Skip to main content

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுத்தாலே ஜலதோஷம்... தவிர்ப்பதுதான் ஒரே வழியா?

Doctor Vikatan: என் மகனுக்கு 15 வயதாகிறது.  அவனுக்கு உடல் சூடு அதிகம் என வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்வேன். முதல்நாள் இரவே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, மறுநாள் காலையில் குளிக்கச் சொல்கிறேன். ஆனால், எண்ணெய்க் குளியல் எடுத்த அடுத்த நாளே அவனுக்கு சளி பிடித்துக் கொள்கிறது. இதைத் தவிர்க்க என்ன வழி? எண்ணெய்க் குளியல் எடுக்க எது சரியான முறை?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

 ‘எண்ணெய்த் தேய்த்து குளித்தாலே சளி பிடித்துக் கொள்ளும் என்பதாலேயே எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதில்லை…’ என்று பலர் சொல்வதைக் கேட்கிறோம்.  உண்மையில், முறையாக எண்ணெய்  தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவ்வளவு சீக்கிரம் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் வராது என்பதே உண்மை.

உங்கள் மகனுக்கு எண்ணெய்க் குளியல் எடுப்பதால் சளி பிடிப்பதாக நீங்கள் நினைத்தால் சில விஷயங்களைப் பின்பற்றச் சொல்லுங்கள். முதல் நாள் இரவே தலை முழுவதும் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு உறங்கிவிடும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. அது மிகவும் தவறான விஷயம். இதன் காரணமாக உடலில் கபம் அதிகரித்து, சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முதல் வேலையாக உங்கள் மகனுக்கு இப்படிச் செய்வதை நிறுத்திப் பாருங்கள். அதிகாலை வேளையில் எண்ணெய்த் தேய்த்துக்கொண்டு அரை மணி நேர இடைவெளி விட்டுக் குளிப்பதே எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதற்கான சரியான வழிமுறை. அதிகாலையில் முடியவில்லை எனில் காலை ஆறு மணி வாக்கில் எண்ணெய்க் குளியலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கலாம். 

oil Bath

சளி பிடித்துக் கொள்ளும் என்று பயந்தால், சிறிது மிளகுத்தூளை உச்சந்தலையில் தடவிய பின் எண்ணெய்க் குளியல் எடுத்தால் கபம் அதிகரிக்காது. குளித்து முடித்து தலையைக் காய வைத்ததும், சிறிது மிளகைப் பொடியாக்கி மெல்லிய துணியில் வைத்து உச்சந்தலையில் தேய்த்தால் சளித் தொந்தரவு நெருங்காது. நல்லெண்ணெய்யில் சிறிது பூண்டு, மிளகு, சுக்கு, வெற்றிலை சேர்த்து மெலிதாகச் சூடேற்றி தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் கப நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை. தும்பைப் பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சிப் பயன்படுத்தினாலும் கபம் தலைதூக்காது. எண்ணெய் தேய்த்துக் குளித்த பின்பு, சாம்பிராணி புகைபோட்டும் தலை உலர்த்திக் கொள்ளலாம்.  

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் எண்ணெய்ப் பசை முழுமையாக நீங்க, சிகைக்காய் அல்லது அரப்புப் பொடி தேய்த்துக் குளிக்கலாம். கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேம்பு, கடுக்காய், நெல்லி வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப் பருப்பு சேர்ந்த குளியல் பொடி வகைகளை உடலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எண்ணெய்க் குளியலுக்கு ஷாம்பூ உபயோகிப்பதைத் தவிர்க்கவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...