Skip to main content

Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ..!

உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வும், டயட் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துவிட்டது. அதே நேரம், பலரும் எடையைக் குறைக்க லோ கார்ப் டயட், நோ கார்ப் டயட் என்கிற இந்த இரண்டு டயட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையிலேயே இவ்விரு டயட்டும் உடல் பருமனை பாதுகாப்பான முறையில் குறைக்குமா, இவற்றை ஃபாலோ செய்யும்போது எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.

Diet

''லோ கார்ப் டயட் (Low Carb Diet)

எடை குறைக்க விரும்புவர்களுக்கு நல்ல தேர்வு இந்த டயட் தான். மாவுச்சத்துக்கு நம் உணவில் முக்கியமான இடம் இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மட்டுமல்ல, தினசரி செயல்பாட்டுக்கே மாவுச்சத்து அவசியம் தேவை. நாம் மாவுச்சத்தை சாப்பிடும்போது, நம் உடல் அதை உடைத்து கல்லீரலில் சேமித்து வைக்கிறது. பிறகு, அது நம்முடைய தினசரி செயல்பாடுகளுக்கு செலவழிக்கப்படுகிறது. வேலைகுறைவான வாழ்க்கைமுறை, சொகுசான வாழ்க்கைமுறை, உடலுழைப்பு குறைவான வாழ்க்கைமுறையால், இப்படி சேமித்து வைக்கப்பட்ட மாவுச்சத்து பயன்படுத்தப்படாமல் போகும். அதை நம் உடல் கொழுப்பாக மாற்றி உடலின் பல பாகங்களில், குறிப்பாக வயிற்றுப்பகுதியில் சேகரித்து வைக்கும். விளைவு... உடல் பருமன். இவர்களுக்கு மாவுச்சத்து குறைவான 'லோ கார்ப் டயட்' மிகவும் உதவும்.

மாவுச்சத்தைக் குறைக்கும்போது, வேறு வழியில்லாமல் மைதாவால் தயாரிக்கப்பட்ட உடலுக்கு கெடுதல் செய்யும் மாவுப்பொருள்களை சுத்தமாக தவிர்க்க வேண்டி வரும். கூடவே, முறுக்கு, பஜ்ஜி என எண்ணெயில் பொரித்த உணவுகளையும்... இதனால் உடல் எடை குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

diet

லோ கார்ப் டயட் - கவனத்தில் கொள்ள வேண்டியவை

இந்த டயட்டை பொறுத்தவரை மாவுச்சத்தைக் குறைப்பதால், புரதச்சத்து மிகுந்த உணவுகளைக் கூட்டி, கூடவே தேவையான கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் டயட்டில் சேர்த்தால், உடல் பருமன் குறையும். அதே நேரம் புரதச்சத்துள்ள உணவுகளையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் சற்று கூடுதலாகச் சாப்பிடும்போது, அவற்றை செரிமானம் செய்வதற்கு நார்ச்சத்து மிகுந்த காய்கறி, பழங்கள், கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து குறையும்பட்சத்தில், உடலால் கழிவை வெளியேற்றுவது கடினம். விளைவு, வயிறு உப்புசம், மந்தம், வாயுத்தொல்லை என வயிறு தொடர்பான பிரச்னைகள் வரும், கவனம்.

மாவுச்சத்து இல்லாத 'நோ கார்ப் டயட்' ( No Carb Diet)

நம் ஊரில் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை, குறிப்பாக, அரிசி உணவுகளை நிறைய சேர்த்துக்கொள்கிறோம். அதனால், அவற்றை திடீரென முழுமையாகத் தவிர்த்தாலோ அல்லது பெருமளவில் தவிர்த்தாலோ உடல் எடை குறைகிறது. இந்த டயட்டை எடுப்பவர்களுக்கு நீரிழிவு இருந்தால், அது கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதேபோல், கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தாலும் கட்டுப்படுகிறது. நூறு கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த டயட்.

தாரிணி கிருஷ்ணன்

நோ கார்ப் டயட் - கவனத்தில் கொள்ள வேண்டியவை

எழுந்து நடப்பதற்கே சிரமமாக இருக்கும் அளவுக்கு உடல் பருமன் கொண்டவர்கள், திடீரென சில கிலோ எடை குறையும்போது புத்துணர்ச்சியாக உணர்வார்கள். 'நம்மாலும் வெயிட் லாஸ் செய்ய முடியும்' என்று நம்பிக்கையாக உணர்வார்கள். இதெல்லாம் நன்மைகள்... ஆனால், மாவுச்சத்து உடம்பின் தினசரி செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த டயட்டை ஃபாலோ செய்வதற்கு முன்னால் டயட்டீஷியனை சந்தித்து அவருடைய ஆலோசனையைக் கேட்பது நல்லது. அதுதான் உங்கள் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பும்கூட'' என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...