Skip to main content

Doctor Vikatan: திருமணமாகாத பெண்கள்... மார்பகப் புற்றுநோய் அபாயத்திலிருந்து மீள்வது எப்படி?

Doctor Vikatan: திருமணமாகாத பெண்களுக்கும், குழந்தை இல்லாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகமா... அவர்கள் அந்த ரிஸ்க்கிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோயியல் மருத்துவர் ரம்யா நடராஜன்.

புற்றுநோயியல் மருத்துவர் ரம்யா நடராஜன்

திருமணமான பெண்களோடு ஒப்பிடும்போது, திருமணமாகாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிக்கும் ரிஸ்க் 4 முதல் 5 சதவிகிதம் அதிகம்தான். இதற்கு சில காரணங்கள் உண்டு.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் சிலவிதமான ஹார்மோன் மாறுதல்கள் ஏற்படுகின்றன.  அதாவது கர்ப்பத்தின் போது ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன் சுரப்பு குறைந்து, புரொஜெஸ்ட்ரான் (progesterone) என்ற ஹார்மோன் சுரப்பு  அதிகமாகிறது.

அதே போல தாய்ப்பால் ஊட்டும்போது புரொலாக்டின் (prolactin) என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது.  இந்த ஹார்மோன் மாற்றங்கள் எல்லாம்  மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ரிஸ்க்கிலிருந்து  அந்தப் பெண்ணைக் காப்பாற்றும்.

தாய்ப்பால் I சித்திரிப்பு படம்

கர்ப்பிணிகளோடு ஒப்பிடும்போது திருமணமாகாத பெண்களுக்கும் குழந்தை பெறாத பெண்களுக்கும் அவர்களது ஆயுள்காலத்தில் மாதவிலக்கு சுழற்சியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவும் அதிகமாக இருக்கும். ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ரிஸ்க்கும் அதிகமாக இருக்கும். 

திருமணமாகி, தாய்மை அடையும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கவே கூடாது. திருமணத்தையும் குழந்தைப்பேற்றையும் தவிர்க்கும் பெண்கள், மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளிகளில் தவறாமல் செய்துகொள்ள வேண்டியது அவசியம். சுய பரிசோதனையும் செய்து பார்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...