Skip to main content

Health: தினமும் முருங்கைக்கீரைப் பொடி சாப்பிடலாமா..? டயட்டீஷியன் விளக்கம்!

ஒரு காலத்தில் எல்லாருடைய வீடுகளிலும் ஒரு முருங்கை மரமாவது இருந்தது. அதனால், நம்முடைய தாத்தா பாட்டி தலைமுறையிலும், நம்முடைய அம்மா, அப்பா தலைமுறையிலும் அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஒரு காலத்துக்குப் பிறகு முருங்கைக்கீரை நம்முடைய தட்டில் இருந்து மெள்ள மெள்ள குறைய ஆரம்பித்தது. ஆனால், சமீப காலமாக முருங்கைக்கீரையின் மருத்துவ பலன்கள் பற்றி மருத்துவர்கள் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால், எல்லோரும் அதை சூப்பர் ஃபுட் ஆக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சிலர், முருங்கைக்கீரையை தினமும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சிலர், தினமும் முருங்கைக்கீரைப் பொடியை நீரில் கலந்து குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தினமும் முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ சாப்பிடுவது சரிதானா? பதில் சொல்கிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். 

முருங்கைக்கீரை

’’அந்தக் காலத்தில் வாரத்துக்கு ஒன்றிரண்டு நாள்கள்தான் முருங்கைக்கீரையை சமையலில் சேர்ப்பார்கள். ஒருநாள் பொரியல் செய்தால், இன்னொரு நாள் சாம்பாரில் சேர்ப்பார்கள். அல்லது, கேழ்வரகு மாவுடன் சேர்த்து அடையாக சுடுவார்கள்.

இன்றைக்கு, எந்த சூப்பர் மார்க்கெட் போனாலும், முருங்கைக்கீரைப் பொடி கண்ணில் தென்படுகிறது. முருங்கைக்கீரையின் பலன்கள் நன்றாக தெரிந்துவிட்டதால், இந்தக் கீரையை சுத்தம் செய்ய நேரமில்லாத பலரும், அதை பொடியாக சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அதையும், சிலர் தினமும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

தாரிணி

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றன. தினமும் முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ சாப்பிடும்போது, அதில் இருக்கிற இரும்புச்சத்து நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கும். இப்படியே சேர்ந்தால் ஒருகட்டத்துக்கு மேல் நம் உடம்பில் அதிகப்படியான இரும்புச்சத்து சேர ஆரம்பித்து விடும். அளவுக்கு மீறினால், எதுவுமே உடலுக்குக் கெடுதல்தான். இதனால், நம்முடைய செரிமான மண்டலத்தில் தொந்தரவு ஏற்படும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால், முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ வாரத்துக்கு இரண்டு நாள் சாப்பிட்டாலே போதும். இது மற்ற கீரைகளுக்கும் பொருந்தும் என்கிறார்’’ தாரிணி கிருஷ்ணன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...