Skip to main content

Organ donation: இறப்பிலும் 3 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த ஊட்டி விவசாயி.. நெகிழ்ச்சி சம்பவம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அர்ஜூனன். 63 வயதான அவருக்கு கடந்த 24 ம் தேதி மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அர்ஜூனன் மூளைச்சாவு அடைந்ததை கண்டறிந்துள்ளனர். உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.

அர்ஜூனன்

அர்ஜூனனின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதாக உறவினர்கள் மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் அர்ஜூனனின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை அகற்றி பாதுகாப்பான முறையில் கொண்டு சென்றனர். உடல் உறுப்புகளை தாமதமின்றி கொண்டு செல்ல கிரீன் காரிடார் முறையில் அலர்ட் செய்து அசுர வேகத்தில் கொண்டுச் சென்றனர். அர்ஜூனனின் உடல் உறுப்புகளை மூன்று பேருக்கு பொறுத்தியுள்ளனர். இதன்மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. அர்ஜூனன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது.

உடல் உறுப்பு தானம்

இது குறித்து தெரிவித்த ஊட்டி மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, " ரத்தகொதிப்பு காரணமாக அர்ஜூனன் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் விதிகளின் படி அவரது இரு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, ஈரோடு மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள பயனாளர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட மருத்துவக்கல்லூரியில் நடந்த இரண்டாவது உடல் உறுப்பு தானம் இது " என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...