Skip to main content

Doctor Vikatan: சிசேரியனுக்கு பிறகு மலச்சிக்கல்... மூலநோயாக (Piles) மாற வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகளும் சிசேரியனில் பிறந்தனர். எனக்கு இயல்பிலேயே மலச்சிக்கல் பிரச்னை உண்டு. பிரசவத்துக்குப் பிறகு அந்தப் பிரச்னை தீவிரமாகிவிட்டது.  இப்போது பைல்ஸ் (Piles) பிரச்னை ஆரம்பித்திருக்கிறது. இதற்கு சர்ஜரிதான் ஒரே தீர்வா... சர்ஜரி செய்தாலும் மீண்டும் அந்தப் பிரச்னை வரும் என்கிறார்களே... அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பெருங்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினக் தாஸ்குப்தா

பெருங்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினக் தாஸ்குப்தா

இது நீங்கள் மட்டும் சந்திக்கிற பிரச்னையல்ல... பல பெண்களும் எதிர்கொள்கிற பிரச்னையாக இருக்கிறது. மலச்சிக்கல்தான் இதற்கு அடிப்படை காரணம்.

பெரும்பாலும் இது ஃபிஷர் (anal fissure) என்று சொல்லக்கூடிய ஆசனவாய் வெடிப்பாகவே இருக்கும். மலச்சிக்கல் பாதிப்பின் காரணமாக ஆசனவாய் பகுதியில் விரிசல் விட்டதுபோல உணர்வார்கள். அதனால் மலம் கழிப்பதிலும் வேதனையை உணர்வார்கள்.

இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மலம் கழித்த பிறகு 3- 4 மணி நேரம் வரைகூட வலி இருக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. தாமதித்தால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருவேளை இது 'ஃபிஷர்' பாதிப்பாக இருந்து, அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், ஆயின்மென்ட், க்ரீம் போன்றவற்றின் உதவியுடன் இதிலிருந்து மீளலாம்.

மலச்சிக்கல்

பலரும் ஆரம்பத்தில் கவனிக்காமல் அலட்சியப்படுத்திவிட்டு தாமதமாக சிகிச்சைக்கு வருகிறார்கள். அப்படியே அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றாலும் அதனால் எந்தப் பிரச்னையும் வராது. சரியான மருத்துவரிடம், முறையாகச் செய்துகொண்டால் அறுவை சிகிச்சை மூலம் உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

முதலில் நீங்கள் மருத்துவரைச் சந்தித்து உங்களுக்கு இருப்பது ஆசனவாய் வெடிப்பு பிரச்னையா அல்லது பைல்ஸ் (Piles) எனப்படும் மூலநோயா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார். ஆபரேஷன் செய்தாலும் பிரச்னை மீண்டும் வருமோ என்ற பயமெல்லாம் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...