Skip to main content

திருப்பத்தூர்: குப்பை கூளங்கள் - கழிவு நீர் - துர்நாற்றம்... சுகாதாரத்தை காக்குமா நகராட்சி?

சுகாதார சீர்கேடு

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சிவராஜ்பேட்டை 3-வது வார்டில் 350க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கழிவுநீர் செல்லும் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் அப்படியே தேங்கி மிகவும் அசுத்தமான நிலையில் ‌தூய்மையற்று சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது.

இவ்விடத்தில் வீட்டிலிருந்து வரும் கழிவுகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், உணவகங்கள், பல்வேறு இடத்திலிருந்து வரும் கழிவுகள் இந்த கால்வாயில் கலக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள், சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவர்கள் பெறும் சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரித்த போது, "இந்த இடம் கடந்த சில மாதங்களாகவே இப்படி தான் உள்ளது. இரவு நேரங்களில் சிலர் இவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டி விட்டுச் செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலரும் இந்த இடத்தில் குப்பைகளை வீசி செல்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சாலையின் அருகிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இவ்விடத்தில் ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.

மறுபுறம் இருக்கும் குப்பைகளை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் அதே இடத்திலேயே நெருப்பு மூட்டி எரிக்க விடுகின்றனர். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு அந்த பகுதியில் புகை மூட்டம் உருவாவதால் சாலையைக் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். எதிரே வாகனங்கள் வருவது தெரியாது என்பதால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது." என்றனர்.

அடிக்கடி வரும் மர்மக் காய்ச்சல்... மக்கள் அவதி!

மேலும், இப்பகுதில் வசிக்கும் மக்கள் கூறுகையில், "இந்த பிரச்னையை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை தூய்மை பணியாளர்களும் இந்த இடத்தை பார்வையிடாமல் கண்டும் காணாமல் உள்ளார்கள். இந்த விவகாரம் குறித்துப் பல முறை‌ அதிகாரிகளிடம் கூறியுள்ளோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படவில்லை. தூய்மை பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை கால்வாயில் தேங்கி இருக்கும் குப்பைகளை எடுத்து அதன் அருகிலேயே அகற்றிச் சென்று விடுகின்றனர். இரண்டு நாள்களுக்குள் மீண்டும் அதே நிலைக்குச் சென்று விடுகின்றது. இதனால் எங்களுக்குத்தான் துர்நாற்றமும் நோய்த் தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது அடிக்கடி குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் வந்து உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது." என்றனர்.

ஆசிரியர் நகர்: கால்வாய் வசதி இல்லை...

ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் இதைப் பற்றிக் கூறுகையில், "ஆசிரியர் நகரில் வசிக்கும் வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால், வெளியேறும் கழிவுகள் சுடுகாட்டுக்கு அருகில் இருக்கும் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு சிறிய இடத்தில் கழிவுநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது.

சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வரும் கழிவுகளும் இங்கு தான் கலக்கிறது. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் இது அப்படியே சேர்ந்து நிற்கிறது.

சில மாதங்களுக்கு முன்பாக குப்பைகளும் பெரிதளவு சேர்ந்திருந்தது. அப்போதைய நகராட்சி நிர்வாகம் இயந்திரத்தின் உதவியுடன் குப்பைகளை அகற்றினார்கள்.

இந்த இடத்தின் அருகாமையில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதால் இங்கு வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் வேலை முடிந்ததும் குப்பைகளை இங்க வீசி செல்கிறார்கள்.

இதன் அருகே சிறிது தொலைவில் பேருந்து நிறுத்தமும், தனியார் கல்லூரியும் இயங்கி வருகிறது. கொசுக்கள் பெருமளவில் உருவாகுவதால் இரவு நேரங்களில் உறங்குவதற்கு சிரமாக உள்ளது. இதனால் மலேரியா, டெங்கு போன்ற நோய்களும் அடிக்கடி காய்ச்சலும் வருகிறது. மாதத்தில் மூன்று முறையாவது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலை இப்படியே நீடித்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

கால்வாய் அமைத்துக் கழிவுநீர் செல்ல வழிவகை செய்திருந்தால் இதுபோன்ற அவலநிலை ஏற்பட்டிருக்காது. கழிவுநீர் செல்ல வழிவகை செய்வதோடு நிற்காமல், கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில்..

மேலும் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தையொட்டி (BDO Office) இருக்கும் கால்வாயிலும் இதே போன்ற சூழல் நிலவிக் காணப்படுகிறது. குப்பைகள் குவிந்து குப்பைத் தொட்டி போல் காட்சியளிக்கிறது. பெயர் சொல்ல விரும்பாத பூ கடைக்காரர் ஒருவர் கூறுகையில், "இந்த இடத்தை பாருங்கள் எவ்வளவு மோசமாக உள்ளது அப்படியே வருகிறார்கள் சிறுநீர் கழித்து விட்டுச் செல்கிறார்கள் குப்பைகளையும் போடுகிறார்கள் கேட்டால் என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள்.

இது இப்படியே நீடித்தால் நாங்கள் எப்படி இந்த இடத்தில் தொழில் நடத்துவது மூக்கை பிடித்த படியே வேலைச் செய்யும் அவல நிலை உருவாகியுள்ளது. இதுபோன்ற போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மாநிலத்தில் பல பகுதிகளில் வித்தியாசமான வியாதிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலும் இருக்கும் நிலையில், இது போன்ற சுகாதார சீர்கேட்டிற்கு‌ முற்றுப் புள்ளி வைத்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. கவனிக்குமா அரசு நிர்வாகம்?!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...