Skip to main content

Health: 'செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஏன் கலர் கலராக இருக்கு?' - சித்த மருத்துவர் சொல்லும் விளக்கம்

செக்கில் ஆட்டிய எண்ணெய்களில்தான் நம் உடலுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்கிற, ஆரோக்கியம் சார்ந்த தெளிவும் நம்பிக்கையும் பலருக்கும் வந்துவிட்டது. அதே நேரம், சூப்பர் மார்க்கெட்டில் வரிசையாக இருக்கிற நல்லெண்ணெய்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால், ஏன் அவை அப்படி இருக்கின்றன... அவற்றில் எது ’நல்ல’ எண்ணெய் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அதற்கான விளக்கத்தைத் தருகிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

எண்ணெய்

’’மரச்செக்கில் எள்ளைப்போட்டு ஆட்டி, நல்லெண்ணெய் எடுக்கும்போது அதனுடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்ப்பார்கள். கரும்பு வெல்லம் சேர்த்து ஆட்டப்படும் நல்லெண்ணெய் லேசான நிறத்துடனும், கருப்பட்டி சேர்த்து ஆட்டப்படும் நல்லெண்ணெய் அடர்ந்த நிறத்துடனும் இருக்கும். தவிர, கரும்பு வெல்லத்தின் நிறம் எப்போதும் ஒன்றுபோல இருக்காது. இதன் காரணமாகவும், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நிறத்தில் ஒன்றுபோல இருக்காது. மற்றபடி, அந்த நல்லெண்ணெய்கள் எல்லாமே நல்லவைதான்.

இன்னும் சிலர், 'செக்கு எண்ணெய்யின் அடியில் கருப்பாக ஏதோ தங்கி இருக்கிறதே... அது என்ன டாக்டர்?' என்று கேட்கிறார்கள்.

மரச்செக்கில் எள்ளை ஆட்டும்போது அதனுடன் வெல்லத்தையோ அல்லது கருப்பட்டியையோ சேர்ப்பார்கள் என்று சொன்னேன் இல்லையா... அப்படி ஆட்டிய எண்ணெய்யை வடித்து எடுத்த பிறகும், அதனுடைய வீழ் படிவு கொஞ்சம்போல எண்ணெய்யின் அடியில் தேங்கி நிற்கும். அதுதான்  பார்ப்பவர்களுடைய கண்ணுக்குக் கருப்பாகத் தெரிவது. இந்த எண்ணெய்யைச் சாப்பிடுவதாலோ, சமையலுக்குப் பயன்படுத்துவதாலோ நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. இதை எந்த அடிப்படையில் சொல்கிறேன் என்றால், நல்லெண்ணெய்யை ஆட்டி எடுத்த பிறகு, அதில் கிடைக்கும் எள்ளு புண்ணாக்கைச் சிறு வயதில் நாம் அனைவருமே சாப்பிட்டு இருப்போம். அதனால் நமக்கு எந்தக் கெடுதலும் வரவில்லையே... அது ருசியாக இருந்தது, கூடவே இரும்புச்சத்தையும் நம் உடம்பில் சேர்த்தது. அதனால், செக்கிலாட்டிய நல்லெண்ணெய்யில் அடியில் கருப்பாக இருக்கிறது என்றால் பயப்படாமல் வாங்கலாம். இன்னமும் தயங்குபவர்கள் வெள்ளை வேட்டியில் அந்த நல்லெண்ணெய்யை வடிகட்டிப் பயன்படுத்தலாம். 

சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

கூடுதலாக இன்னொரு தகவல். பலரும், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யைக்கூட ரீஃபைண்ட் செய்யப்பட்டதாக வாங்குகிறார்கள். அது சம்பந்தப்பட்டவர்களுடைய விருப்பம் என்றாலும், அது அவசியமில்லை என்பதே என்னுடைய கருத்து. இதனால், சில நுண்ணூட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது." என்கிறார், மருத்துவர் செல்வ சண்முகம்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...