Skip to main content

Doctor Vikatan: ப்ரீ டயாபட்டீஸ் நிலை, டயாபட்டீஸாக மாறுமா... எப்படி ரிவர்ஸ் செய்வது?

Doctor Vikatan: என் வயது 45. சமீபத்தில் ரத்தப் பரிசோதனை செய்தபோது அதில் எனக்கு 'ப்ரீ டயாபட்டீஸ்' (Prediabetes ) என்று வந்திருக்கிறது. இன்னும் மருத்துவரைப் பார்க்கவில்லை.  ப்ரீ டயாபட்டீஸ் என்பது நிச்சயம் டயாபட்டீஸாக மாறிவிடுமா... அதைத் தடுக்க ஏதேனும் வழிகள் சொல்லவும்....

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.  

ஷைனி சுரேந்திரன்

நீரிழிவுக்கு முந்தைய நிலை

இந்தியாவில் 13.6 கோடி மக்கள் ப்ரீ டயாபட்டீஸ் (Prediabetes ) எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.  இது அவ்வளவு எளிதாகக் கடந்துசெல்ல வேண்டிய விஷயமல்ல.

ப்ரீ டயாபட்டீஸ் எனப்படும் நீரிழிவுக்கு முந்தைய நிலை இருப்பதை இப்போது ரத்தப் பரிசோதனையில் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. அப்படி ப்ரீ டயாபட்டீஸ் என்பது உறுதியானால், அந்த நாளிலிருந்தே அதை ரிவர்ஸ் செய்வதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.  ப்ரீ டயாபட்டீஸ் ஸ்டேஜில் இருக்கும் எல்லோருக்கும் உணவியல் தொடர்பான முக்கியமான ஆலோசனை ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். 

கார்போஹைட்ரேட் தவிருங்கள்...

உங்கள் நாளைத் தொடங்கும்போது, முதல் வேலையாக நிறைய கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்வதைத் தவிருங்கள்.  நிறைய பேருக்கு காலையில் ஜூஸ் குடிக்கும் வழக்கம் இருக்கிறது. காலை உணவுக்கு இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி போன்றவற்றையே பெரும்பாலும் எடுத்துக்கொள்வதையும் பார்க்கிறோம். ப்ரீ டயாபட்டீஸ் ஸ்டேஜில் உள்ளோருக்கு இதுபோன்ற உணவுகள், ரத்தச் சர்க்கரை அளவை கன்னாபின்னாவென அதிகரிக்கும்.  எனவே, இந்தப் பழக்கம் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

நட்ஸ்

நிறைய நார்ச்சத்தும், புரதச்சத்தும் சேருங்கள்...

காலையில் எழுந்ததும் சிறிது நட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் வெர்ஜின் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் சீட்ஸ் கலவை எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். இதன் பிறகு காலை உணவு சாப்பிடலாம். அப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளும் காலை உணவு புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டியது அவசியம். இட்லி, தோசை, பொங்கல் சாப்பிடுவதாக இருந்தாலும் அவற்றுடன் நிறைய காய்கறிகள் சேர்த்த சாம்பார், முட்டை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். 

கார்போஹைட்ரேட் உடன், நிறைய நார்ச்சத்தும், நிறைய புரதச்சத்தும் சேரும்போது ரத்தச் சர்க்கரை அளவு பேலன்ஸ் செய்யப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது... தவிர,  இனிப்பாக ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற தேடல் குறையும். இத்தகைய உணவுப்பழக்கத்துடன், உடற்பயிற்சிகளையும் வழக்கப்படுத்திக் கொண்டால், ப்ரீ டயாபட்டீஸ் நிலையை நிச்சயம் ரிவர்ஸ் செய்யலாம். முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...