Skip to main content

Beauty Tips: பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாத பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்!

வேலை பார்க்கிற பல பெண்களுக்குத் தங்கள் அழகுக் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும்கூட, அதைச் செயல்படுத்துவதற்கான நேரம் கிடைக்காது.

சிலருக்கோ, அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்காக, வீட்டிலேயே செய்ய முடிந்த வீக் எண்ட் அழகு பராமரிப்பு டிப்ஸ் தருகிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த்.

இந்த வார இறுதியில் இதை ட்ரை செய்து பாருங்களேன்.

எண்ணெய்க் குளியல்
எண்ணெய்க் குளியல்

சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தாலும் சரி, ஞாயிறு மட்டும் ஒரே நாள் லீவு கிடைத்தாலும் சரி, காலையில் எழுந்ததும் பாதாம் எண்ணெய்யைத் தலைமுடியின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரை தடவி ஊற விடுங்கள்.

தலையில் எண்ணெய் ஊறுகிற அதே நேரம், பப்பாளிப் பழம் அல்லது அதன் தோலை முகத்தில் கால் மணி நேரம் தடவி ஊற விடுங்கள்.

ஃபேஷியல் & பேக்

உங்கள் சருமம் வறண்டது என்றால், பப்பாளியுடன், சிறிதளவு பாசிப்பருப்பு மாவு, பால் ஏடு கலந்து பேக்காக போட்டுகொண்டு 15 நிமிடம் ஊற விடுங்கள்.

பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாக தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்து எடுங்கள்.

இறந்த செல்கள் அனைத்தும் போய்விடும். முகம் பளிச்சென்றாகும். ஃபேஷியல் செய்தது போன்ற உணர்வும் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

உங்கள் சருமம் எண்ணெய்ப்பசை கொண்டது என்றால், ஒரு துண்டு பப்பாளி, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 4 சொட்டு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஏற்கெனவே பப்பாளிப் பழ பேக் போட்டு வைத்துள்ள முகத்தில், இந்த அன்னாசிக் கலவையைத் தடவி, கால் மணி நேரம் காய விடுங்கள்.

பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாக தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்து எடுங்கள். இறந்த செல்கள் அனைத்தும் போய்விடும். முகம் பளிச்சென்றாகி விடும்.

மசாஜ்

இப்போது உடம்புக்குக் கவனம் கொடுக்க வேண்டிய நேரம். உடம்பு முழுக்க முடிந்தால் பாதாம் எண்ணெய், முடியாவிட்டால் தேங்காய் எண்ணெயை உடம்பு முழுக்கத் தடவிக் கொண்டு பாத்ரூமுக்குள் பத்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்து இருங்கள்.

பிறகு, வீட்டில் அரைத்த சீயக்காய் பொடியை அரிசிக் கஞ்சியில் கலந்து (முந்தைய நாளே எடுத்து வைத்துகொள்ளுங்கள்) தலையை அழுந்த தேய்த்து குளித்துவிடுங்கள்.

அடுத்து, கடலை மாவுடன் தயிரைக் கலந்து உடம்பு முழுக்கத் தடவி, கீழிருந்து மேலாக தேய்த்து தேய்த்து, இறந்த செல்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். உடம்பு வழு வழுவென்று ஆகி விடும்.

வாரம் முழுக்க சாமிப்படங்களுக்குப் போட்ட ரோஜாப்பூக்களை முந்தைய இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். புது பூவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்தத் தண்ணீரை வடிகட்டி குளித்து முடித்ததும் தலை முதல் பாதம் வரை ஊற்றிக் குளியுங்கள். ஒரு ரூபாய்கூட செலவில்லாத ஸ்பா இது.

பாத பராமரிப்பு
பாத பராமரிப்பு

பியூமிஸ் ஸ்டோன் கட்டாயம் இருக்கட்டும் உங்கள் பாத்ரூமில். குளித்து முடித்ததும் மறக்காமல், கால்களை அந்தக் கல்லால் தேய்த்துவிடுங்கள். இறந்த செல்கள், பாத வெடிப்பு இல்லாமல் உங்கள் ஸ்லிப்பரே லவ் பண்ணும்படி அழகாக இருக்கும் உங்கள் பாதங்கள்.

குளித்து முடித்து வந்தவுடனே நகங்களை விருப்பப்படி கட் செய்து, ஃபைல் செய்துகொள்ளுங்கள். கலர்லெஸ் நெயில்பாலிஷ் போட்டுக்கொள்ளுங்கள்.

கூந்தல் பராமரிப்பு

குளித்த தலைமுடி காய்ந்ததும் நுனி முடியை லேசாக ட்ரிம் செய்துகொள்ளுங்கள். வாரம் முழுக்க நீங்கள் எந்த ஹேர்ஸ்டைல் செய்தாலும், இப்படி ட்ரிம் செய்வது இது ஒரு நீட் லுக் கொடுக்கும் உங்கள் ஹேர்ஸ்டைலுக்கு.

அடுத்த வரும் திங்கட்கிழமை, ஃபிரெஷ்ஷாக அலுவலகத்துக்குக் கிளம்ப இப்போது நீங்கள் ரெடி!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...