Skip to main content

`கண் வறட்சி முதல் வன்முறை வரை.. மொபைல் போனின் நெகட்டிவ் பக்கங்கள்!' - பெற்றோர்களே கவனம்!

டெக்னாலஜி வளர்ந்துகொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் கையிலும் முழு நேரமும் மொபைல் போன் இருக்கிறது. பெற்றோர்களுடனும், சக குழந்தைகளுடனும் விளையாடுவதைத் தவிர்த்துவிட்டு முழு நேரமும் டிவி, மொபைல் போன் என்றே அவர்களின் நாள்கள் நகர்கிறது. சாப்பிடும்போதும், தூங்கும் நேரங்களிலும்கூட அவர்கள் இந்த மொபைல் போனை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

இதனால் கண் பிரச்னை, தூக்கப் பிரச்னை என பல பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

மொபைல்
மொபைல்

குழந்தைகள் மொபைலை அதிகமாகப் பயன்படுத்துவதால் கண் பிரச்னைகள் அதிகம் ஏற்படுகிறது. 20 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து 20 cm தொலைவில் பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போது கண் பார்வைத் திறன் குறையும் வாய்ப்பு இருக்கும். இதனால் கண்ணாடி போடும் தேவை வரும். கண் சோர்வும் ஏற்படும். குழந்தைகள் தொடர்ந்து மொபைல் போனை அதிக நேரம் பார்க்கும்போது கண்ணை அதிகம் சிமிட்டிக்கொண்டு இருப்பதையும் நாம் பார்க்கலாம். இதற்குக் காரணம், தொடர்ந்து ஒரே பொருளை அதிக நேரம் பார்க்கும்போது கண்ணில் ஏற்படும் வறட்சியே ஆகும்.

இரண்டாவது முக்கியப் பிரச்னையாக கவனச்சிதறல் உள்ளது. அதிகமாக ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் பார்க்கும்போது அதிக கவனச்சிதறல் காரணமாக நிறைய குழந்தைகளுக்கு ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder) என்ற நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 20 நொடி அல்லது 30 நொடியில் ரீல்ஸ் பார்த்துப் பழகிவிட்டு அதிக கவனச்சிதறலினால் அவதியுறும் குழந்தைகள், வகுப்பறையில் ஆசிரியரின் கண்ணைப் பார்த்துப் பாடத்தை கவனிப்பதில்லை. அவர்களால் பொறுமையாக உட்கார்ந்து ஒரு பாடத்தைப் படிக்க முடியவில்லை. கணிதத்தில் ஒரு கணக்குக்குத் தீர்வு காணலாம் என்றெல்லாம் ஒரு செயலைச் செய்ய நினைப்பதில்லை, அவர்கள்.

குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார்
குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார்

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்குப் பேச்சுக் குறைபாடு வரவும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் பேச ஆரம்பிப்பதும் தாமதமாக வாய்ப்புள்ளது.

இப்படி அவர்கள் மொபைல் அதிகம் பயன்படுத்துவதால் கண் பிரச்னைகள், கவனச்சிதறல் மட்டுமல்லாமல் மனம் சார்ந்த பிரச்னைகள், மனச்சோர்வு, குழப்பம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் எதிர்காலத்தில் நிலையாக ஒரு வேலை செய்வது கடினம்; எதையும் யோசித்துச் செய்யும் அளவுக்கு கவனம் இல்லாமல் போகலாம்; ஒரு வேலையைப் பொறுமையாக யோசித்துச் செய்யாமல் அவசர அவசரமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கலாம்; பெரிய ஆளுமைகளாக வளர வேண்டும் என்கிற லட்சியங்கள் இல்லாமல் போகலாம்; எளிதில் முடியும் வேலையைத் தேர்ந்தெடுக்க விரும்பலாம்.

மொபைல் டி-அடிக்ஷன் கிளினிக்
மொபைல் டி-அடிக்ஷன் கிளினிக்

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து வெளியே கொண்டு வரும்போது போதைப் பொருள் கொடுக்காததால் அவர்களுக்குக் கோபம் வருவது, யாரையாவது அடிப்பது, துன்புறுத்துவது போன்ற செயல்களுக்கு மனம் செல்லும். அதேபோன்று மொபைல் போன் கொடுக்காமல் இருக்கும்போதும் இந்த மாதிரியான யோசனைகள் வரக்கூடும். சமீபத்தில் மொபைல் போனை வாங்கிக்கொண்ட ஆசிரியரை காலணியால் தாக்க முயன்ற மாணவியை இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன். இதுபோன்ற காரணங்களால்தான், தற்போது மொபைல் டி-அடிக்ஷன் கிளினிக் என்று நிறைய மன நல மருத்துவமனைகளில் ஆரம்பித்துள்ளார்கள்.

மொபைல் போன் அதிகம் பார்ப்பதால் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் வந்தால், குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வைப் பெறுங்கள், ஒத்திப்போடாதீர்கள்'' என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அருண் குமார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...