Skip to main content

Doctor Vikatan: அடிக்கடி கை, கால் வலி... தொடரும் களைப்பு; கால்சியம் சப்ளிமென்ட் உதவுமா?

Doctor Vikatan: என் வயது 50. வாரத்தில் பல நாள்கள் அதிக களைப்பாகவே உணர்கிறேன். அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்படுகிறது. என்னுடைய தோழிக்கும் இதே பிரச்னை இருந்ததாகவும், அதற்கு அவள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டதாகவும் சொன்னாள். நானும் அவற்றை எடுத்துக்கொள்ளலாமா.... யாருக்கெல்லாம் இந்த சப்ளிமென்ட்டுகள் தேவை?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த  எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்

எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை

ஆரோக்கிய விஷயத்தில் அடுத்தவர் பின்பற்றும் சிகிச்சைகளை அப்படியே மற்றவர்களும் பின்பற்ற நினைப்பது மிகப் பெரிய தவறு. உங்கள் தோழியின் உடல்நலம், அவருக்கு இருக்கும் பிரச்னைகள், கால்சியம், வைட்டமின் குறைபாடுகள் போன்றவற்றைப் பொறுத்து அவர் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொண்டிருக்கலாம். அவரும் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுக்கிறார் என்றால் அது நிச்சயம் தவறுதான். அவரைப் பார்த்து நீங்களும் அதைப் பின்பற்ற நினைக்காதீர்கள். 

எல்லோருக்கும் சப்ளிமென்ட்டுகள் தேவைப்படாது. சாதாரணமாக உணவின் மூலமே நமக்குத் தேவையான கால்சியம் சத்தைப் பெறலாம். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள், கீரைகள், பால் மற்றும் பால் உணவுகள் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. வெறும் உணவுகள் மட்டுமே உதவாது. உடற்பயிற்சிகள் செய்தால்தான் உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கால்சியம், எலும்புகளுக்குள் போய்ச் சேரும்.  

பனீர்

பாலே குடிக்காத குழந்தைகள், பனீர், சீஸ் என எதுவுமே சாப்பிடாதவர்கள், கால்சியம் குறைபாட்டால் அவர்களுக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது  என்ற நிலையில், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

வயதானவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் போன்றோருக்கு கால்சியம் சப்ளிமென்ட் பரிந்துரைக்கப்படும்.  எலும்பு முறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும், தேவையின் அடிப்படையில் மருத்துவர்கள் கால்சியம் சப்ளிமென்ட் பரிந்துரைப்பார்கள். அதுவும் குறுகிய காலத்துக்கு மட்டுமே. மற்றபடி களைப்பு, சோர்வு போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் நீங்களாகவே கால்சியம் சப்ளிமென்ட் எடுக்கக்கூடாது.

நம் உடலானது கால்சியம் சத்தை உட்கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி சத்து மிக அவசியம். வைட்டமின் டி என்பது சூரிய வெளிச்சத்தின் மூலம் மட்டுமே நமக்குக் கிடைக்கக்கூடியது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் வெயில் இருந்தாலும் நம்மில் பலரும் வெயிலில் தலைகாட்டாமல் வாழ்கிறோம், வேலை செய்கிறோம். அதனால் இந்தக் குறைபாடு இன்று அதிகரித்து வருகிறது.  நீரிழிவு பாதித்தவர்களுக்கு இந்தக் குறைபாடு அதிகமாக இருக்கிறது.

வைட்டமின்-டி

நீரிழிவு உள்ளவர்களும், நீரிழிவு இல்லாதவர்கள் அடிக்கடி உடல் களைத்துப் போகிறது என்ற நிலையிலும் வைட்டமின் டி அளவை அடிக்கடி  சரிபார்க்கவேண்டும். எல்லோருக்கும் வைட்டமின் டி சப்ளிமென்ட் தேவை என அர்த்தமில்லை. சூரிய வெளிச்சத்திலிருந்தே இதை இயற்கையாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு வாய்ப்பே இல்லாதவர்களுக்கு வாரம் ஒருமுறை என குறிப்பிட்ட வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளும் சப்ளிமென்ட் பரிந்துரைக்கப்படும். எந்த மருந்தையும் மருத்துவரின் பரிந்துரையோடு அவர் குறிப்பிடும் நாள்களுக்கு குறிப்பிட்ட டோஸ் மட்டுமே எடுக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...