Skip to main content

Kidney Stone: சிறுநீரகக்கல்... வராமல் தடுக்க; வந்துவிட்டால் கரைக்க சிம்பிள் வழிமுறைகள்..!

'நீரின்றி அமையாது உலகு’ இது உலகுக்கும் பொருந்தும்... உடலுக்கும் பொருந்தும். நம் உடலின் செயல்பாட்டுக்கு, தண்ணீர் மிக முக்கியம். தினமும் உடலுக்கு, போதிய தண்ணீர் இல்லாமல் போகும்போது, சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும். அதுவே, சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு மிக முக்கியக் காரணம். அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், கல் அடைப்பு உருவாகாமல் தடுக்கும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமே கல் அடைப்பு வராமல் காக்கலாம்.

''வாழைத்தண்டில் செய்யும் சாறு, கூட்டு இவை எல்லாமே சிறுநீரகக் கல்லைக் கரைக்க உதவும் மிகச் சிறந்த உணவு. தவிர, காய்கறி, பழங்கள், தானியங்கள் என கல்லைக் கரைக்கக்கூடிய உணவுகள் நிறையவே இருக்கின்றன'' என்கிறார் ஊட்டச் சத்து நிபுணர் எம்.பாமினி.

''சிறுநீரகக் கற்களில் 'கால்சியம் கற்கள்’ மற்றும் 'ஆக்சலேட் கற்கள்’ என இரு வகை உண்டு. அவற்றுள் எந்த வகைக் கல் வந்திருக்கிறது என்று தெரிந்து, அதற்கேற்ப உணவைக் கடைப்பிடிக்க வேண்டும். திரவ உணவுதான் மிகவும் முக்கியம். நாள் ஒன்றுக்கு, குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். பால், மோர், ஜூஸ், சூப் எல்லாமே திரவங்கள்தான் என்றாலும், சாதாரணக் குடிநீர் குடிப்பது அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால், கண்டிப்பாக எடையைக் குறைக்க வேண்டும். எடை அதிகரிக்காமல் பராமரிக்க வேண்டும்' என்றார்.

இஞ்சி நெல்லிக்காய் ஜூஸ்

டயட்டீஷியன் பாமினி சொன்ன உணவுப்பட்டியலின்படி, சில ரெசிபிகளைச் செய்து வழங்குகிறார் 'சமையல்கலை நிபுணர்’ ரேவதி சண்முகம்.

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக்கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.

சுரைக்காய் வரகரிசி அடை

அரை கப் வரகரிசியைச் சுத்தம் செய்து ஊறவைக்கவும். கால் கப் உளுத்தம்பருப்புடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றையும் தலா ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து ஊறவைக்கவும். பருப்புகளும் வரகரிசியும் ஊறியதும், அவற்றுடன் ஒரு கப் சுரைக்காய்த் துருவல், ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு, ஒன்றரை டீஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவில், அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லியை நறுக்கிக் கலந்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

நன்றாகச் சுத்தம் செய்த ஒரு கப் தினையுடன் கால் கப் உளுத்தம்பருப்பு, அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதில் உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்கவைத்து, தோசையாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் காரச்சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால், இரண்டு நாள்களுக்குள் உபயோகிக்க வேண்டும்.

பீர்க்கங்காய்க் கடைசல்

கால் கிலோ பீர்க்கங்காயைக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் இரண்டு தக்காளி, நான்கைந்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சைமிளகாய் ஆகியவற்றையும் நறுக்கவும். குக்கரில், நறுக்கிய பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் எல்லாவற்றையும் போட்டு, சிறிய நெல்லிக்காய் அளவு புளியை, அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மூடிவைக்கவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி, நீரை மட்டும் வடித்துத் தனியாகவைக்கவும். வெந்த பீர்க்கங்காய்க் கலவையை நன்றாகக் கடையவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, நான்கு பூண்டுப் பற்களை நசுக்கிப்போட்டு சிவந்ததும், பீர்க்கங்காய்க் கடைசலையும் கொட்டி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கடைந்துவிடவும். முதலில் தனியே எடுத்துவைத்த தண்ணீரைச் சேர்த்துக் கலந்தால், சுவையான கடைசல் தயார்.

இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றுக்குமே சூப்பர் காம்பினேஷன் இந்தக் கடைசல்.

சௌசௌ காயை நன்றாகக் கழுவிக்கொண்டு, பாதி மட்டும் எடுத்து நறுக்கிக்கொள்ளவும். தோல் நீக்கத் தேவை இல்லை. ஆறு கோவைக்காய்களை எடுத்து, அவற்றையும் கழுவி, தோல் நீக்காமல் நறுக்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய சௌசௌ, கோவைக்காய், இரண்டு பச்சைமிளகாய், மூன்று சின்ன வெங்காயம், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, கால் கப் தேங்காய்த்துருவல், ஒரு கைப்பிடி கொத்துமல்லித்தழை, ஐந்தாறு பூண்டுப்பல், சுவைக்கேற்றவாறு உப்பு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கி இறக்கவும். ஆறியதும் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். மிகவும் ருசியாக இருக்கும் இந்த சௌசௌ துவையல்.

சௌசௌ துவையல்

• 'ஆக்ஸலேட்’ வகைக் கற்கள் இருப்பவர்கள், இறைச்சி, கோழி இறைச்சி, மீன் சாப்பிடலாம்.

• எல்லா வகைக் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ளலாம். நீர்க்காய்கள் மிகவும் நல்லது.

• சோயா தயாரிப்புகள் மற்றும் கோகோ, சாக்லேட், பிளாக் டீ இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

• ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற 'பெர்ரி’ வகைப் பழங்கள் சாப்பிட வேண்டாம்.

• 'ஸ்பினாச்’ எனப்படும் பசலைக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

• பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச் சத்துடைய காய்கறிகள். சூப், சாலட், பொரியல் செய்து உண்ணலாம்.

• தக்காளி, வெண்டைக்காய் சாப்பிடக் கூடாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இரண்டு காய்களையுமே சாப்பிடலாம்.

• அத்திப்பழம் மற்றும் விளாம்பழம் தவிர, அனைத்துப் பழங்களையும் சாப்பிடலாம்.

• அசைவ உணவில் நண்டு தவிர மற்ற அனைத்து இறைச்சி மற்றும் மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

• அனைத்து தானிய வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.

• பாலில் அதிக கால்சியம் இருப்பதால், குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. எல்லோரும் ஒரு நாளைக்கு 500 மி.லி. பால் அருந்தலாம் என்றால், கால்சியம் கல் உள்ளவர்கள் 250 மி.லி.தான் (தயிரையும் சேர்த்து) அருந்த வேண்டும்.

• வாரம் ஒரு முறை கால்சியம் செரிந்த கேழ்வரகு, கீரை (கூட்டு, கடைசல், பொரியல் தவிர்த்து, குழம்பு அல்லது அடையில் சேர்க்கலாம்), வாரம் ஒருநாள் மட்டும் அனைத்து வகைக் கிழங்குகள்.

• கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தினை தோசை

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...