Skip to main content

Health: சினைப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்கும் `குமரிப்பக்குவம்’ - வீட்டிலேயே செய்யலாம்! | pcod

சினைப்பை நீர்க்கட்டியால் (பிசிஓடி) இன்றைக்கு பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி பீரியட்ஸ் பிரச்னை, குழந்தையின்மை பிரச்னை என பல சங்கடங்களையும் பெண்கள் சந்திக்கிறார்கள். பிசிஓடி பிரச்னை வராமல் தடுக்கும், சித்த மருந்தான 'குமரிப்பக்குவம்' வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என சொல்லித்தருகிறார் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா.

சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா

''சோற்றுக்கற்றாழையை, அதன் கசப்புச்சுவையும் வழுவழுப்பும்போக பத்து முறையாவது கழுவ வேண்டும். ஒரு கப் சோற்றுக்கற்றாழை, அதே கப்பில் பாதியளவு பூண்டு இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். ஒரு பல் பூண்டு என மார்க்கெட்டில் கிடைக்கும். இந்தப் பூண்டு கிடைத்தால் நல்லது. கிடைக்கவில்லையென்றால், வழக்கமான பூண்டையே எடுத்துக்கொள்ளலாம். அரைத்த கற்றாழை - பூண்டு விழுதுடன் ஒரு கப் பனங்கருப்பட்டிச் சேர்த்து, அடுப்பில் வைத்து அல்வா பதத்தில் கிளற வேண்டும். சோற்றுக்கற்றாழையில் நீர்ப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், சுருள வதக்க வேண்டும். இதுதான் `குமரிப்பக்குவம்'. ithu ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.

காலை உணவுடன் ஒரு டீஸ்பூன், மதிய உணவுடன் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டால், பீரியட்ஸ் நேரத்து வலி படிப்படியாக குறையும். அதிகமான ரத்தப்போக்கும் கட்டுப்படும். பிசிஓடி பிரச்னை வராமலும் தடுக்கும். இது பெண்களுக்கு அருமருந்து. சோற்றுக்கற்றாழை பெண்களுக்கு நல்லது என்று, பலரும் அதை அப்படியே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிட்டால் சளிப்பிடிக்கும். இப்படி குமரிப்பக்குவமாக செய்து சாப்பிட்டால், நான் மேலே சொன்ன அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

pcos/ pcod home remedy

குமரிப்பக்குவம் சித்த மருத்துவக்கடைகளிலும் கிடைக்கும். என்றாலும், பாக்கெட் செய்யப்பட்ட உணவுப்பொருள்களில் அது கெட்டுப்போகாமல் இருக்க பிரிசர்வேட்டிவ் சேர்ப்பார்கள் என்பதால், வீட்டில் தயாரித்து சாப்பிடுவதே நல்லது. பலனும் முழுமையாக கிடைக்கும்.'' என்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...