Skip to main content

Palm Sugar: அது எலும்பை அரிக்கும்; இது எலும்பை வலுவாக்கும்! | health tips

பனை மரங்கள் தமிழ்நாட்டிலும், வங்காளத்திலும்தான் இருக்கின்றன. வங்காளத்தில் கள் தயாரிக்க மட்டுமே பனை பயன்படுகிறது. தமிழ்நாட்டில்தான் பனையை வைத்து கருப்பட்டி காய்ச்சுகிறார்கள். 50 வருடங்களுக்கு முன்னால் மக்கள் தொகையும் பனை மரங்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்திருக்கிறது. இப்போது 2 கோடி மரங்கள் மட்டுமே இருக்கின்றன. பனைத் தொழிலை நம்பி வாழ்ந்துவந்த மக்கள், நகரங்களுக்குக் குடிபெயர்ந்ததற்கு காரணம், பனை மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதுதான். திருநெல்வேலி மாவட்டத்தின் உடன்குடி என்ற ஊர்தான், கருப்பட்டி தயாரிப்புக்குப் புகழ்பெற்றது என்கிற சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு, அதன் மருத்துவ பலன்களை விவரிக்கிறார்.

* கருப்பட்டியில் குளுக்கோஸ், சுக்ரோஸ் மட்டுமல்லாமல், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன.

கருப்பட்டி

* நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சம நிலையில் வைக்கும் தன்மை கருப்பட்டிக்கு உண்டு.

* பாலுடன் பனங்கற்கண்டு, மிளகு, மஞ்சள் பொடி சேர்த்துக் குடித்தால் தொண்டைப்புண் குணமாகும். மூலநோய் தவிர்க்கப்படும்.

* மற்ற வெல்லங்களைப்போலக் கருப்பட்டியில் உப்பு சேர்க்க மாட்டார்கள். அதனால், இது வயிற்றுப்புண்களை ஆற்றும்.

* சித்த மருத்துவ லேகியங்களில் கப நோய்கள், சூட்டு நோய்களுக்கான மூலப்பொருள் கருப்பட்டிதான்.

* பதநீரைக் காய்ச்சி கருப்பட்டிக்கான சிரட்டையில் ஊற்றும்போது, அதனுடன் நூல்கண்டு போட்டு விடுவார்கள். அதைப் பிரித்து உதிர்த்தால் கற்கண்டு கிடைக்கும்.

மைக்கேல் செயராசு

* வெள்ளைச்சீனியில் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள், 'பற்களையும் எலும்பையும் அரிக்கும்' என்று பாரம்பர்ய மருத்துவ நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை உண்மை என்கின்றன இன்றைய ஆய்வுகள்.

* பேக்கரி உணவுகளுக்காக ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் வெள்ளைச்சீனி. இயற்கை மருத்துவர்கள் வெள்ளைச்சீனியை 'வைட்டமின் திருடன்' என்பார்கள். அது உட்கிரக்கப்படுவதற்காக நம் உடலில் இருக்கிற சில வைட்டமின்களை திருடிக்கொள்ளுமாம். இந்தப் பிரச்னை கருப்பட்டியில் கிடையாது.

* கருப்பட்டியை உடைத்து நல்ல வெயிலில் காட்டும்போது மினிமினுப்பு இருந்தால், அது வெள்ளைச்சீனி சேர்த்த கலப்பட கருப்பட்டி. மாவுபோல இருந்தால், ஒரிஜினல் கருப்பட்டி.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...