Skip to main content

Doctor Vikatan: சிசேரியனுக்கு பிறகு மலச்சிக்கல்... மூலநோயாக (Piles) மாற வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகளும் சிசேரியனில் பிறந்தனர். எனக்கு இயல்பிலேயே மலச்சிக்கல் பிரச்னை உண்டு. பிரசவத்துக்குப் பிறகு அந்தப் பிரச்னை தீவிரமாகிவிட்டது.  இப்போது பைல்ஸ் (Piles) பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. இதற்கு சர்ஜரிதான் ஒரே தீர்வா... சர்ஜரி செய்தாலும் மீண்டும் அந்தப் பிரச்னை வரும் என்கிறார்களே... அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பெருங்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினக் தாஸ்குப்தா

பெருங்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினக் தாஸ்குப்தா

இது நீங்கள் மட்டும் சந்திக்கிற பிரச்னையல்ல... பல பெண்களும் எதிர்கொள்கிற பிரச்னையாக இருக்கிறது. மலச்சிக்கல்தான் இதற்கு அடிப்படை காரணம்.

பெரும்பாலும் இது ஃபிஷர் (anal fissure) என்று சொல்லக்கூடிய ஆசனவாய் வெடிப்பாகவே இருக்கும். மலச்சிக்கல் பாதிப்பின் காரணமாக ஆசனவாய் பகுதியில் விரிசல் விட்டதுபோல உணர்வார்கள். அதனால் மலம் கழிப்பதிலும் வேதனையை உணர்வார்கள்.

இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மலம் கழித்த பிறகு 3- 4 மணி நேரம் வரைகூட வலி இருக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. தாமதித்தால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருவேளை இது 'ஃபிஷர்' பாதிப்பாக இருந்து, அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், ஆயின்மென்ட், க்ரீம் போன்றவற்றின் உதவியுடன் இதிலிருந்து மீளலாம்.

மலச்சிக்கல்

பலரும் ஆரம்பத்தில் கவனிக்காமல் அலட்சியப்படுத்திவிட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருகிறார்கள். அப்படியே அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றாலும் அதனால் எந்தப் பிரச்னையும் வராது. சரியான மருத்துவரிடம், முறையாகச் செய்துகொண்டால் அறுவை சிகிச்சை மூலம் உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

முதலில் நீங்கள் மருத்துவரைச் சந்தித்து உங்களுக்கு இருப்பது ஆசனவாய் வெடிப்பு பிரச்னையா அல்லது பைல்ஸ் (Piles) எனப்படும் மூலநோயா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். ஆபரேஷன் செய்தாலும் பிரச்னை மீண்டும் வருமோ என்ற பயமெல்லாம் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...