Skip to main content

Organ donation: இறப்பிலும் 3 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த ஊட்டி விவசாயி.. நெகிழ்ச்சி சம்பவம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அர்ஜூனன். 63 வயதான அவருக்கு கடந்த 24 ம் தேதி மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அர்ஜூனன் மூளைச்சாவு அடைந்ததை கண்டறிந்துள்ளனர். உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

அர்ஜூனன்

அர்ஜூனனின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதாக உறவினர்கள் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் அர்ஜூனனின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை அகற்றி பாதுகாப்பான முறையில் கொண்டு சென்றனர். உடல் உறுப்புகளை தாமதமின்றி கொண்டு செல்ல கிரீன் காரிடார் முறையில் அலர்ட் செய்து அசுர வேகத்தில் கொண்டுச் சென்றனர். அர்ஜூனனின் உடல் உறுப்புகளை மூன்று பேருக்கு பொறுத்தியுள்ளனர். இதன்மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. அர்ஜூனன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.

உடல் உறுப்பு தானம்

இது குறித்து தெரிவித்த ஊட்டி மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, " ரத்தகொதிப்பு காரணமாக அர்ஜூனன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் விதிகளின் படி அவரது இரு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, ஈரோடு மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள பயனாளர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட மருத்துவக்கல்லூரியில் நடந்த இரண்டாவது உடல் உறுப்பு தானம் இது " என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...