Skip to main content

DV:Myths and Facts:தரையில் விழுந்த உணவுப்பொருளை எடுத்து சாப்பிடுவது ஆபத்து? #'5-Second Rule'

ஆரோக்கியம் தொடர்பான எத்தனையோ நம்பிக்கைகளை உண்மையா, பொய்யா என்றே தெரியாமல் பின்பற்றுகிறோம். அவற்றில் ஒன்றுதான் '5 செகண்ட் ரூல்' (5-Second Rule). அதாவது ஏதேனும் உணவுப்பொருளை தரையில் போட்டுவிட்டோம் என்றால், 5 நொடிகளுக்குள் அதை எடுத்துச் சாப்பிட்டால், தொற்று பரவாதாம்...

மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

இது எந்த அளவுக்கு உண்மை?

சென்னையைச் சேர்ந்த  தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் விளக்குகிறார்.

உணவைப் பொறுத்தது...

''இதில் குறிப்பிடப்படுகிற 5 செகண்ட் (5-Second) என்பது முற்றிலும் ஏற்புடையதல்ல... அதே சமயம், முற்றிலும் தவறானதும் அல்ல. '5 செகண்ட் ரூல்' என்பதில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். கீழே விழுகிற பொருளில் முதலில் கிருமி உட்கார வேண்டும். அப்படியே உட்கார்ந்தாலும், அது நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைத் தாண்டி, உள்ளே போக வேண்டும். இதில் உடல் எதிர்ப்பாற்றல் என்ற விஷயத்தைத் தவிர்த்துவிட்டு கிருமித் தொற்று குறித்து யோசிப்போம்.

infection

அது நாம் கீழே போடுகிற பொருளையும், அது கீழே விழுகிற இடத்தையும் பொறுத்தது. உதாரணத்துக்கு, பிஸ்கட், சப்பாத்தி மாதிரியான உணவுகள் ஒட்டும் தன்மை அற்றவை. அவற்றைக் கீழே போட்டாலும், உடனே கிருமி அதில் ஒட்டிக்கொள்ளப் போவதில்லை. எனவே, அந்த உணவை எடுத்துச் சாப்பிடுவதால் பிரச்னை வராமல் இருக்கலாம். அதுவே, பொங்கல், கேசரி, பழத்துண்டு போன்றவற்றைக் கீழே போடுகிறோம் என்றால், அவற்றின் ஒட்டும் தன்மை காரணமாக, தரையிலுள்ள அழுக்கு, கிருமி போன்றவை ஒட்டிக் கொள்ளலாம். இந்த உணவுகளைச் சாப்பிடும்போது, அதில் நிறைய கிருமிகள் ஒட்டியிருக்கும் நிலையில் அது உடனே இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தலாம்.

எனவே, ஒட்டும் தன்மையுள்ள உணவுப்பொருள்களைக் கீழே போட்டால் அவற்றை எடுத்துச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே சரியானது. அதற்காக ஒட்டும் தன்மையற்ற பொருளை கீழே போட்டு, எடுத்துச் சாப்பிடுவது சரி என அர்த்தமல்ல... முன்னதைவிட, இதில் ரிஸ்க் குறைவு என்பதுதான் விஷயமே.

எல்லோருக்கும் ஏற்றதல்ல...

'5 செகண்ட் ரூல்'  விஷயத்தில் வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், புற்றுநோயாளிகள், குழந்தைகள் போன்றோர்  ரிஸ்க் எடுக்க வேண்டாம். குழந்தைகள் பொதுவாகவே, எந்தப் பொருள் கீழே இருந்தாலும் அதை எடுத்து வாயில். போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி முழுமையாக உருவாகி இருக்காது என்பதால், கீழே விழும் எதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. அதுவே, ப்ளே ஸ்கூல், பள்ளிக்கூடங்களில் பொம்மைகளை வாயில் வைத்து விளையாட விளையாடத்தான் அவர்களது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால், கீழே விழும் உணவு விஷயத்தில் அதைப் பின்பற்ற வேண்டாம்.

ப்ளே ஸ்கூல்

இன்ஃபெக்‌ஷன் ஆனதை உணர்த்துமா உடல்?

கீழிருந்து ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்ட உடனேயே அது தொற்றை ஏற்படுத்தியிருக்கிறதா, இல்லையா என்பது தெரியாது. 'இன்குபேஷன் பீரியட்' (incubation period) என ஒன்று உண்டு. அதாவது தொற்றுக்குள்ளானதிலிருந்து அதற்கான அறிகுறிகளை உணர்கிற வரையிலான காலம் இது.

கீழே விழுந்த உணவில், ஒருவேளை கிருமி இருந்தாலும்,  உமிழ்நீரில் உள்ள ரசாயனங்கள், அந்தக் கிருமியைக் கொன்றுவிடலாம். அதையும் தாண்டி, உணவுப்பைக்குள் போனால், வயிற்றுக்குள் இருக்கும் ஸ்ட்ராங்கான கெமிக்கல், அந்தக் கிருமியைச் செயலிழக்கச் செய்துவிடும். இந்த இரண்டையும் தாண்டி, சிறுகுடல், பெருங்குடலில் போய், ரத்தத்தில் சேரும்போதுதான் அது இன்ஃபெக்ஷனாகவே மாறும்.

சில கிருமிகள், ரத்தத்தினுள் போகாமல், சிறுகுடல், பெருங்குடலிலேயே பெருகி, பேதியாக வெளிப்படும். இதை 'ஃபுட் பாய்சன்' (food poison) என்று பொதுவாகச் சொல்வோம். தரையில் விழுந்த உணவால் வருவதைவிடவும்,  ஓர் உணவுப்பொருளை நீண்ட நேரம் வெளியே வைத்திருந்து சாப்பிடுவதால்தான் இந்தப் பிரச்னை அதிகம் வரும்.  வெளியிடங்களில் சாப்பிடும்போது இது அதிகம் ஏற்படும்.  ஃபுட் பாய்சன் என்பது வாந்தியாகவோ, பேதியாகவோ வெளிப்படலாம். வாந்தியும் பேதியும் ஓரிரு நாள்களில் தானாகச் சரியாகிவிடும்.  இந்த இரண்டுக்குமே நிறைய நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.  இந்த இரண்டையும் தாண்டி, சிலருக்கு காய்ச்சலாகவும் வெளிப்படலாம். 

surface cleaning

டேக் ஹோம் மெசேஜ்....

கண்ணுக்குத் தெரியும்படி அழுக்கு உள்ள எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. தரையில் விழுந்த உணவில் மண் ஒட்டினால் சாப்பிட வேண்டாம்.  அது கிருமித் தொற்றை ஏற்படுத்தாவிட்டாலும், ஆரோக்கியமற்றதுதான்.

தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடிய பழமாக இருந்தால் நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு சாப்பிடலாம்.

சமையலறை மேடைகளை ஆன்டிசெப்டிக் திரவம் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதை (surface cleaning) மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை.  சோப் அல்லது  டிடெர்ஜென்ட்டும் தண்ணீருமே போதுமானவை. இவற்றால் சுத்தப்படுத்தியதும் ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, அந்த மேடையை காய்கறிகள், பழங்களை நறுக்கப் பயன்படுத்தலாம்'' என்கிறார் டாக்டர் விஜயலட்சுமி.

இந்தக் கட்டுரை குறித்த உங்கள் சந்தேகங்கள், ஆலோசனைகள், தனிப்பட்ட கேள்விகளை dvdigital@vikatan.com  என்ற மெயில் ஐடிக்கு அனுப்பவும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...