Skip to main content

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுத்தாலே ஜலதோஷம்... தவிர்ப்பதுதான் ஒரே வழியா?

Doctor Vikatan: என் மகனுக்கு 15 வயதாகிறது.  அவனுக்கு உடல் சூடு அதிகம் என வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்வேன். முதல்நாள் இரவே தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, மறுநாள் காலையில் குளிக்கச் சொல்கிறேன். ஆனால், எண்ணெய்க் குளியல் எடுத்த அடுத்த நாளே அவனுக்கு சளி பிடித்துக் கொள்கிறது. இதைத் தவிர்க்க என்ன வழி? எண்ணெய்க் குளியல் எடுக்க எது சரியான முறை?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

 ‘எண்ணெய்த் தேய்த்து குளித்தாலே சளி பிடித்துக் கொள்ளும் என்பதாலேயே எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதில்லை…’ என்று பலர் சொல்வதைக் கேட்கிறோம்.  உண்மையில், முறையாக எண்ணெய்  தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவ்வளவு சீக்கிரம் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் வராது என்பதே உண்மை.

உங்கள் மகனுக்கு எண்ணெய்க் குளியல் எடுப்பதால் சளி பிடிப்பதாக நீங்கள் நினைத்தால் சில விஷயங்களைப் பின்பற்றச் சொல்லுங்கள். முதல் நாள் இரவே தலை முழுவதும் எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு உறங்கிவிடும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. அது மிகவும் தவறான விஷயம். இதன் காரணமாக உடலில் கபம் அதிகரித்து, சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முதல் வேலையாக உங்கள் மகனுக்கு இப்படிச் செய்வதை நிறுத்திப் பாருங்கள். அதிகாலை வேளையில் எண்ணெய்த் தேய்த்துக்கொண்டு அரை மணி நேர இடைவெளி விட்டுக் குளிப்பதே எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதற்கான சரியான வழிமுறை. அதிகாலையில் முடியவில்லை எனில் காலை ஆறு மணி வாக்கில் எண்ணெய்க் குளியலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கலாம். 

oil Bath

சளி பிடித்துக் கொள்ளும் என்று பயந்தால், சிறிது மிளகுத்தூளை உச்சந்தலையில் தடவிய பின் எண்ணெய்க் குளியல் எடுத்தால் கபம் அதிகரிக்காது. குளித்து முடித்து தலையைக் காய வைத்ததும், சிறிது மிளகைப் பொடியாக்கி மெல்லிய துணியில் வைத்து உச்சந்தலையில் தேய்த்தால் சளித் தொந்தரவு நெருங்காது. நல்லெண்ணெய்யில் சிறிது பூண்டு, மிளகு, சுக்கு, வெற்றிலை சேர்த்து மெலிதாகச் சூடேற்றி தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் கப நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை. தும்பைப் பூவை நல்லெண்ணெய்யில் காய்ச்சிப் பயன்படுத்தினாலும் கபம் தலைதூக்காது. எண்ணெய் தேய்த்துக் குளித்த பின்பு, சாம்பிராணி புகைபோட்டும் தலை உலர்த்திக் கொள்ளலாம்.  

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் எண்ணெய்ப் பசை முழுமையாக நீங்க, சிகைக்காய் அல்லது அரப்புப் பொடி தேய்த்துக் குளிக்கலாம். கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேம்பு, கடுக்காய், நெல்லி வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப் பருப்பு சேர்ந்த குளியல் பொடி வகைகளை உடலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எண்ணெய்க் குளியலுக்கு ஷாம்பூ உபயோகிப்பதைத் தவிர்க்கவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...