Skip to main content

Beauty: மல்லிகை... மயக்கும் வாசனையும் சில அழகுக்குறிப்புகளும்..!

''மனதை மயக்கும் மல்லிகைப்பூவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதன் வாசனை, மருந்தாகவும் பலன் தருகிறது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மல்லிகைப் பூ, உடலுக்குப் புத்துணர்ச்சியையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தருவதுடன், சருமத்தை பளபளப்பாகவும், தலைமுடியை பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்'' என்கிற இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, மல்லிகையின் மகத்துவத்தை மேலும் விவரிக்கிறார்.

மல்லிகை

அரைத்த சந்தனத்தை, மல்லிகைச்சாறுடன் கலந்து கண்ணுக்குக் கீழ் கருமைப் படர்ந்த இடத்தில் தினமும் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையம் காணாமல்போகும். பெண்கள், இதனுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து கலந்து பூசலாம்.

கண்களுக்கு அதிக வேலை தரும்போது, கண்களில் இருந்து நீர் அதிகம் வெளியேறும். இதற்கு மல்லிகைப் பூவை நீரில் கொதிக்கவிட்டு, ஆறியபின் அந்த நீரைக்கொண்டு கண்களைக் கழுவுங்கள். சோர்வும் நீங்கும். கண்களும் பளிச்சென தெரியும்.

மல்லிகைப் பூ உலர்ந்துவிட்டதே என்று தூக்கி எறியாமல், உலர்ந்த மல்லிகைப் பூ ஒரு கப் எடுத்து, அதனுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, நான்கு துண்டு ஆப்பிள் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். இதைக்கொண்டு முகத்துக்குப் பேக் போடுங்கள். சிறிது நீரைக் கொதிக்கவைத்து அதில் ஃபிரெஷ் மல்லிகைப்பூவைப் போட்டு அதைக்கொண்டு முகத்தைக் கழுவுங்கள். உடலிலும் பூசிக் கொள்ளலாம். இதனால், தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். சோர்வு மறைந்து ரெட்டிப்பு பளபளப்பை தருவதுடன் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

Skin care

40 கிராம் மல்லிகைப் பூவுடன் மனோரஞ்சிதம், மகிழம் பூ, ஆவாரம் பூ இவை தலா 20 கிராம் சேர்த்து கலந்து, அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவேண்டும். இரண்டு நாள்களில் பூக்களின் சாறு எண்ணெயுடன் கலந்து அடியில் தங்கிவிடும். இந்த எண்ணெயை தினமும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவி 10 நிமிடம் ஊறவேண்டும். பிறகு, பயத்தமாவால் நன்றாக அலசவேண்டும். இதனால், தோலில் உள்ள சுருக்கம் மறைந்து, பொன்னிறமாக ஜொலிக்கும்; கூந்தலும் நறுமணம் வீசும்.

மல்லிகைப் பூவை உலர்த்தி அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் இரண்டு டீஸ்பூனுடன், இரண்டு டீஸ்பூன் வெந்தயப் பொடியைக் கலந்து, தலைக்கு பேக் போட்டு, அரைமணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் இருமுறை இந்த பேக் போட்டு அலச, பிசுக்கு போய், கூந்தல் பளபளக்கும். செழிப்பாக வளரும். வாசமும் வீசும்.

Sleep

உலர்ந்த மல்லிகைப் பூ - 100 கிராம், மரிக்கொழுந்து, புங்கங்காய் தோல் - தலா 50 கிராம், ரோஜா இதழ் - 20 கிராம், ஓமம் - 10 கிராம் இவற்றை மெஷினில் கொடுத்து நன்றாக பொடித்துக்கொள்ளுங்கள். வாரம் இரண்டு நாள்கள் இந்தப் பொடியை உடல் முழுவதும் தேய்த்துக் குளியுங்கள். சரும பிரச்னைகள் நீங்கும். அந்த நாள் முழுவதும் உடலில் சுகந்த மனம் வீசிக்கொண்டேயிருக்கும்.

இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு மஸ்லின் துணியில் மல்லிகைப் பூவை வைத்து தலையணைக்குள் வைத்துவிடுங்கள். அறை முழுவதும் வாசம் வீசுவதுடன், தூக்கம் கண்களைத் தழுவும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க முடியும்.

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...