Skip to main content

Kidney Stone: சிறுநீரகக்கல்... வராமல் தடுக்க; வந்துவிட்டால் கரைக்க சிம்பிள் வழிமுறைகள்..!

'நீரின்றி அமையாது உலகு’ இது உலகுக்கும் பொருந்தும்... உடலுக்கும் பொருந்தும். நம் உடலின் செயல்பாட்டுக்கு, தண்ணீர் மிக முக்கியம். தினமும் உடலுக்கு, போதிய தண்ணீர் இல்லாமல் போகும்போது, சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும். அதுவே, சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு மிக முக்கியக் காரணம். அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், கல் அடைப்பு உருவாகாமல் தடுக்கும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமே கல் அடைப்பு வராமல் காக்கலாம்.

''வாழைத்தண்டில் செய்யும் சாறு, கூட்டு இவை எல்லாமே சிறுநீரகக் கல்லைக் கரைக்க உதவும் மிகச் சிறந்த உணவு. தவிர, காய்கறி, பழங்கள், தானியங்கள் என கல்லைக் கரைக்கக்கூடிய உணவுகள் நிறையவே இருக்கின்றன'' என்கிறார் ஊட்டச் சத்து நிபுணர் எம்.பாமினி.

''சிறுநீரகக் கற்களில் 'கால்சியம் கற்கள்’ மற்றும் 'ஆக்சலேட் கற்கள்’ என இரு வகை உண்டு. அவற்றுள் எந்த வகைக் கல் வந்திருக்கிறது என்று தெரிந்து, அதற்கேற்ப உணவைக் கடைப்பிடிக்க வேண்டும். திரவ உணவுதான் மிகவும் முக்கியம். நாள் ஒன்றுக்கு, குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். பால், மோர், ஜூஸ், சூப் எல்லாமே திரவங்கள்தான் என்றாலும், சாதாரணக் குடிநீர் குடிப்பது அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால், கண்டிப்பாக எடையைக் குறைக்க வேண்டும். எடை அதிகரிக்காமல் பராமரிக்க வேண்டும்' என்றார்.

இஞ்சி நெல்லிக்காய் ஜூஸ்

டயட்டீஷியன் பாமினி சொன்ன உணவுப்பட்டியலின்படி, சில ரெசிபிகளைச் செய்து வழங்குகிறார் 'சமையல்கலை நிபுணர்’ ரேவதி சண்முகம்.

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக்கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.

சுரைக்காய் வரகரிசி அடை

அரை கப் வரகரிசியைச் சுத்தம் செய்து ஊறவைக்கவும். கால் கப் உளுத்தம்பருப்புடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றையும் தலா ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து ஊறவைக்கவும். பருப்புகளும் வரகரிசியும் ஊறியதும், அவற்றுடன் ஒரு கப் சுரைக்காய்த் துருவல், ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு, ஒன்றரை டீஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவில், அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லியை நறுக்கிக் கலந்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

நன்றாகச் சுத்தம் செய்த ஒரு கப் தினையுடன் கால் கப் உளுத்தம்பருப்பு, அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும். இதில் உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்கவைத்து, தோசையாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் காரச்சட்னி தொட்டுச் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால், இரண்டு நாள்களுக்குள் உபயோகிக்க வேண்டும்.

பீர்க்கங்காய்க் கடைசல்

கால் கிலோ பீர்க்கங்காயைக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் இரண்டு தக்காளி, நான்கைந்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சைமிளகாய் ஆகியவற்றையும் நறுக்கவும். குக்கரில், நறுக்கிய பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் எல்லாவற்றையும் போட்டு, சிறிய நெல்லிக்காய் அளவு புளியை, அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மூடிவைக்கவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி, நீரை மட்டும் வடித்துத் தனியாகவைக்கவும். வெந்த பீர்க்கங்காய்க் கலவையை நன்றாகக் கடையவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து, நான்கு பூண்டுப் பற்களை நசுக்கிப்போட்டு சிவந்ததும், பீர்க்கங்காய்க் கடைசலையும் கொட்டி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கடைந்துவிடவும். முதலில் தனியே எடுத்துவைத்த தண்ணீரைச் சேர்த்துக் கலந்தால், சுவையான கடைசல் தயார்.

இட்லி, தோசை, சாதம் எல்லாவற்றுக்குமே சூப்பர் காம்பினேஷன் இந்தக் கடைசல்.

சௌசௌ காயை நன்றாகக் கழுவிக்கொண்டு, பாதி மட்டும் எடுத்து நறுக்கிக்கொள்ளவும். தோல் நீக்கத் தேவை இல்லை. ஆறு கோவைக்காய்களை எடுத்து, அவற்றையும் கழுவி, தோல் நீக்காமல் நறுக்கவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய சௌசௌ, கோவைக்காய், இரண்டு பச்சைமிளகாய், மூன்று சின்ன வெங்காயம், சிறிய நெல்லிக்காய் அளவு புளி, கால் கப் தேங்காய்த்துருவல், ஒரு கைப்பிடி கொத்துமல்லித்தழை, ஐந்தாறு பூண்டுப்பல், சுவைக்கேற்றவாறு உப்பு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கி இறக்கவும். ஆறியதும் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். மிகவும் ருசியாக இருக்கும் இந்த சௌசௌ துவையல்.

சௌசௌ துவையல்

• 'ஆக்ஸலேட்’ வகைக் கற்கள் இருப்பவர்கள், இறைச்சி, கோழி இறைச்சி, மீன் சாப்பிடலாம்.

• எல்லா வகைக் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ளலாம். நீர்க்காய்கள் மிகவும் நல்லது.

• சோயா தயாரிப்புகள் மற்றும் கோகோ, சாக்லேட், பிளாக் டீ இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

• ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற 'பெர்ரி’ வகைப் பழங்கள் சாப்பிட வேண்டாம்.

• 'ஸ்பினாச்’ எனப்படும் பசலைக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

• பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச் சத்துடைய காய்கறிகள். சூப், சாலட், பொரியல் செய்து உண்ணலாம்.

• தக்காளி, வெண்டைக்காய் சாப்பிடக் கூடாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இரண்டு காய்களையுமே சாப்பிடலாம்.

• அத்திப்பழம் மற்றும் விளாம்பழம் தவிர, அனைத்துப் பழங்களையும் சாப்பிடலாம்.

• அசைவ உணவில் நண்டு தவிர மற்ற அனைத்து இறைச்சி மற்றும் மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

• அனைத்து தானிய வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.

• பாலில் அதிக கால்சியம் இருப்பதால், குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. எல்லோரும் ஒரு நாளைக்கு 500 மி.லி. பால் அருந்தலாம் என்றால், கால்சியம் கல் உள்ளவர்கள் 250 மி.லி.தான் (தயிரையும் சேர்த்து) அருந்த வேண்டும்.

• வாரம் ஒரு முறை கால்சியம் செரிந்த கேழ்வரகு, கீரை (கூட்டு, கடைசல், பொரியல் தவிர்த்து, குழம்பு அல்லது அடையில் சேர்க்கலாம்), வாரம் ஒருநாள் மட்டும் அனைத்து வகைக் கிழங்குகள்.

• கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தினை தோசை

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...