Skip to main content

Doctor Vikatan: கர்ப்பப்பையை நீக்கினால் தாம்பத்ய உறவு பாதிக்குமா..?

Doctor Vikatan: என் வயது 46. சில உடல்நல பிரச்னைகளின் காரணமாக எனக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர். இந்த ஆபரேஷனுக்கு பிறகு தாம்பத்திய உறவில் வழக்கம்போல ஈடுபட முடியுமா... அந்த ஆர்வம் இயல்பாகவே குறைந்துவிடுமா...  கர்ப்பப்பையை நீக்கியவர்கள் தாம்பத்ய உறவுக்குத் தகுதியற்றவர்கள் என்று சொல்லப்படுவது உண்மையா? இதற்கு ஏதேனும் சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

நித்யா ராமச்சந்திரன்

முதலில் எந்தக் காரணத்துக்காக உங்களுக்கு உங்கள் மருத்துவர்  கரப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையைப் பரிந்துரைத்தார் என்பது தெரியவில்லை. இந்தச் சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருந்தது என்று பாருங்கள்.

நம்மூரில் பெண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில்  மிகப் பரவலானது ஹிஸ்ட்ரெக்டமி (hysterectomy) எனப்படும் கரப்பப்பை நீக்கம். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆபரேஷனுக்கு முன்பு உங்களுக்கு இல்லற வாழ்க்கையில் பிரச்னைகள் இல்லை என்றால், ஆபரேஷனுக்கு பிறகும் பிரச்னைகள் இருக்காது. அறுவை சிகிச்சை முடிந்து நான்கு முதல் ஆறு வாரங்களில் நீங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். இந்த அறுவை சிகிச்சைக்கு முன் உங்களுக்கு உறவின்போது வலியோ, ரத்தப்போக்கோ இருந்து, அதனால் தாம்பத்ய உறவையே நீங்கள் தவிர்த்திருந்தால், ஆபரேஷனுக்கு பிறகு இந்தப் பிரச்னைகள் எல்லாம் சரியாகும் வாய்ப்புகளும் அதிகம். 

உங்களுக்கு கர்ப்பப்பையை மட்டும் எடுக்கப் போகிறார்களா அல்லது அதனுடன் சேர்த்து ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் சேர்த்து எடுக்கப் போகிறார்களா என்பதும் இதில் முக்கியம். அப்படி ஒருவேளை சினைப்பைகளையும் நீக்குவதாக இருந்தால் அதன் விளைவாக அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவின்போது அசௌகர்யம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதற்காக பயப்படத் தேவையில்லை. 

கர்ப்பப்பை

கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நீக்கத்துக்குப் பிறகு பாலியல் தூண்டலுக்கு அவசியமான ஹார்மோன் சுரப்பு குறையும். இதன் விளைவாக வெஜைனாவில் ஏற்படும் வறட்சியின் காரணமாக தாம்பத்திய உறவு வலி மிகுந்ததாக மாறிவிடும். அதனால்  சில பெண்கள் செக்ஸ் உறவையே தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். வெஜைனல் லூப்ரிகன்ட்ஸ் என்ற பெயரில் மருத்துவரின் பரிந்துரை தேவைப்படாமலேயே மருந்துக் கடைகளில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வரலாம்.

எனவே, கர்ப்பப்பையை நீக்கியவர்கள், இல்லற வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்கள் என்றோ, அப்படியே உறவு வைத்துக்கொண்டாலும் அது முன்பு போல இருக்காது என்றோ நினைக்கத் தேவையில்லை.  இந்த விஷயத்தில் கணவரின் சப்போர்ட் மிக முக்கியம். அது இல்லாவிட்டால் இதுவே மிகப்பெரிய ஸ்ட்ரெஸ்ஸாக மாறிவிடும். எனவே மருத்துவரை அணுகி இந்த விஷயத்துக்கு ஆலோசனை பெறுவது சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...