Skip to main content

Doctor Vikatan: திருமணமாகாத பெண்கள்... மார்பகப் புற்றுநோய் அபாயத்திலிருந்து மீள்வது எப்படி?

Doctor Vikatan: திருமணமாகாத பெண்களுக்கும், குழந்தை இல்லாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகமா... அவர்கள் அந்த ரிஸ்க்கிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோயியல் மருத்துவர் ரம்யா நடராஜன்.

புற்றுநோயியல் மருத்துவர் ரம்யா நடராஜன்

திருமணமான பெண்களோடு ஒப்பிடும்போது, திருமணமாகாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் ரிஸ்க் 4 முதல் 5 சதவிகிதம் அதிகம்தான். இதற்கு சில காரணங்கள் உண்டு.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் சிலவிதமான ஹார்மோன் மாறுதல்கள் ஏற்படுகின்றன.  அதாவது கர்ப்பத்தின் போது ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன் சுரப்பு குறைந்து, புரொஜெஸ்ட்ரான் (progesterone) என்ற ஹார்மோன் சுரப்பு  அதிகமாகிறது.

அதே போல தாய்ப்பால் ஊட்டும்போது புரொலாக்டின் (prolactin) என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது.  இந்த ஹார்மோன் மாற்றங்கள் எல்லாம்  மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ரிஸ்க்கிலிருந்து  அந்தப் பெண்ணைக் காப்பாற்றும்.

தாய்ப்பால் I சித்திரிப்பு படம்

கர்ப்பிணிகளோடு ஒப்பிடும்போது திருமணமாகாத பெண்களுக்கும் குழந்தை பெறாத பெண்களுக்கும் அவர்களது ஆயுள்காலத்தில் மாதவிலக்கு சுழற்சியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவும் அதிகமாக இருக்கும். ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ரிஸ்க்கும் அதிகமாக இருக்கும். 

திருமணமாகி, தாய்மை அடையும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கவே கூடாது. திருமணத்தையும் குழந்தைப்பேற்றையும் தவிர்க்கும் பெண்கள், மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளிகளில் தவறாமல் செய்துகொள்ள வேண்டியது அவசியம். சுய பரிசோதனையும் செய்து பார்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...