Skip to main content

Doctor Vikatan: சிசேரியனுக்கு பிறகு மலச்சிக்கல்... மூலநோயாக (Piles) மாற வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகளும் சிசேரியனில் பிறந்தனர். எனக்கு இயல்பிலேயே மலச்சிக்கல் பிரச்னை உண்டு. பிரசவத்துக்குப் பிறகு அந்தப் பிரச்னை தீவிரமாகிவிட்டது.  இப்போது பைல்ஸ் (Piles) பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. இதற்கு சர்ஜரிதான் ஒரே தீர்வா... சர்ஜரி செய்தாலும் மீண்டும் அந்தப் பிரச்னை வரும் என்கிறார்களே... அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பெருங்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினக் தாஸ்குப்தா

பெருங்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினக் தாஸ்குப்தா

இது நீங்கள் மட்டும் சந்திக்கிற பிரச்னையல்ல... பல பெண்களும் எதிர்கொள்கிற பிரச்னையாக இருக்கிறது. மலச்சிக்கல்தான் இதற்கு அடிப்படை காரணம்.

பெரும்பாலும் இது ஃபிஷர் (anal fissure) என்று சொல்லக்கூடிய ஆசனவாய் வெடிப்பாகவே இருக்கும். மலச்சிக்கல் பாதிப்பின் காரணமாக ஆசனவாய் பகுதியில் விரிசல் விட்டதுபோல உணர்வார்கள். அதனால் மலம் கழிப்பதிலும் வேதனையை உணர்வார்கள்.

இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மலம் கழித்த பிறகு 3- 4 மணி நேரம் வரைகூட வலி இருக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. தாமதித்தால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருவேளை இது 'ஃபிஷர்' பாதிப்பாக இருந்து, அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், ஆயின்மென்ட், க்ரீம் போன்றவற்றின் உதவியுடன் இதிலிருந்து மீளலாம்.

மலச்சிக்கல்

பலரும் ஆரம்பத்தில் கவனிக்காமல் அலட்சியப்படுத்திவிட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருகிறார்கள். அப்படியே அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றாலும் அதனால் எந்தப் பிரச்னையும் வராது. சரியான மருத்துவரிடம், முறையாகச் செய்துகொண்டால் அறுவை சிகிச்சை மூலம் உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

முதலில் நீங்கள் மருத்துவரைச் சந்தித்து உங்களுக்கு இருப்பது ஆசனவாய் வெடிப்பு பிரச்னையா அல்லது பைல்ஸ் (Piles) எனப்படும் மூலநோயா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். ஆபரேஷன் செய்தாலும் பிரச்னை மீண்டும் வருமோ என்ற பயமெல்லாம் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...