Skip to main content

Girls Only: டேட்டிங் செய்யும்போதே செக்ஸ்... ஓகே தானா? |காமத்துக்கு மரியாதை - 202

வெளிநாட்டுக் கலாசாரமாக இருந்த டேட்டிங் பற்றி 1980 மற்றும் 90-களில் தெரிய வந்தபோது, 'இப்படியெல்லாம்கூட இருப்பார்களா' என்று யோசித்த சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைக்கு அந்த கலாசாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கான செயலிகள்கூட வந்துவிட்டன. பெற்றோர் பார்த்து செய்கிற திருமணம்போலவே, ஒரு நபருடன் டேட்டிங் செய்து, அவரை நன்கு புரிந்துகொண்டு திருமணம் செய்கிற முறையும் இன்றைக்கு பலரிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், 'டேட்டிங் செய்யும்போதே செக்ஸ் வைத்துக்கொள்வது ஓகே தானா' என்கிற கேள்வி, சமூக வலைத்தளங்களில் உலவிக்கொண்டே இருக்கிறது. இதுபற்றி பாலியல் மருத்துவர் காமராஜ் அவர்களிடம் பேசினோம்.

Dating

''ஒரு நபருடன் டேட்டிங் செய்து, அது பொருந்தாதபட்சத்தில், இன்னும் சிலருடன் டேட்டிங் செய்து தனக்கான ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுப்பது வளர்ந்த நாடுகளில் நடந்துக்கொண்டிருக்கிற இயல்பான விஷயம். அவர்கள் கலாசாரத்தில் திருமணத்துக்கு முன்னரே செக்ஸ் என்பதும் பதறக்கூடிய ஒன்றாக பார்க்கப்படவில்லை. அதற்காக, அவர்கள் டேட்டிங் செய்த முதல்நாளே செக்ஸ் வைத்துக்கொள்வார்கள் என்று அர்த்தமில்லை. பழகி, ஒருவரையொருவர் பிடித்துவிட்டால், வைத்துக்கொள்வார்கள். அங்கு இது வழக்கமான விஷயம்தான். திருமணத்தின்போது, இருவரும் வர்ஜினாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைப் பெற்றுக்கொண்ட பிறகுகூட அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னால், பாலியல் தொடர்பாக வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும்போது நடந்த சம்பவம் ஒன்றை சொல்கிறேன். ஒரு கருத்தரங்கில் முதலிரவில் நடக்கிற பிரச்னைகள் பற்றி இந்திய மருத்துவர்கள் பேசும்போது, அவர்கள் முதலிரவுப்பற்றி விளக்கும்படி கேட்டார்கள். அப்போது, முன் பின் பழக்கமில்லாத ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பதையும், திருமணமான அன்றைய தினம் அவர்கள் உறவுகொள்வதையும் விளக்கினேன். அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பேசிப்பழகாத இருவர் எப்படி திருமணமான அன்றே உறவுகொள்ள முடியும் என்றார்கள். இதுதான் எங்கள் நாட்டு வழக்கம் என்றேன்.

Dr. Kamaraj

தற்போது, வளர்ந்த நாடுகளின் டேட்டிங் கலாசாரம் நம் நாட்டிலும் வந்துவிட்டது. இதில், டேட்டிங் செய்யும்போதே செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டால், உலக சுகாதார மையம் சொன்னதைதான் நானும் வழிமொழிய விரும்புகிறேன். அதாவது, எய்ட்ஸ் வராமல் தடுப்பதற்காக முதல் உறவை திருமணம் வரை தள்ளிப்போடுங்கள் என்கிறது, உலக சுகாதார மையம். அப்படியே வைத்துக்கொண்டாலும், ஆடையுடன் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறது. இதுவும் முடியவில்லை என்றால், ஆணுறையாவது அணிந்துக்கொள்ளுங்கள் என்கிறது.

இப்போது நம் நாட்டுப் பெண்கள் விஷயத்துக்கு வருகிறேன். தானாக ஓர் ஆணை தேர்ந்தெடுத்து காதலித்தாலும் சரி, பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை காதலித்தாலும் சரி, காதலிப்பது நல்லது. அப்போதுதான் இருவருமே ஒருவரைப்பற்றி ஒருவர் ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும். தவிர, அவர்களால் திருமண வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்னைகளையும் ஓரளவுக்காகவது முன்கூட்டியே கணிக்க முடியும். அதனால், டேட்டிங் செய்து ஓர் ஆணைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஆனால், டேட்டிங்கின்போதே செக்ஸை தவிர்ப்பது நல்லது. அது திருமணத்துக்குப் பின்னரே நடக்கட்டும்'' என்கிறார், டாக்டர் காமராஜ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...