Skip to main content

Doctor Vikatan: ஏற்கெனவே இருமுறை சிசேரியன்... மூன்றாவது சிசேரியன் செய்வது பாதுகாப்பானதா?

Doctor Vikatan: என் வயது 32. இரண்டு குழந்தைகளைப் பெற்றநிலையில், இப்போது மூன்றாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். முதல் இரண்டு பிரசவங்களுமே சிசேரியன்தான். மூன்றாவதும்  பெரும்பாலும் சிசேரியனாகவே இருக்கும் என்றுபலரும் சொல்கிறார்களே.... அது பாதுகாப்பானதா....? எனக்கு முதல் இரண்டு கர்ப்பங்களின் போதும் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்தது. மூன்றாவது முறையும் அப்படி வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

உங்களுக்கு இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில், மூன்றாவது குழந்தைக்குத் திட்டமிடுவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.  ஏனெனில் மூன்றாவது முறையாக நீங்கள் கருத்தரிக்க முயலும்போது உங்களுக்கு நஞ்சானது  ( Adherent placenta ) சிசேரியன் செய்த தழும்போடு ஒட்டியிருப்பது அல்லது நஞ்சு கீழே இருக்கக்கூடிய பிளசென்ட்டா ப்ரீவியா ( Placenta previa ) என்ற பிரச்னை வருவது, கர்ப்பத்தின் 9வது மாதத்தில், ஏற்கெனவே போடப்பட்ட தையல் விட்டுப்போவது போன்ற பிரச்னைகள் மூன்றாவது முறை சிசேரியன் செய்யும்போது அதிகம் பாதிக்க வாய்ப்புகள் உண்டு. எனவே, இரண்டு சிசேரியன் பிரசவங்களுக்குப் பிறகு மூன்றாவது கர்ப்பத்தைத் தவிர்ப்பதே சிறந்தது.

ஒருவேளை இரண்டு குழந்தைகளில் ஒன்று ஆரோக்கியமாக இல்லாதது போன்ற வேறு காரணங்களுக்காக நீங்கள் மூன்றாவது முறை குழந்தைபெற்றுக்கொள்ள நினைத்தால், அதை அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி செக்கப்புக்கு செல்ல வேண்டும். அனீமியா இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதல் இரண்டு கர்ப்பங்களிலும் யூரினரி இன்ஃபெக்ஷன் வந்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது மீண்டும் வராமலிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் உடலில் நிறைய  மாற்றங்கள் நிகழ்வதால் பெண்களுக்கு யூரினரி டிராக்ட் இன்ஃபெக்ஷன் வருவது மிகவும் சகஜம். சிறுநீரை அடக்கவே கூடாது. மாதந்தோறும் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் யூரின் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கலாம். அதனால் குறைப்பிரசவம் நிகழவும் வாய்ப்பு உண்டு. 

யூரினரி இன்ஃபெக்ஷன் (Urinary infection)

வெஜைனாவை சுத்தப்படுத்தும்போது முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாகத்தான் சுத்தப்படுத்த வேண்டும். அதன் மூலம் கிருமித்தொற்று பாதிக்காமல் தடுக்க முடியும். வெஜைனாவை சுத்தப்படுத்த வாசனையான  மற்றும் ஸ்ட்ராங்கான பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம். தவிர, ஒரு அல்ட்ரா சவுண்ட் சோதனையின் மூலம் உங்களுக்கு அடிக்கடி இந்தத் தொற்று வருவதற்கான காரணத்தையும் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுப்பது பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...