Skip to main content

Doctor Vikatan: `XEC' இதுவரை பார்த்தது டிரெய்லர், மெயின் பிக்சர் இனிமே தான்... மீண்டும் கோவிட்?

Doctor Vikatan: கோவிட் தொற்று முடிந்துவிட்டதாக கடந்த சில வருடங்களாகத்தான் ஓரளவு நிம்மதியாக இருக்கிறோம். இந்நிலையில் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வேரியன்ட் பரவ ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதுவரை பார்த்ததிலேயே இந்த உருமாற்றம் சற்றே தீவிரமாக இருக்கும் என்றும் சொல்கிறார்களே... அது உண்மையா... ஏற்கெனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் இந்தத் தொற்றுக்கு எதிராகப் போராட உதவாதா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

நீங்கள் கேள்விப்பட்ட தகவல் நூறு சதவிகிதம் உண்மைதான்.  கோவிட் 19 தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே, அதன் உருமாற்றங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவற்றில் ஒமிக்ரான் (Omicron) என்ற உருமாற்றம் மிக முக்கியமானதாக இருந்ததையும் அறிவோம்.

கோவிட் தொற்றின் இரண்டாவது அலை முடிந்ததும் ஒமிக்ரான் பரவல் ஆரம்பித்தது. SARS-CoV-2 என்பதன்  உருமாற்றம்தான்  ஒமிக்ரான். அதற்கடுத்து பல உருமாற்றங்கள் வந்தன. ஆனால், அவை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. சில உருமாற்றங்கள் லேசான அறிகுறிகளைக் காட்டி, தானாக மறைந்தன. 'ஃப்ளு லைக் இல்னெஸ்' (Influenza-like illness) என்று சொல்லக்கூடிய லேசான இருமல், சளி, காய்ச்சலுடன் அவை நம்மைக் கடந்து போயின.

Omicron

ஆனால், இப்போது பரவத் தொடங்கியிருப்பது XEC எனும் உருமாற்றம்.  சார்ஸ் கோவிட்-2 வேரியன்ட்டின் இந்தப் பரவல்,  முக்கியமான உருமாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இதன் பரவல் மிகவும் தீவிரமாக இருப்பது தெரிகிறது. அதாவது ஏற்கெனவே கோவிட் தொற்று தடுப்புக்காக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் இந்தப் பரவல் தீவிரமாகத் தாக்குவதைப் பார்க்க முடிகிறது.

இந்தப் புதிய வகை வேரியன்ட்டானது அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியிருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்தியாவிலும் தொற்றுப் பரவலுக்கான அறிகுறிகளைக் கேள்விப்படுகிறோம்.  இந்தத் தொற்றானது நடுத்தர வயதினரையே அதிகம் தாக்குகிறது. மிகவும் கடுமையான தலைவலி, தீவிரமான தொண்டைவலி, அதிக காய்ச்சல், கூடவே இருமல், சளி, அதீத சோர்வு, உடல் வலி, தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம்... இன்னும் சிலருக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு இந்தத் தொற்றானது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தெரிய வந்திருக்கிறது.

கொரோனா சிறப்பு வார்டு

இதே நிலை நீடித்தால் இந்தப் பரவல் அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதித்து மீண்டும் ஓர் அவசர நிலையை ஏற்படுத்தலாமோ என்பதுதான் இப்போதைய அச்சமாக உள்ளது. அப்படி மீண்டும் ஒரு மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால் அதற்கு நம்முடைய சுகாதார கட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும். தற்சமயம் 25-க்கும் அதிகமான நாடுகளில் இதன் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோரும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்படும் ரிஸ்க் அதிகமாக இருக்கிறது. 

கோவிட் தொற்றை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருகிற மருத்துவர் என்ற முறையில் மக்களுக்கு சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன்.   மாஸ்க் அணிவதையும், ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்துவதையும் மக்கள் உடனடியாகத் தொடங்க, தொடர வேண்டும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவதும்,  தனிமைப்படுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியம். அறிகுறிகள் தென்படுவோரிடமிருந்து விலகி இருக்க வேண்டியதும் அவசியம்.

ஒருவேளை இந்தப் பரவல் மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தாமலும் போகலாம். ஆனால், இதன் பரவலையும் அதன் தீவிரத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது முந்தைய வேரியன்ட்டுகளை விட மிகவும் மோசமானதாகவே தெரிகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தெளிவான விளக்கங்களைக் கொடுக்க வேண்டும்.

மாஸ்க் - மாதிரிப்படம்

இதற்கு முன்பு வந்த தொற்றுப் பரவல்களில்  'சார்ஸ்' (Severe acute respiratory syndrome (SARS)  எனப்படும் தீவிர சுவாச பாதிப்பை நாம் பார்க்கவில்லை. ஆனால், XEC உருமாற்றம், தீவிர சுவாச பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. அதுதான் இதில் மோசமான விஷயமே. இதன் பரவலும் தீவிரமும் முந்தைய வேரியன்ட்டுகளைவிடவும் மோசமாக இருப்பதால், இப்போதே நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. வருமுன் காப்போம் என்பதை இந்த முறை மிக மிக கவனமாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...