனேயே உள்ளாடையை மாற்றிவிட வேண்டும்.

குளிர்காலம் மற்றும் மழைக் காலங்களில் ஈரமான உள்ளாடையைப் பல மணி நேரங்கள் அணிவதால், ‘இன்டெர்ட்ரிகோ’ (Intertrigo) எனும் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது.

குளிர் காலத்தைவிட கோடை காலத்தில் அதிக வியர்வை படிவதால் இன்டர்ட்ரிகோ பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு, மார்பகங்களுக்குக் கீழே, தோல் சிவப்பு நிறத்தில் மாறி, எரிச்சலோடு இருக்கும். அரிப்பு ஏற்படும்.

உள்ளாடை டிப்ஸ்
உள்ளாடை டிப்ஸ்

பொதுவாக, ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு உள்ளாடை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சிந்தடிக், நைலான் உள்ளாடைகளைத் தவிர்த்து, தரமான பருத்தி உள்ளாடைகளை அணிவது நல்லது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...