Skip to main content

Health: மழை & குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

பழக்கம் காரணமாக், குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரிலேயே குளிப்பார்கள் சிலர். அப்படி செய்யலாமா என நரம்பியல் மருத்துவர் பாலமுருகனிடம் கேட்டோம்.

``மனிதர்கள் `warm-blooded animal' வகையைச் சேர்ந்தவர்கள். நம்முடைய உடலின் வெப்பநிலையை நம் தோலிலிருக்கிற ரத்த ஓட்டம்தான் சீராக வைத்திருக்க உதவுகிறது. திடீரென அதிகப்படியான குளிர்ச்சி நம்முடைய தோலைத் தாக்கும்போது ரத்தக்குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் ரத்தம் இதயத்துக்குள் வரும். இதயம் அந்த ரத்தத்தை பம்ப் செய்து மூளைக்கு அனுப்பும். மூளைக்கு அதிகப்படியான ரத்தம் செல்லும்போது மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த ரத்தக்கசிவு மூளையின் உட்புறமும் ஏற்படலாம், வெளிப்புறமும் ஏற்படலாம். உள்ளுக்குள் ஏற்படும்போது பக்கவாதம் வரலாம். திடீரென மயக்கமும் ஏற்படலாம். மயக்கத்துக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றி விடலாம் என்றாலும் முப்பத்து மூன்று சதவிகிதம் உயிராபத்தும் இருக்கிறது.

குளியல்

இத்தனை டிகிரிக்கு மேல் ஓ.கே!

குளிர்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மிகக் குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்ப்பதே நல்லது. நாம் குளிக்கும் நீர் 25 டிகிரி வெப்ப நிலைக்கு மேல்தான் இருக்க வேண்டும். 25 டிகிரி வெப்பத்தை எப்படித் தெரிந்துகொள்வது? நம் வீடுகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைத்துக் குடிக்கும் நீர் 30 டிகிரி வெப்பத்தில் இருக்கும். இதுவே மண்பானையில் என்றால் 27 அல்லது 28 டிகிரியில் இருக்கலாம். குளிக்கும் நீரில், நம் கையை வைத்துப் பார்த்தாலே `குடிக்கும் நீரையொத்த வெப்பம் இருக்கிறதா' என்பதை உணர முடியும்.

அதிகப்படியான குளிர்ச்சி ஆபத்தே..!

இரவு நேரங்களில் வெளிப்புற வெப்பநிலை 24 அல்லது 23 டிகிரி வரை குறையும். குளிர்காலத்தில் இது இன்னமும் குறையும். இரவிலும் குளிர்காலத்திலும் தண்ணீர் மிகவும் சில்லென்று இருக்கும். இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காகக்கூடக் குளிர்ந்த நீரை முதலில் தலையில் ஊற்றக் கூடாது.

நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் எம். பாலமுருகன்

குளிர் காலத்தில் ஆற்று நீரில் தலைகீழாக டைவ் அடிக்கலாமா?

குளிர் காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் ஆற்றுநீரில் தலைகீழாகக் குதிப்பது நல்லதல்ல. உடம்பின் வெப்பநிலை திடீரென குறையும்போது நான் ஏற்கெனவே சொன்னதுபோல மூளைக்கு அதிக ரத்தம் சென்று பிரச்னை வரலாம். வீட்டில் குளித்தாலும் சரி, நீர் நிலைகளில் குளித்தாலும் சரி, முதலில் பாதங்களில், அடுத்து முட்டிகளில், பிறகு இடுப்பில், நெஞ்சில், கடைசியாகத்தான் தலையில் தண்ணீர் பட வேண்டும். இதுதான் சரியான குளியல் முறை.

ஷவரில் குளிக்கும்போது இந்தப் பிரச்னை வருமா?

மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுகிற அளவுக்கு, ஷவரில் நீர் வேகமாக வருவதில்லை. மற்றபடி, ஷவரில் வருகிற நீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், அதைத் தவிர்ப்பதே நல்லது.

குளியல்

நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது இந்தப் பிரச்னை வராதா?

வேகமான நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போதுகூட மூளை நரம்புகளில் சேதம் ஏற்படலாம். அதனால்தான், நீர்வீழ்ச்சி வேகமாக இருக்கும்போது பொதுமக்களைக் குளிப்பதற்கு அனுமதிக்க மாட்டார்கள். நீர்வீழ்ச்சியின் வேகம் மூளை நரம்புகளை மட்டுமல்ல கண் நரம்புகளையும் பாதிக்கலாம்.

இந்த அறிவுறுத்தல்கள் குழந்தைகளில் ஆரம்பித்து வயதானவர்கள் வரை பொருந்தும்'' என்கிறார் நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...