Skip to main content

Diet: 100 கிலோவுக்கும் அதிகமான உடல் எடை குறையணுமா? ஆரோக்கியமான டயட் பிளான் இதோ..!

உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வும், டயட் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துவிட்டது. அதே நேரம், பலரும் எடையைக் குறைக்க லோ கார்ப் டயட், நோ கார்ப் டயட் என்கிற இந்த இரண்டு டயட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையிலேயே இவ்விரு டயட்டும் உடல் பருமனை பாதுகாப்பான முறையில் குறைக்குமா, இவற்றை ஃபாலோ செய்யும்போது எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம்.

Diet

''லோ கார்ப் டயட் (Low Carb Diet)

எடை குறைக்க விரும்புவர்களுக்கு நல்ல தேர்வு இந்த டயட் தான். மாவுச்சத்துக்கு நம் உணவில் முக்கியமான இடம் இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மட்டுமல்ல, தினசரி செயல்பாட்டுக்கே மாவுச்சத்து அவசியம் தேவை. நாம் மாவுச்சத்தை சாப்பிடும்போது, நம் உடல் அதை உடைத்து கல்லீரலில் சேமித்து வைக்கிறது. பிறகு, அது நம்முடைய தினசரி செயல்பாடுகளுக்கு செலவழிக்கப்படுகிறது. வேலைகுறைவான வாழ்க்கைமுறை, சொகுசான வாழ்க்கைமுறை, உடலுழைப்பு குறைவான வாழ்க்கைமுறையால், இப்படி சேமித்து வைக்கப்பட்ட மாவுச்சத்து பயன்படுத்தப்படாமல் போகும். அதை நம் உடல் கொழுப்பாக மாற்றி உடலின் பல பாகங்களில், குறிப்பாக வயிற்றுப்பகுதியில் சேகரித்து வைக்கும். விளைவு... உடல் பருமன். இவர்களுக்கு மாவுச்சத்து குறைவான 'லோ கார்ப் டயட்' மிகவும் உதவும்.

மாவுச்சத்தைக் குறைக்கும்போது, வேறு வழியில்லாமல் மைதாவால் தயாரிக்கப்பட்ட உடலுக்கு கெடுதல் செய்யும் மாவுப்பொருள்களை சுத்தமாக தவிர்க்க வேண்டி வரும். கூடவே, முறுக்கு, பஜ்ஜி என எண்ணெயில் பொரித்த உணவுகளையும்... இதனால் உடல் எடை குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

diet

லோ கார்ப் டயட் - கவனத்தில் கொள்ள வேண்டியவை

இந்த டயட்டை பொறுத்தவரை மாவுச்சத்தைக் குறைப்பதால், புரதச்சத்து மிகுந்த உணவுகளைக் கூட்டி, கூடவே தேவையான கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் டயட்டில் சேர்த்தால், உடல் பருமன் குறையும். அதே நேரம் புரதச்சத்துள்ள உணவுகளையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் சற்று கூடுதலாகச் சாப்பிடும்போது, அவற்றை செரிமானம் செய்வதற்கு நார்ச்சத்து மிகுந்த காய்கறி, பழங்கள், கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து குறையும்பட்சத்தில், உடலால் கழிவை வெளியேற்றுவது கடினம். விளைவு, வயிறு உப்புசம், மந்தம், வாயுத்தொல்லை என வயிறு தொடர்பான பிரச்னைகள் வரும், கவனம்.

மாவுச்சத்து இல்லாத 'நோ கார்ப் டயட்' ( No Carb Diet)

நம் ஊரில் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை, குறிப்பாக, அரிசி உணவுகளை நிறைய சேர்த்துக்கொள்கிறோம். அதனால், அவற்றை திடீரென முழுமையாகத் தவிர்த்தாலோ அல்லது பெருமளவில் தவிர்த்தாலோ உடல் எடை குறைகிறது. இந்த டயட்டை எடுப்பவர்களுக்கு நீரிழிவு இருந்தால், அது கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதேபோல், கொலஸ்ட்ரால் பிரச்னை இருந்தாலும் கட்டுப்படுகிறது. நூறு கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த டயட்.

தாரிணி கிருஷ்ணன்

நோ கார்ப் டயட் - கவனத்தில் கொள்ள வேண்டியவை

எழுந்து நடப்பதற்கே சிரமமாக இருக்கும் அளவுக்கு உடல் பருமன் கொண்டவர்கள், திடீரென சில கிலோ எடை குறையும்போது புத்துணர்ச்சியாக உணர்வார்கள். 'நம்மாலும் வெயிட் லாஸ் செய்ய முடியும்' என்று நம்பிக்கையாக உணர்வார்கள். இதெல்லாம் நன்மைகள்... ஆனால், மாவுச்சத்து உடம்பின் தினசரி செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்த டயட்டை ஃபாலோ செய்வதற்கு முன்னால் டயட்டீஷியனை சந்தித்து அவருடைய ஆலோசனையைக் கேட்பது நல்லது. அதுதான் உங்கள் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பும்கூட'' என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...