Skip to main content

Doctor Vikatan: மீன் முட்டைகளை எல்லோரும் சாப்பிடலாமா... அலர்ஜியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:  அசைவம் விற்கும் கடைகள் சிலவற்றில் மீன் முட்டைகள்  என்று விற்கிறார்களே, அவை ஆரோக்கியமானவையா? எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? மீன் முட்டைகள், சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி 

ரேச்சல் தீப்தி

அடர்த்தியான ஊட்டச்சத்துகளைக் கொண்டது என்ற வகையில் மீன் முட்டை மிகவும் ஆரோக்கியமானது.  மீன் முட்டைகளில் அதிக அளவு கொலஸ்ட்ராலும், சோடியமும் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். 

மீன் முட்டைகளில் உள்ள சத்துகள்

மீன் முட்டைகளை ஆங்கிலத்தில் 'Roe' என்று சொல்வார்கள்.  இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மூளையின் ஆரோக்கியத்துக்கும், இதயத்தின் செயல்பாட்டுக்கும் மிக முக்கியம்.  தவிர, இந்த அமிலமானது, டிரைகிளிசரைடு எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தும் குறையும். உடலின் வீக்கத்தையும் குறைக்கவல்லது. புரதச்சத்து நிறைந்தவை என்பதால், மீன் முட்டைகள் தசைகளைப் பழுதுபார்த்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவும். 

மீன் முட்டைகளில் வைட்டமின் டி சத்தும் அதிகமுள்ளது. அது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் உதவக்கூடியது. இவற்றில் உள்ள வைட்டமின் பி 12, நரம்பு மண்டலச் செயல்பாட்டை சீராக வைத்திருப்பதுடன், ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவக்கூடியது. மீன் முட்டைகளில் உள்ள செலீனியம் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்,  செல்கள் பழுதடைவதைத் தடுக்கக்கூடியவை.

கடல் உணவுகள்

100 கிராம் மீன் முட்டைகளில் 143 கிலோ கலோரிகள், 22 கிராம் புரதச்சத்து, 221 மில்லிகிராம் பொட்டாசியம், 91 கிராம் சோடியம், 6 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் கார்போஹைட்ரேட், 374 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் ஆகியவை இருக்கும். வைட்டமின் டி, பி 12, சி, பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்றவையும் இதில் உண்டு. இத்தனை சத்துகள் நிறைந்த மீன் முட்டைகளில் லெட், காட்மியம், மெர்குரி, ஆர்செனிக் போன்ற மாசுகளும் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தலாம்...

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மீன் முட்டை உண்ணும் வழக்கம் அதிகமிருப்பதைப் பார்க்கலாம்.  அவற்றை வறுத்து தனியாகவோ, சாதத்துடன் சேர்த்தோ சாப்பிடுவார்கள். மீன் முட்டைகள் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். கடல் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்துவது போல, மீன் முட்டைகளும் சிலருக்கு அஜீரணக் கோளாறுகளையும், உடலில் வீக்கத்தையும், அனாபிலாக்சிஸ் (Anaphylaxis ) எனப்படும் தீவிர ஒவ்வாமை பாதிப்பையும் ஏற்படுத்தலாம். எனவே, மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஒவ்வாமை இருப்பவர்கள், மீன் முட்டைகள் சாப்பிடுவதிலும் கவனமாக இருக்க வேண்டும். 

அலர்ஜி

ஆலோசனை, அளவு அவசியம்..

ஒரு நாளைக்கு 30 முதல் 50 கிராம் அளவு மீன் முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். இது அந்த நபரின் ஆரோக்கியம், செரிமான திறன் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம். அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அளவு அதிகரித்து வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனையின்றி மீன் முட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.  மீன்களோடு சேர்த்து மீன் முட்டைகளையும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்கும்போது ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரதச்சத்து, வைட்டமின்கள் என எல்லாமே போதுமான அளவு கிடைக்கும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...