Skip to main content

Palm Sugar: அது எலும்பை அரிக்கும்; இது எலும்பை வலுவாக்கும்! | health tips

பனை மரங்கள் தமிழ்நாட்டிலும், வங்காளத்திலும்தான் இருக்கின்றன. வங்காளத்தில் கள் தயாரிக்க மட்டுமே பனை பயன்படுகிறது. தமிழ்நாட்டில்தான் பனையை வைத்து கருப்பட்டி காய்ச்சுகிறார்கள். 50 வருடங்களுக்கு முன்னால் மக்கள் தொகையும் பனை மரங்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்திருக்கிறது. இப்போது 2 கோடி மரங்கள் மட்டுமே இருக்கின்றன. பனைத் தொழிலை நம்பி வாழ்ந்துவந்த மக்கள், நகரங்களுக்குக் குடிபெயர்ந்ததற்கு காரணம், பனை மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதுதான். திருநெல்வேலி மாவட்டத்தின் உடன்குடி என்ற ஊர்தான், கருப்பட்டி தயாரிப்புக்குப் புகழ்பெற்றது என்கிற சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு, அதன் மருத்துவ பலன்களை விவரிக்கிறார்.

* கருப்பட்டியில் குளுக்கோஸ், சுக்ரோஸ் மட்டுமல்லாமல், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன.

கருப்பட்டி

* நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சம நிலையில் வைக்கும் தன்மை கருப்பட்டிக்கு உண்டு.

* பாலுடன் பனங்கற்கண்டு, மிளகு, மஞ்சள் பொடி சேர்த்துக் குடித்தால் தொண்டைப்புண் குணமாகும். மூலநோய் தவிர்க்கப்படும்.

* மற்ற வெல்லங்களைப்போலக் கருப்பட்டியில் உப்பு சேர்க்க மாட்டார்கள். அதனால், இது வயிற்றுப்புண்களை ஆற்றும்.

* சித்த மருத்துவ லேகியங்களில் கப நோய்கள், சூட்டு நோய்களுக்கான மூலப்பொருள் கருப்பட்டிதான்.

* பதநீரைக் காய்ச்சி கருப்பட்டிக்கான சிரட்டையில் ஊற்றும்போது, அதனுடன் நூல்கண்டு போட்டு விடுவார்கள். அதைப் பிரித்து உதிர்த்தால் கற்கண்டு கிடைக்கும்.

மைக்கேல் செயராசு

* வெள்ளைச்சீனியில் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள், 'பற்களையும் எலும்பையும் அரிக்கும்' என்று பாரம்பர்ய மருத்துவ நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை உண்மை என்கின்றன இன்றைய ஆய்வுகள்.

* பேக்கரி உணவுகளுக்காக ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் வெள்ளைச்சீனி. இயற்கை மருத்துவர்கள் வெள்ளைச்சீனியை 'வைட்டமின் திருடன்' என்பார்கள். அது உட்கிரக்கப்படுவதற்காக நம் உடலில் இருக்கிற சில வைட்டமின்களை திருடிக்கொள்ளுமாம். இந்தப் பிரச்னை கருப்பட்டியில் கிடையாது.

* கருப்பட்டியை உடைத்து நல்ல வெயிலில் காட்டும்போது மினிமினுப்பு இருந்தால், அது வெள்ளைச்சீனி சேர்த்த கலப்பட கருப்பட்டி. மாவுபோல இருந்தால், ஒரிஜினல் கருப்பட்டி.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...