Skip to main content

Health: தினமும் தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா?

ரு காலத்துல காலேஜ் போற பசங்கதான், முடி ஸ்டைலா காத்துல பறக்கணும்னு தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டாங்க. ஆனா, இன்னிக்கு ஸ்கூல் போற பொடிசுங்ககூட தலைக்கு எண்ணெய் வைக்கப்போனா தடுக்குதுங்க. 'போம்மா, முகத்துல எண்ணெய் வழியும்'னு சண்டைக்கு வருதுங்க. சரி, தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா, அதுவும் தினமும் வைக்கணுமா, அப்படி வைக்கலைன்னா என்ன பிரச்னைகள் வரும்னு இயற்கை மருத்துவர் தீபா அவர்களிடம் கேட்டோம்.

''நம்ம தலையில இயற்கையாவே ஒரு சீபம் சுரக்கும். அது தலை சருமத்தை ஈரப்பதத்தோட பார்த்துக்கும். சில நாள் கழிச்சு அது அப்படியே உலர்ந்து தலையில படியும். இந்த இறந்த செல்களை நீக்குறதுக்குத்தான் வாரத்துக்கு ரெண்டு நாள் தலைக்குக் குளிக்கணும்னு சொல்றோம்.

Hair care

எண்ணெய் வெச்சே ஆகணுமா?

தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா என்றால், கண்டிப்பா வைக்கணும். தலையில் எண்ணெய் வைக்கும்போது, அதில் இருக்கிற புரோட்டீனும் கொழுப்பும் முடியோட உள்பகுதி வரைக்கும் போகும். தலையில எண்ணெய் எப்படி வைக்கணும் தெரியுமா? இடது கையில கொஞ்சம் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதை வலது கை விரல்களின் நுனியால தொட்டு, தலை சருமத்துல நல்லா படுற மாதிரி வைக்கணும். அப்போ தான், முடியோட வேர்க்கால்கள் வரைக்கும் எண்ணெய் போய், முடி வலுவாகும்.

யார் தினமும் வைக்கணும்?

முடி நல்லா அடர்த்தியா இருக்கிறவங்க, தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கணும். அடர்த்தியே இல்லாம இருந்தா, அவங்க வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டும், ராத்திரியில எண்ணெய் வெச்சு, தலை சருமத்துல நல்லா மசாஜ் கொடுக்கணும். இப்படி செஞ்சா, தலையில இருக்கிற இறந்த செல்கள் வெளியேறி ரத்த ஓட்டம் அதிகமாகி, முடியோட வேர்க்கால்கள் வலுவாகும்.

இயற்கை மருத்துவர் யோ. தீபா

எண்ணெயே வைக்கலைன்னா என்னவாகும்?

சிலருக்கு தலை பூரா கொப்புளம் கொப்புளமா இருக்கு. தலையில இருந்து வெள்ளை வெள்ளையா உதிரும். இதுக்கு காரணம் உடம்பு சூடாகுறதுதான். உடம்பு சூடாகுறதுக்கு முதல் காரணம் தலையில் எண்ணெய் வைக்காததுதான். இரண்டாவது காரணம், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததுதான். இதை அப்படியே கவனிக்காம விட்டீங்கன்னா, உலர் பொடுகு வந்திடும். இது அப்படியே மெதுவா சொரியாசிஸ் ஆக மாறுறதுக்கும் வாய்ப்பிருக்கு. தவிர, முடி கொட்டும். முடியோட பளபளப்பு குறைய ஆரம்பிச்சிடும். நுனிகள்ல பிளவு ஏற்படும். உச்சந்தலையில் முடிகொட்டி சொட்டை விழுறதுக்கும் வாய்ப்பிருக்கு. இவற்றையெல்லாம் தடுக்கணும்னா தலைக்கு எண்ணெய் வெச்சுதான் ஆகணும்'' என்கிறார் டாக்டர் தீபா.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...