Skip to main content

Doctor Vikatan: சாலை விபத்தில் தலையில் அடி... இயல்பு நிலைக்குத் திரும்ப முடியுமா?

கடந்த 2020-ம் வருடம், மே மாதம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் எனக்கு தலைக்காயம் ஏற்பட்டது. டிரக்கியாஸ்டமி (Tracheostomy) சிகிச்சை பெற்று வந்த நான், சுமார் மூன்று மாத காலம் சுயநினைவின்றி இருந்தேன். பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி  மூலம் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். இப்போதும் தினமும் யோகா, இயன்முறை பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்து வருகிறேன்.

எனது இடது கால் விரல்களால் ஹவாய் செருப்பின் பிடியை இறுகப்பற்றிக் கொள்ள முடியாத நிலையில் காலணி கழன்று விடுகிறது. வலது கை மற்றும் விரல்களையும் இயல்பாக அசைக்க முடியாத நிலை... விபத்து நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மெதுவாக சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வலது கால் விரல்களும் இடது கையும் முழுமையாக இயல்பாக அக்குபங்சர் சிகிச்சை பெறலாமா...?

-வீ.வைகை சுரேஷ், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன்.

பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன்.

விபத்து நடந்து நான்கு வருடங்களாகின்றன. இத்தனை வருடங்களில் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity ) எனப்படும்  நரம்புகளின் இயக்கம் மெள்ள மெள்ள உருவாகிக் கொண்டே தான் இருக்கும். அதாவது தலைமுடி வளர்வதைப் போல, நரம்புகளிலும் ஒருவித வளர்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்.

நீங்கள் தொடர்ச்சியாக ஓர் அசைவைச் செய்யச் செய்ய, அது சரியாகிக் கொண்டே வரும். ஓரிடத்தில் நரம்பு செல்கள் அறுபட்டிருந்தால், அதன் பக்கத்தில் உள்ள நரம்பு செல்களுடன் அது தன்னை இணைத்துக்கொள்ள முயற்சி செய்யும். இது நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷயம். இந்தச் செயலானது நாம் இறக்கும்வரை தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும். இதைத் தான்  நியூரோபிளாஸ்டிசிட்டி என்று சொல்கிறோம். உடலில் எங்கே அடிபட்டாலும் இந்த விஷயம் நடந்துகொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் இந்த அளவுக்குத் தேறி வர முடிந்திருக்கிறது.

பிசியோதெரபி

இப்போது வண்டி ஓட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்... அதை வைத்துப் பார்க்கும்போது உங்களால் உங்கள் கைகளைப் பயன்படுத்த முடிவதாகவே தெரிகிறது. வண்டி ஓட்டுவது, பிரேக் பிடிப்பது, எதிரே யாரேனும் வந்தால் உடனே மூளை தகவல் சொல்லி, கைகள் பிரேக் போடுவதெல்லாம் அனிச்சையான செயல்கள்... இவையெல்லாம் நடப்பதால், உங்கள் உடல்நலம் தேறி வருவதாகவும் இயல்புநிலைக்குத் திரும்புவதாகவும்தான் அர்த்தம். மேற்கொண்டு நீங்கள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெளிவாகப் புரியவில்லை. உங்களுடைய அன்றாட வாழ்க்கை, உங்கள் வேலையின் தன்மை போன்றவற்றுக்கு எப்படிப்பட்ட உடற்பயிற்சிகள், இயக்கங்கள் தேவைப்படுகின்றன என்ற தகவல்களும் தெளிவாக இல்லை. நீங்கள் கேட்டுள்ளபடி மாற்று மருத்துவங்களைத் தாராளமாக முயற்சி செய்யலாம்.

உங்களுடைய கடிதத்தில் விரிவான வேறு தகவல்கள் இல்லாததால் இது குறித்து நிறைய விளக்க முடியவில்லை. உங்களை ஒருமுறை நேரில் சந்தித்து, உங்கள் கடந்த கால பிரச்னைகள், சிகிச்சை பின்னணி போன்றவற்றைத் தெரிந்துகொண்டால் அடுத்தகட்ட சிகிச்சைகளைப் பரிந்துரைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...