Skip to main content

Doctor Vikatan: சாலை விபத்தில் தலையில் அடி... இயல்பு நிலைக்குத் திரும்ப முடியுமா?

கடந்த 2020-ம் வருடம், மே மாதம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் எனக்கு தலைக்காயம் ஏற்பட்டது. டிரக்கியாஸ்டமி (Tracheostomy) சிகிச்சை பெற்று வந்த நான், சுமார் மூன்று மாத காலம் சுயநினைவின்றி இருந்தேன். பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி  மூலம் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். இப்போதும் தினமும் யோகா, இயன்முறை பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்து வருகிறேன்.

எனது இடது கால் விரல்களால் ஹவாய் செருப்பின் பிடியை இறுகப்பற்றிக் கொள்ள முடியாத நிலையில் காலணி கழன்று விடுகிறது. வலது கை மற்றும் விரல்களையும் இயல்பாக அசைக்க முடியாத நிலை... விபத்து நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மெதுவாக சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றை ஓட்ட ஆரம்பித்து விட்டேன். வலது கால் விரல்களும் இடது கையும் முழுமையாக இயல்பாக அக்குபங்சர் சிகிச்சை பெறலாமா...?

-வீ.வைகை சுரேஷ், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன்.

பிசியோதெரபிஸ்ட் கோகிலா விஜயன்.

விபத்து நடந்து நான்கு வருடங்களாகின்றன. இத்தனை வருடங்களில் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity ) எனப்படும்  நரம்புகளின் இயக்கம் மெள்ள மெள்ள உருவாகிக் கொண்டே தான் இருக்கும். அதாவது தலைமுடி வளர்வதைப் போல, நரம்புகளிலும் ஒருவித வளர்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்.

நீங்கள் தொடர்ச்சியாக ஓர் அசைவைச் செய்யச் செய்ய, அது சரியாகிக் கொண்டே வரும். ஓரிடத்தில் நரம்பு செல்கள் அறுபட்டிருந்தால், அதன் பக்கத்தில் உள்ள நரம்பு செல்களுடன் அது தன்னை இணைத்துக்கொள்ள முயற்சி செய்யும். இது நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷயம். இந்தச் செயலானது நாம் இறக்கும்வரை தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும். இதைத் தான்  நியூரோபிளாஸ்டிசிட்டி என்று சொல்கிறோம். உடலில் எங்கே அடிபட்டாலும் இந்த விஷயம் நடந்துகொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் இந்த அளவுக்குத் தேறி வர முடிந்திருக்கிறது.

பிசியோதெரபி

இப்போது வண்டி ஓட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்... அதை வைத்துப் பார்க்கும்போது உங்களால் உங்கள் கைகளைப் பயன்படுத்த முடிவதாகவே தெரிகிறது. வண்டி ஓட்டுவது, பிரேக் பிடிப்பது, எதிரே யாரேனும் வந்தால் உடனே மூளை தகவல் சொல்லி, கைகள் பிரேக் போடுவதெல்லாம் அனிச்சையான செயல்கள்... இவையெல்லாம் நடப்பதால், உங்கள் உடல்நலம் தேறி வருவதாகவும் இயல்புநிலைக்குத் திரும்புவதாகவும்தான் அர்த்தம். மேற்கொண்டு நீங்கள் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெளிவாகப் புரியவில்லை. உங்களுடைய அன்றாட வாழ்க்கை, உங்கள் வேலையின் தன்மை போன்றவற்றுக்கு எப்படிப்பட்ட உடற்பயிற்சிகள், இயக்கங்கள் தேவைப்படுகின்றன என்ற தகவல்களும் தெளிவாக இல்லை. நீங்கள் கேட்டுள்ளபடி மாற்று மருத்துவங்களைத் தாராளமாக முயற்சி செய்யலாம்.

உங்களுடைய கடிதத்தில் விரிவான வேறு தகவல்கள் இல்லாததால் இது குறித்து நிறைய விளக்க முடியவில்லை. உங்களை ஒருமுறை நேரில் சந்தித்து, உங்கள் கடந்த கால பிரச்னைகள், சிகிச்சை பின்னணி போன்றவற்றைத் தெரிந்துகொண்டால் அடுத்தகட்ட சிகிச்சைகளைப் பரிந்துரைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...