Skip to main content

Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 2 வயதாகப் போகிறது. குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. ஒன்றேகால் வயதில் ஒருமுறை யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து, மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். ஆன்டிபயாட்டிக் கொடுத்து சரியானது. ஆனாலும் அடிக்கடி காய்ச்சல் வருகிறது. நாங்களும் ஆன்டிபயாட்டிக் கொடுக்கிறோம்.  ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் காய்ச்சல் திரும்பத் திரும்ப வருகிறது. இதற்கு என்ன காரணம், என்ன தீர்வு?

- சுகந்தி, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

குழந்தையின் வயதைக் குறிப்பிட்ட நீங்கள், ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று குறிப்பிடவில்லை. ஒன்றேகால் வயதில் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்ததாகச் சொல்லியிருப்பதால், ஒருவேளை பெண் குழந்தையாக இருப்பின், அந்த இன்ஃபெக்ஷன் மீண்டும் மீண்டும் வருகிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும்.

பொதுவாகவே, ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண் குழந்தையாக இருந்தால், சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று பார்க்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது, ஆன்டிபயாட்டிக் கொடுக்கிறோம் என்று நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போத, உங்கள் குழந்தைக்கு மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக சிகிச்சை கொடுக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. அப்படிச் செய்கிறீர்கள் என்றால் அது மிக மிகத் தவறு.

ஆன்டிபயாட்டிக்

முதலில் குழந்தைகள்நல மருத்துவரிடம் உங்கள் குழந்தையைக் காட்டி ஆலோசனை பெறுங்கள். ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, தேவைப்பட்டால் பிளட் ஸ்மியர் பரிசோதனை போன்றவற்றைச் செய்து பார்க்க வேண்டியிருக்கும். குழந்தைக்கு அடிக்கடி இன்ஃபெக்ஷனும் காய்ச்சலும் வருவதற்கான காரணங்களை அதில் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்ப சிகிச்சை கொடுத்தால்தான் இந்தப் பிரச்னையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

அதைத் தவிர்த்து நீங்களாக ஆன்டிபயாட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் (antibiotic resistance) எனப்படும் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புத்தன்மை வந்துவிடும். அதன் பிறகு எந்த ஆன்டிபயாட்டிக் மருந்தும் வேலை செய்யாத நிலை வரும். எனவே, பிரச்னையை மேலும் சிக்கலாக்காமல், உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...