Skip to main content

Health: தினமும் முருங்கைக்கீரைப் பொடி சாப்பிடலாமா..? டயட்டீஷியன் விளக்கம்!

ஒரு காலத்தில் எல்லாருடைய வீடுகளிலும் ஒரு முருங்கை மரமாவது இருந்தது. அதனால், நம்முடைய தாத்தா பாட்டி தலைமுறையிலும், நம்முடைய அம்மா, அப்பா தலைமுறையிலும் அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஒரு காலத்துக்குப் பிறகு முருங்கைக்கீரை நம்முடைய தட்டில் இருந்து மெள்ள மெள்ள குறைய ஆரம்பித்தது. ஆனால், சமீப காலமாக முருங்கைக்கீரையின் மருத்துவ பலன்கள் பற்றி மருத்துவர்கள் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால், எல்லோரும் அதை சூப்பர் ஃபுட் ஆக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சிலர், முருங்கைக்கீரையை தினமும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சிலர், தினமும் முருங்கைக்கீரைப் பொடியை நீரில் கலந்து குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தினமும் முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ சாப்பிடுவது சரிதானா? பதில் சொல்கிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். 

முருங்கைக்கீரை

’’அந்தக் காலத்தில் வாரத்துக்கு ஒன்றிரண்டு நாள்கள்தான் முருங்கைக்கீரையை சமையலில் சேர்ப்பார்கள். ஒருநாள் பொரியல் செய்தால், இன்னொரு நாள் சாம்பாரில் சேர்ப்பார்கள். அல்லது, கேழ்வரகு மாவுடன் சேர்த்து அடையாக சுடுவார்கள்.

இன்றைக்கு, எந்த சூப்பர் மார்க்கெட் போனாலும், முருங்கைக்கீரைப் பொடி கண்ணில் தென்படுகிறது. முருங்கைக்கீரையின் பலன்கள் நன்றாக தெரிந்துவிட்டதால், இந்தக் கீரையை சுத்தம் செய்ய நேரமில்லாத பலரும், அதை பொடியாக சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அதையும், சிலர் தினமும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

தாரிணி

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றன. தினமும் முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ சாப்பிடும்போது, அதில் இருக்கிற இரும்புச்சத்து நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கும். இப்படியே சேர்ந்தால் ஒருகட்டத்துக்கு மேல் நம் உடம்பில் அதிகப்படியான இரும்புச்சத்து சேர ஆரம்பித்து விடும். அளவுக்கு மீறினால், எதுவுமே உடலுக்குக் கெடுதல்தான். இதனால், நம்முடைய செரிமான மண்டலத்தில் தொந்தரவு ஏற்படும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால், முருங்கைக்கீரையோ அல்லது முருங்கைக்கீரைப் பொடியோ வாரத்துக்கு இரண்டு நாள் சாப்பிட்டாலே போதும். இது மற்ற கீரைகளுக்கும் பொருந்தும் என்கிறார்’’ தாரிணி கிருஷ்ணன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...