Skip to main content

Doctor Vikatan: மீன் முட்டைகளை எல்லோரும் சாப்பிடலாமா... அலர்ஜியை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:  அசைவம் விற்கும் கடைகள் சிலவற்றில் மீன் முட்டைகள்  என்று விற்கிறார்களே, அவை ஆரோக்கியமானவையா? எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? மீன் முட்டைகள், சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி 

ரேச்சல் தீப்தி

அடர்த்தியான ஊட்டச்சத்துகளைக் கொண்டது என்ற வகையில் மீன் முட்டை மிகவும் ஆரோக்கியமானது.  மீன் முட்டைகளில் அதிக அளவு கொலஸ்ட்ராலும், சோடியமும் இருப்பதால், அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். 

மீன் முட்டைகளில் உள்ள சத்துகள்

மீன் முட்டைகளை ஆங்கிலத்தில் 'Roe' என்று சொல்வார்கள்.  இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கும். ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மூளையின் ஆரோக்கியத்துக்கும், இதயத்தின் செயல்பாட்டுக்கும் மிக முக்கியம்.  தவிர, இந்த அமிலமானது, டிரைகிளிசரைடு எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தும் குறையும். உடலின் வீக்கத்தையும் குறைக்கவல்லது. புரதச்சத்து நிறைந்தவை என்பதால், மீன் முட்டைகள் தசைகளைப் பழுதுபார்த்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவும். 

மீன் முட்டைகளில் வைட்டமின் டி சத்தும் அதிகமுள்ளது. அது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் உதவக்கூடியது. இவற்றில் உள்ள வைட்டமின் பி 12, நரம்பு மண்டலச் செயல்பாட்டை சீராக வைத்திருப்பதுடன், ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவக்கூடியது. மீன் முட்டைகளில் உள்ள செலீனியம் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்,  செல்கள் பழுதடைவதைத் தடுக்கக்கூடியவை.

கடல் உணவுகள்

100 கிராம் மீன் முட்டைகளில் 143 கிலோ கலோரிகள், 22 கிராம் புரதச்சத்து, 221 மில்லிகிராம் பொட்டாசியம், 91 கிராம் சோடியம், 6 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் கார்போஹைட்ரேட், 374 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் ஆகியவை இருக்கும். வைட்டமின் டி, பி 12, சி, பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் போன்றவையும் இதில் உண்டு. இத்தனை சத்துகள் நிறைந்த மீன் முட்டைகளில் லெட், காட்மியம், மெர்குரி, ஆர்செனிக் போன்ற மாசுகளும் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தலாம்...

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மீன் முட்டை உண்ணும் வழக்கம் அதிகமிருப்பதைப் பார்க்கலாம்.  அவற்றை வறுத்து தனியாகவோ, சாதத்துடன் சேர்த்தோ சாப்பிடுவார்கள். மீன் முட்டைகள் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். கடல் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்துவது போல, மீன் முட்டைகளும் சிலருக்கு அஜீரணக் கோளாறுகளையும், உடலில் வீக்கத்தையும், அனாபிலாக்சிஸ் (Anaphylaxis ) எனப்படும் தீவிர ஒவ்வாமை பாதிப்பையும் ஏற்படுத்தலாம். எனவே, மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஒவ்வாமை இருப்பவர்கள், மீன் முட்டைகள் சாப்பிடுவதிலும் கவனமாக இருக்க வேண்டும். 

அலர்ஜி

ஆலோசனை, அளவு அவசியம்..

ஒரு நாளைக்கு 30 முதல் 50 கிராம் அளவு மீன் முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். இது அந்த நபரின் ஆரோக்கியம், செரிமான திறன் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம். அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அளவு அதிகரித்து வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனையின்றி மீன் முட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.  மீன்களோடு சேர்த்து மீன் முட்டைகளையும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி எடுக்கும்போது ஒமேகா 3 கொழுப்பு அமிலம், புரதச்சத்து, வைட்டமின்கள் என எல்லாமே போதுமான அளவு கிடைக்கும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...